என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 31 டிசம்பர், 2015

சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்னூட்டப் போட்டி 2015





  

ஊட்டமளிக்கும்
பின்னூட்டங்கள்
Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html
போட்டியில் 
100% வெற்றிபெற்ற
சாதனையாளர்களின் 
ஒட்டுமொத்த அணிவகுப்பு







 







 சாதனையாளர் விருது 
திருமதி.
 சிவகாமி   
அவர்கள்
 
வலைத்தளம்:
பூந்தளிர்-3


VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு 
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/3.html





 











மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html




  










 சாதனையாளர் விருது 
முனைவர் திரு.
 பழனி கந்தசாமி ஐயா   
அவர்கள்
வலைத்தளம்: 
மன அலைகள்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன் 
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_13.html





மேலே காட்சியளிக்கும் மூன்று வெற்றியாளர்களுமே
கோவை மாநகரிலிருந்து இந்தப்போட்டியில் 
கலந்துகொண்டு பின்னூட்டமிட்டவர்கள் என்பது
மேலும் ஓர் ஆச்சர்யமாகவே உள்ளது.


  






 







 சாதனையாளர் விருது 
திருமதி.

 ஜெயந்தி ரமணி   

அவர்கள்
வலைத்தளங்கள்:
(1) மனம் (மணம்) வீசும் (2) மணம் (மனம்) வீசும் (3) ஆன்மீக மணம் வீசும் 

VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 

முதல் 750 பதிவுகளுக்கும்

  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 

Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !

அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு அண்ணா
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_19.html





   








 சாதனையாளர் விருது 
செல்வி:
 MEHRUN NIZA   
அவர்கள்

வலைத்தளம்: வசந்தம்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள குருஜி
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }



மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html
http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html







 







 சாதனையாளர் விருது 
திரு.
 ஸ்ரீவத்ஸன்   
அவர்கள்
வலைத்தளம்: 
 சரணாகதி    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }



மேலும் அதிக விபரங்களுக்கு















 சாதனையாளர் விருது 
திரு. 
 ரவிஜி ரவி  
அவர்கள்
வலைத்தளம்: 
 மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }



மேலும் அதிக விபரங்களுக்கு














 சாதனையாளர் விருது 
திரு. 
 E.S. SESHADRI  
அவர்கள்
வலைத்தளம்: 
 காரஞ்சன் (சேஷ்)    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.
அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }



மேலும் அதிக விபரங்களுக்கு





   


   


பரிசு வென்ற 
சாதனையாளர்கள்
அனைவருக்கும் நம் 
மனம் நிறைந்த
பாராட்டுகள் +
அன்பான இனிய 
நல்வாழ்த்துகள்.


தங்களின் வங்கிக்கணக்கு, அஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை, நான் கேட்டதும் உடனடியாக எனக்குக் கொடுத்து என்னுடன் ஒத்துழைப்பு அளித்துள்ள வெற்றியாளர்கள் அனைவருக்கும், போட்டியின் இறுதித்தேதி வரை காத்திருக்காமல், பரிசுப் பணத்தை என்னால் உடனுக்குடன் முன்கூட்டியே, அவரவர்களின் விருப்பப்படியே (According to their options) வழங்க முடிந்துள்ளதில், எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

இதுபோல நான் கேட்ட தகவல்களை இன்றுவரை எனக்கு அளிக்காமல், இழுத்தடித்துக் கடுக்காய் கொடுத்துவரும் இரண்டு சண்டிக்குதிரைகளும்  இதில் உள்ளனர்.  என் மீதுள்ள ஒருவித ஆத்மார்த்தமான பிரியத்தினால், இவர்கள் இருவரும் மட்டும் நேரில் என்னை சந்திக்கும்போது பரிசினை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள். 

அவர்கள் இருவரின் தற்போதைய இருப்பிடத்தை எனக்குத் தெரிவித்தாலாவது, நானே விமானத்தில் ஏறி, நேரில் சென்று அவர்களை சந்தித்து பரிசுப்பணத்தையும் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். :) 


எப்போதுதான் என்னை நேரில் சந்தித்து, இவர்கள் தங்களின் பரிசுப்பணத்தை வாங்கிச் செல்வார்களோ ..... எனக்குத் தெரியவில்லை + புரியவில்லை. ஒரே கவலையாக உள்ளது. இவர்களின் இந்தப் படுத்தலால், படுத்தால் எனக்குத் தூக்கமும் வருவதில்லை. கம்பன் சொல்லும் ’கடன்பட்டான் நெஞ்சம்போல் கலங்கிப்போய் உள்ளேன்’, இன்று நானும். :)



போட்டியில் கலந்துகொள்ள முயற்சித்த
மற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த இனிய நன்றிகள்.




பதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய
ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்

Wishing you all for a 
Very Very Happy 
New Year 2 0 1 6 !



இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள் !!



 


இந்த என் புதுமைப் போட்டியின் முழு வெற்றிக்கு, 
வழக்கம்போல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, 
பல்வேறு உதவிகள் செய்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



போட்டிக்காகவோ, பரிசுக்காகவோ இல்லாமல் 
நான் நேற்றுவரை வெளியிட்டுள்ள 
என் அனைத்துப் பதிவுகளிலும் (805)
தங்களின் மிக அருமையான 
பின்னூட்டங்களை பதிவு செய்துள்ள 
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 
மற்றும் 
திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள் 
ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த இனிய 
கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


2014 + 2015 போல் இந்த 2016 புத்தாண்டுக்கும், என் இனிய நண்பரும் 
திருச்சியின் பிரபல பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனக்கு NEW DIARY FOR 2016 அன்பளிப்பாக கொடுத்துள்ளார்கள்.
அவருக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

 




நான் இந்தப் பதிவுலகுக்குள் 
முதன் முதலாக நுழைந்த நாள் : 
02.01.2011 



On 01.01.2016 
 ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

2011 to 2015 ஐந்து ஆண்டுகளில்
என்னால் இதுவரை வெளியிட இயன்றுள்ள 
பதிவுகளின் மொத்த எண்ணிக்கை: 
 806 

எனக்கு இதுவரை பின்னூட்டங்கள் மூலம் 
ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள 
அன்புள்ளங்கள் அனைவருக்கும் 
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 



POSITION AS ON 30.12.2015

TOTAL NO. OF COMMENTS 
so far received: 
36,894


BLOG FOLLOWERS : 
386

BLOG TOTAL PAGEVIEWS : 
3,67,855



GOOGLE+ FOLLOWERS : 
482


VIEWERS IN GOOGLE+ :  


40,86,084 






 









எனக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள BLOGGER PROBLEMS SOLVE ஆனபிறகு
சமீபத்திய என் பதிவுகளில் உள்ள தங்களின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்
நான் பதில் அளிக்க முயற்சிப்பேன்.

என்றும் அன்புடன் தங்கள்
 
[ வை. கோபாலகிருஷ்ணன் ]

245 கருத்துகள்:

  1. பதிவர்களைப் பரிசு மழையில் குளிப்பாட்டிய திரு வைகோ அவர்கள் நீடு வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி December 31, 2015 at 4:08 AM

      //பதிவர்களைப் பரிசு மழையில் குளிப்பாட்டிய திரு வைகோ அவர்கள் நீடு வாழ்க. //

      வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் பாராட்டு மழையில் நானும் குளித்து மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  2. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman December 31, 2015 at 5:41 AM

      //சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் //

      வாங்கோ அண்ணா, வணக்கம் அண்ணா. ஓரிரு வார்த்தைகளுக்குள் வாழ்த்தி நீங்களும் இங்கு ஓர் சாதனை புரிந்து விட்டீர்கள். எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அண்ணா.

      தங்களின் அன்புத்தம்பி கோபு

      நீக்கு
  3. பரிசுபெற்ற அனைத்து நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள் !! .
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு சார் .புத்தாண்டில் உங்கள் ட்ரேட் மார்க் சிறுகதைகள் வெளி வரணும் ப்ளாகில் என்பது எனது அன்பு வேண்டுகோள்
    ஆறாவது அகவையில் அடி எடுத்து வைக்கும் வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள் .Happy 6th Birthday to your Blog :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin December 31, 2015 at 6:23 AM

      வாங்கோ சகோதரி, வணக்கம்.

      //பரிசுபெற்ற அனைத்து நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள் !! .//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு சார்.//

      புத்தாண்டில் கோபு அண்ணாவுக்கு கோபு சார் பிரமோஷனா? சரி, ஓக்கே.

      //புத்தாண்டில் உங்கள் ட்ரேட் மார்க் சிறுகதைகள் வெளி வரணும் ப்ளாகில் என்பது எனது அன்பு வேண்டுகோள்.//

      தங்களின் வேண்டுகோள் ஓர் தூண்டுகோல் போலக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. :)

      //ஆறாவது அகவையில் அடி எடுத்து வைக்கும் வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள் :)

      Happy 6th Birthday :) //

      ஐந்தாம் அகவையை முடித்துள்ளதாக மட்டுமே நான் சொல்லியுள்ளேன். நீங்கள் உங்களின் எதிர்பார்ப்பினை இங்கும் சொல்லி அசத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      என்றும் அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  4. பரிசு பெற்றவர்களைப் பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பு அருமை!ஐந்தாண்டுகள் வலையுலகில் நல்லாட்சி புரிந்துள்ளீர்கள்! புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. December 31, 2015 at 8:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்றவர்களைப் பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பு அருமை! ஐந்தாண்டுகள் வலையுலகில் நல்லாட்சி புரிந்துள்ளீர்கள்! //

      ஐந்து ஆண்டு நல்லாட்சி !! மிகவும் அருமையாகத்தான் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா! //

      மிகவும் சந்தோஷம், நன்றி. பார்ப்போம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  5. இனியஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இனிய பொங்கல் திருநாள்நல்வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:24 AM

      வாங்கோ மேடம், வாங்கோ, வணக்கம்.

      //இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
      இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!//

      தங்களின் இனிமையான, ருசியான, தித்திக்கும் பொங்கல் போன்ற நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  6. போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி
    பரிகள் அளித்த சாதனையாளருக்கு
    இனிய நன்றிகள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:26 AM

      //போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி பரிகள் அளித்த சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

      // போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி...... //

      இதுவரை OK ... OK ...

      //ப ரி க ள் அளித்த//

      போட்டியில் கலந்துகொண்ட பந்தயக்குதிரைகளுக்கு நான் அளித்ததும் பரிகளா .... குதிரைகளா ?

      { பரி = குதிரை அல்லவா! }

      அதில் இருவரை மட்டும் நான் சண்டிக்குதிரைகள் என்று சொல்லியிருந்ததால், ஒருவேளை அதே சிந்தனையில் தாங்களும் இருந்து, ‘பரிசுகள் அளித்த’ என்பதைப் ’பரிகள் அளித்த’ என குதிரை வேகத்தில் எழுதியிருப்பீர்களோ என்னவோ !! :)

      //சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

      உண்மையில் இந்தப்போட்டியில் சாதனையாளர்கள் தாங்கள் எட்டுப் பேர்கள் மட்டும் அல்லவா. உங்கள் அனைவரையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது, இந்த மிகச் சாதாரணமானவனின் பெரும் பாக்யமே.

      என்னையும் இங்கு தாங்கள் ஒரு சாதனையாளர் ஆக்கியுள்ளதற்கும், தங்களின் இனிய நன்றிக்கும், என் இதயம் கனிந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  7. அனைத்து சாதனையாளர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam December 31, 2015 at 8:50 AM

      //அனைத்து சாதனையாளர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். //

      வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  8. ஸார் மீ த ஃபர்ஸ்டா.? மிகச்சிறப்பான பதிவு. தனித் தனியாக சாதனையாளர்களின் பதிவுகள் படித்து ரசித்திருந்தாலும் ஒட்டு மொத்தமாக அனைத்து சாதனையாளர்களையும் இங்கு காண்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே அட்டகாசமா இருக்கு. முதல் படம் எய்ம் பார்த்து இலக்கை வீழ்த்துவது அடுத்து துள்ளி ஓடும் மான்கள் என்று ஒவ்வொன்றையும் விவரித்துக்கொண்டே போகலாம்தான் பதிவே மிகப் பெரியது. என் பின்னூட்டம் அதைவிட பெரிதாகிவிடும். ஒவ்வொரு திறமை சாலிகளையும் தேடி கண்டு பிடித்து பாராட்டி பரிசுகள் விருதுகள் வழங்கி எவ்வளவு சந்தோஷப்படுத்தி இருக்கீங்க. எல்லாவற்றிலுமே மிகப் பெரிய சந்தோஷம் எது என்றால் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான்னு சொல்வார்கள். அதை நீங்க தாராளமாக செய்து வருகிறீர்கள். மற்றவர்களிடம் இருக்கும் எழுத்து திறமையை ஊக்கு வித்து அவர்கள் மீண்டும் எழுத வரவேண்டும் என்றும் சொல்லி இருந்தீர்கள். எழுத்து திறமை எல்லோருக்குமே கைவந்து விடாது. அது ரீு ஒரு வரம். தங்களிடம் அந்த திறமை ஏராளமாக நிறம்பி இருக்கு. அடிக்கடி பதிவு போட முடியலைனாலும் மாதம் ஒரு பதிவாவது போட ணும். ஹேப்பி நியூ இயர் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 31, 2015 at 9:59 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸார் மீ த ஃபர்ஸ்டா.?//

      எண்ணிக்கையில் மட்டுமே நீங்க எட்டு. ஆனால் விரிவாக விளக்கமாக எழுதியிருப்பதில் நீங்களே வெரி ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ! :) உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

      //மிகச்சிறப்பான பதிவு. தனித் தனியாக சாதனையாளர்களின் பதிவுகள் படித்து ரசித்திருந்தாலும் ஒட்டு மொத்தமாக அனைத்து சாதனையாளர்களையும் இங்கு காண்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே அட்டகாசமா இருக்கு. முதல் படம் எய்ம் பார்த்து இலக்கை வீழ்த்துவது அடுத்து துள்ளி ஓடும் மான்கள் என்று ஒவ்வொன்றையும் விவரித்துக்கொண்டே போகலாம்தான். பதிவே மிகப் பெரியது. என் பின்னூட்டம் அதைவிட பெரிதாகிவிடும்.//

      அதனால் என்ன? விரிவான அழகான மிகப்பெரிய மோதமுழங்க இருக்கும் சைஸ்தான் எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

      //ஒவ்வொரு திறமை சாலிகளையும் தேடி கண்டு பிடித்து பாராட்டி பரிசுகள் விருதுகள் வழங்கி எவ்வளவு சந்தோஷப்படுத்தி இருக்கீங்க. எல்லாவற்றிலுமே மிகப் பெரிய சந்தோஷம் எது என்றால் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான்னு சொல்வார்கள். அதை நீங்க தாராளமாக செய்து வருகிறீர்கள்.//

      தாங்கள் சொல்லி, இந்த உண்மையை நான் இப்போது இங்கு கேட்பதும், எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாகத்தான் உள்ளது. :)

      //மற்றவர்களிடம் இருக்கும் எழுத்து திறமையை ஊக்கு வித்து அவர்கள் மீண்டும் எழுத வரவேண்டும் என்றும் சொல்லி இருந்தீர்கள். எழுத்து திறமை எல்லோருக்குமே கைவந்து விடாது. அது ஒரு வரம். தங்களிடம் அந்த திறமை ஏராளமாக நிறம்பி இருக்கு. அடிக்கடி பதிவு போட முடியலைனாலும் மாதம் ஒரு பதிவாவது போடணும்.//

      தங்களின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. முயற்சிக்கிறேன்.

      //ஹேப்பி நியூ இயர் நல் வாழ்த்துகள். //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  9. அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும். பரிசு கொடுத்து மழை பொழிந்த வள்ளல், எல்லோரையும் ஊக்குவிக்கும் தங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் சார்!

    அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      December 31, 2015 at 10:59 AM

      //அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும். பரிசு கொடுத்து மழை பொழிந்த வள்ளல், எல்லோரையும் ஊக்குவிக்கும் தங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் சார்!

      அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்! //

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், வள்ளல் போல வாரி வழங்கியுள்ள அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

      அன்புடன் VGK

      நீக்கு
  10. தங்களின் நல்ல மனதிற்கு ஒருகுறையும் இல்லை!..

    அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ December 31, 2015 at 11:27 AM

      //தங்களின் நல்ல மனதிற்கு ஒருகுறையும் இல்லை!..
      அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்!.. //

      வாங்கோ, பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  11. அப்பாடா எவ்வளவு பெரிய பதிவு. பதிவே ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு போகுதே. அப்போ பின்னூட்டங்களும் இரண்டு கிலோமீட்டர தாண்ணிடும் போல இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் December 31, 2015 at 12:41 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //அப்பாடா எவ்வளவு பெரிய பதிவு. பதிவே ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு போகுதே. அப்போ பின்னூட்டங்களும் இரண்டு கிலோமீட்டர் தாண்டிடும் போல இருக்கே //

      சண்டிக்குதிரைகளே தவிர, ஆனால் நாங்கள் ஒன்றும் நொண்டிக்குதிரைகள் அல்ல என பாய்ந்து வந்து, ஏராளமாகப் பின்னூட்டங்கள் கொடுத்து, நிரூபித்து விட்டீர்களே நீங்களும் அந்த மின்னலுவும் :)

      உங்கள் இருவராலும் மட்டுமே அது இரண்டு கிலோமீட்டரைத்தாண்டினாலும் ஆச்சர்யமே இல்லை.

      போதாக்குறைக்கு என் ப்ளாக்கர் 10 நாட்களுக்குப்பின், திடீரென்று ரோஷப்பட்டுக்கொண்டு, இன்று இரவு முதல் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. அதனால் உங்கள் அனைவருக்கும் பதில் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். ஒருவேளை நான் உங்கள் அனைவரின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்க முடிந்தால், அது மூன்று கிலோ மீட்டரைத் தாண்டினாலும் தாண்டிவிடும்தான். ஆச்சர்யமே இல்லை. :)))

      இனிமேல் இங்கு ஒரே கும்மியும் கோலாட்டமும் தான். சந்தோஷம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  12. படங்கள் எங்கேந்துதான் தேடி எடுக்கறீங்களோ. ஜகஜ் ஜோதியா டாலடிக்குதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //படங்கள் எங்கேந்துதான் தேடி எடுக்கறீங்களோ. ஜகஜ் ஜோதியா டாலடிக்குதே //

      ஜகத் ஜோதியா டாலடிப்பவர்களுக்காக வேண்டியே, மிகவும் கஷ்டப்பட்டு பொருத்தமாக தேடித்தேடித்தான் எடுக்க வேண்டியுள்ளது. :)

      நீக்கு
  13. இலக்கை குறி வைத்து வீழ்த்தும் முதல் படமே வெகு ஜோராக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      // இலக்கை குறி வைத்து வீழ்த்தும் முதல் படமே வெகு ஜோராக இருக்கு. //

      இலக்கைக் குறி வைத்துத்தானே அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு வெற்றியை வீழ்த்தியுள்ளீர்கள் ! அதனால் அந்தப்படம் முதலில் போடப்பட்டுள்ளது. அது ஜோராகத்தான் இருக்கும்.

      நீக்கு
  14. ஆஹா அடுத்ததாக துள்ளி குதிக்கும் இரண்டு மான் குட்டிகளும் அசத்துது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //ஆஹா அடுத்ததாக துள்ளி குதிக்கும் இரண்டு மான் குட்டிகளும் அசத்துது. //

      ஆஹா, யாரும் சொல்லாததை நீங்கள் சொல்லி அசத்திவிட்டீர்கள். மான்குட்டி போன்ற அழகான தங்களின் தனி ரசனைக்கு என் மகிழ்ச்சிகள். :)

      நீக்கு
  15. மிலிடரி உடையில் வாயைத்திறந்து சத்தம் போடும் பெண் குட்டி ஒருவேளை மின்னலா இருக்குமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //மிலிடரி உடையில் வாயைத்திறந்து சத்தம் போடும் பெண் குட்டி ஒருவேளை மின்னலா இருக்குமோ. //

      நம் ‘மின்னலு’வை மனதில் நினைத்தே மின்னல் வேகத்தில் இந்தப்படத்தை நான் தேர்ந்தெடுத்தேன். நீங்களும் கரெக்டாக இதையே சொல்லியுள்ளது ஆச்சர்யமாக உள்ளது. :)

      நீக்கு
  16. அடுத்து கைகளில் துப்பாக்கிகளுடன் ஆண்களின் அணியோ அம்மாடியோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //அடுத்து கைகளில் துப்பாக்கிகளுடன் ஆண்களின் அணியோ அம்மாடியோ.... //

      கைகளில் துப்பாக்கிகள் மட்டுமல்ல. தலையில் பாருங்கோ அழகான கோழிக்கொண்டைகள் போன்ற விசிறி மடிப்புகள். :)

      நீக்கு
  17. ஆஹா முதல் வெற்றியாளராக என் பெர் இருக்கே பஹூத் அச்சா. ஷுக்ரியா தன்யவாத்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //ஆஹா முதல் வெற்றியாளராக என் பெயர் இருக்கே. பஹூத் அச்சா. ஷுக்ரியா. தன்யவாத். //

      ஏதோ பூந்தளிருக்கு முதலிடம் கொடுப்போமே என என் மனதுக்குத் தோன்றியது. எங்கும் எதிலும் பெண்களுக்குத்தானே முன்னுரிமை கொடுக்கணும்.

      ’பூந்தளிர்’ என்ற பெயர், நீண்ட நாட்களாகவே, நீண்ட பின்னூட்டங்களால், எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. நான் பார்த்தவரை மிகவும் ராசியான பெயரும்கூட.

      தங்களின் பஹூத் அச்சாவுக்கு என் சலாம் மாலே கும் ..... மாலே கும் சலாம் + ஷுக்ரியா + தன்யவாத்.

      நீக்கு
  18. மேலே எனக்கான இதயங்கள் படமும் கீழே பூங்கொத்துகள் படமும் என்னமா ஜொலிக்குது என் இதயம் கனிந்த நன்றிகள் கோ.....பூ..... ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //மேலே எனக்கான இதயங்கள் படமும் கீழே பூங்கொத்துகள் படமும் என்னமா ஜொலிக்குது என் இதயம் கனிந்த நன்றிகள் கோ.....பூ..... ஸார் //

      இந்தத்தங்களின் அழகான பின்னூட்டமும், என்னைப் புதுமாதிரியாக இங்கு நீங்கள் அழைத்துள்ளதும்கூட ஜொலிக்கத்தான் செய்கின்றன. மிகவும் சந்தோஷம்மா. உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

      நீக்கு
  19. தங்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தெய்வீக பதிவரான அம்பாளை " நம்மாளுடன் ஒட்டி உரசி காட்டியுள்ளது எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது..நன்றிகள் கோ..பூ.. ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //தங்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தெய்வீக பதிவரான ’அம்பாளை’ நம்மாளுடன் ஒட்டி உரசி காட்டியுள்ளது எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது..நன்றிகள் கோ..பூ.. ஸார் //

      ஒருகாலத்தில் என் பதிவுகளின் பின்னூட்டப்பகுதியில், எண்ணிலடங்காத ஏராளமான செந்தாமரைகள் பூத்துக்குலுங்கி, தாமரைத்தடாகம்போலவே காட்சியளித்து என்னை சொக்க வைத்து மகிழ்வித்தது உண்டு.

      இப்போது இன்று அதே ரோஸ்கலரில் தங்களின் ரோஜாப்பூக்கள் நிறைய எண்ணிக்கையில் காட்சியளிக்கின்றன.

      ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு சீசனில்தான் அதிகமாகக் கிடைக்கக்கூடும் போலிருக்கு.

      என்ன இருந்தாலும் தங்களுடையது பூந்தளிர் (குழந்தை) என்பதால் அது வெயில், காற்று, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவே, அம்பாளின் மிகப்பெரிய தங்கத்தாமரை சற்றே கீழே இறங்கி உங்களின் சிறிய ரோஜாப்பூவைத் தாங்கிப்பிடித்து பாதுகாத்து அருளியுள்ளதாகவே எனக்குத்தோன்றுகிறது.

      மொத்தத்தில் செந்தாமரையும், ரோஜாவும் அநேகமாக எல்லோராலும் மிகவும் விரும்பக்கூடிய புஷ்பங்களே. தங்களின் இந்த மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். பத்ம ஆசனியான தாமரை அம்பாளின் அருள் நம் இருவருக்குமே என்றும் கிடைக்கப் பிரார்த்திப்போமாக. :)

      நீக்கு
  20. வைகோ என்று தங்களை பிறர் அழைப்பதை தாங்கள் விரும்புவதில்லை என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்." வைகோ" ஹவை திருப்பி போட்டால் " கோவை" என்று வருகிறது. இங்கும் " வைகோ" வைத்த இந்த போட்டிகளில் வெற்றியாளர்கள் "கோவை" க்காரர் களே மெஜாரிட்டி வைகோ ஸார் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //வைகோ என்று தங்களை பிறர் அழைப்பதை தாங்கள் விரும்புவதில்லை என்று நன்றாகவே தெரியும்.//

      இதைத்தாங்களாவது நன்கு தெரிந்துகொண்டுள்ளதில் + புரிந்துகொண்டுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      //இருந்தாலும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்." வைகோ" வை திருப்பி போட்டால் " கோவை" என்று வருகிறது. இங்கும் " வைகோ" வைத்த இந்த போட்டிகளில் வெற்றியாளர்கள் "கோவை" க்காரர் களே மெஜாரிட்டி.//

      அழகாக ஆராய்ந்து இதனை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள். ஆமாம். இந்தப்போட்டியின் மெஜாரிட்டி வெற்றியாளர்களான கோவைக்காரர்கள் மேல் எனக்கும் எப்போதும் ஓர் தனிப்பிரியமும் பாசமும் உண்டு.

      இந்த மாபெரும் மெஜாரிட்டி வெற்றி, கோவைக்குக் கிடைத்துள்ளதற்கே, கோவையில் தற்காலிகமாக தங்கி போட்டியில் பங்குகொண்ட, தாங்கள் மட்டும்தான் முழுக்காரணமாகும். இல்லாவிட்டால் கோவையும், பாண்டிச்சேரியும் தலா இரண்டு வீதம் சரிசமமான இடங்களைத்தான் பெற்றிருக்கும்.

      என் நெருங்கிய சொந்தக்காரர்கள் நிறையபேர் அங்கு கோவையில் இப்போதும் இருக்கிறார்கள். நானும் நிறையமுறை கோவைக்கு வந்துள்ளேன். இருப்பினும் பதிவுலகத்திற்கு வந்தபின்பு நான் கோவைக்கு வந்ததே இல்லை.

      தங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, உங்களைப் பார்க்கத்தான் கோவைக்கு வரலாமா என எனக்குள் தீவிரமாக நினைத்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் தங்களுக்கு உடல்நிலை கொஞ்சம் சரியாகி, திடீரென வேக வேகமாகப் போட்டியை முடித்துக்கொண்டு, வெற்றிபெற்ற கையோடு, கோவையைவிட்டே நீங்க, உங்கள் சொந்த ஊருக்கு ஒருவழியாகக் கிளம்பும்படி ஆகிவிட்டது.

      //வைகோ ஸார் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே.//

      ஆஹா, சந்தடி சாக்கில் நீங்களும் ஆசைதீர இதுபோல (வைகோ ஸார் என) ஒருமுறை சொல்லிட்டீங்களா, ஓக்கே. அதனால் பரவாயில்லை.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள், நாங்களும் அடுத்த போட்டியில் வருவோம்ல,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran December 31, 2015 at 2:13 PM

      //அனைவருக்கும் வாழ்த்துக்கள், நாங்களும் அடுத்த போட்டியில் வருவோம்ல, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      உங்களை வரவழைக்க மட்டுமே நான் மற்றொரு போட்டியைப்பற்றி சிந்திக்கணும் போலிருக்கே. :)

      தங்கள் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  22. வாழ்த்துகள்.

    ஸ்க்ரால் செய்யச் செய்ய வந்து கொண்டேயிருக்க, நாம்தான் தவறாகப் பார்க்கிறோமோ என்று சந்தேகம் வந்து விட்டது!

    அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். December 31, 2015 at 3:18 PM

      //வாழ்த்துகள்.//

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //ஸ்க்ரால் செய்யச் செய்ய வந்து கொண்டேயிருக்க, நாம்தான் தவறாகப் பார்க்கிறோமோ என்று சந்தேகம் வந்து விட்டது!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! :)

      நல்லவேளையாக முன்கூட்டியே இதனை நான் கம்ப்போஸ் செய்து டிராஃப்ட் ஆக என்னிடம் சேமித்து வைத்திருந்தேன். அப்படியும் கடைசியில் ஒருசில படங்களை இணைக்க விரும்பினேன். அவ்வாறு செய்ய முடியாமல் மறுத்து விட்டது என் ப்ளாக்கர். ஏதோ அப்படியே, முன்னோட்டமாகப் பார்க்கவும் கூட முடியாமல், வெளியிட மட்டும் முடிந்தது என்னால். நானே இன்று 05.01.2016 இரவுவரை இந்தப்பதிவினை திறந்து பார்க்க இயலவில்லை என்பது மட்டுமே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது திடீரென அது அதுவாகவே சரியாகி வேலை செய்வதில் மகிழ்ச்சியே.

      //அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள். //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  23. என்னுடன் பரிசு பெற்ற சாதனையாளர்களாகிய திருமதிகள் இராஜராஜேஸ்வரி அம்மா ஜெயந்தி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //என்னுடன் பரிசு பெற்ற சாதனையாளர்களாகிய திருமதிகள் இராஜராஜேஸ்வரி அம்மா ஜெயந்தி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  24. குருஜியின் செல்லப்பொண்ணு குட்டி தங்கம் பட்டு செல்லத்துக்கு மின்னல் முருகுவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //குருஜியின் செல்லப்பொண்ணு, குட்டித் தங்கம், பட்டுச் செல்லம், மின்னல் முருகுவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் //

      அடாடா, ஏற்கனவே இந்தப்பெண்ணின் படுத்தல் என்னால் தாங்க முடியவில்லை :) இதில் என் செல்லப்பொண்ணு, குட்டித் தங்கம், பட்டுச்செல்லம் என்றெல்லாம்வேறு நீங்க சொல்லி உசுப்பி விட்டுட்டீங்களா ! போச்சு ... போச்சு !! :)

      எனினும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  25. திருவாளர்கள் பழனி கந்தசாமி சார் அவர்கள் ஸ்ரீவத்ஸன் சார் அவர்கள் ரவிஜி சார் அவர்கள் மற்றும் சேஷாத்ரி சார் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் December 31, 2015 at 5:30 PM

      //திருவாளர்கள் பழனி கந்தசாமி சார் அவர்கள் ஸ்ரீவத்ஸன் சார் அவர்கள் ரவிஜி சார் அவர்கள் மற்றும் சேஷாத்ரி சார் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  26. புத்தாண்டு வாழ்த்துகள். பரிசுபெற்றவர்கள் அனைவருக்கும். கொடுத்துச் சிவந்தன கைகள் போலும். நல்ல மனது. இப்படியே பணிகள் சிறக்கட்டும். குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி December 31, 2015 at 5:31 PM

      //புத்தாண்டு வாழ்த்துகள். பரிசுபெற்றவர்கள் அனைவருக்கும். கொடுத்துச் சிவந்தன கைகள் போலும். நல்ல மனது. இப்படியே பணிகள் சிறக்கட்டும். குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும். அன்புடன்//

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + அன்புடன் கூடிய ஆசிகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  27. அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் //

      மிகவும் சந்தோஷம்மா.

      நீக்கு
  28. அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் //

      அதெல்லாம் இருக்கட்டும். பொங்கல் பண்டிகைக்கு அங்கு நம் ஆத்துக்கு நான் புறப்பட்டு வந்தால் எனக்கு நீங்க என்ன தருவேள்?

      இல்லை, நீங்க பொங்கல் பண்டிகை கொண்டாட, எங்காத்துக்கு திருச்சிக்கே வந்துடுறேளா?

      நீக்கு
  29. கோபால் சாரின் வலைப்பதிவின் வெற்றிகரமான 5---ம் பிறந்த நாளுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்இறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //கோபால் சாரின் வலைப்பதிவின் வெற்றிகரமான 5---ம் பிறந்த நாளுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் //

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றிம்மா. நான் ஐந்து வயதே ஆன பொடிப்பையனாக்கும். :)

      நீக்கு
  30. எத்தனை பதிவுகள் எத்தனை பின்னூட்டங்கள எத்தனை தொடர்பவர்கறின் எண்ணிக்கை கூகுள்+ பார்வையாளர்களின் எண்ணிக்கை 40--லட்சங்களுக்கும் மேல்......ஆஹா.... ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க தல சுத்துதே . சந்தேகமில்லாம இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //எத்தனை பதிவுகள், எத்தனை பின்னூட்டங்கள், எத்தனை தொடர்பவர்களின் எண்ணிக்கை, கூகுள்+ பார்வையாளர்களின் எண்ணிக்கை 40 லட்சங்களுக்கும் மேல்...... ஆஹா.... ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க தல சுத்துதே.//

      ஆஹா, இப்படியெல்லாம் பார்க்கப் பார்க்க தலை சுத்தக்கூடாதே, மிகவும் ஜாக்கிரதையா இருங்கோம்மா.

      //சந்தேகமில்லாம இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான் சார்.//

      பூந்தளிர் சொன்னால் எதுவும் கரெக்டாகவேதான் இருக்கும். மிக்க நன்றிம்மா. :)

      இன்று Google+ இல் என் பார்வையாளர்கள் எண்ணிக்கை 41,07,564 எனக்காட்டுகிறது.:)

      நீக்கு
  31. எல்லோரையும் தங்களின் அன்பால் அரவணைத்து செல்லும் தங்களின் அன்புக்கு நானும் பாத்திரமாகி உள்ளது
    எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //எல்லோரையும் தங்களின் அன்பால் அரவணைத்து செல்லும் தங்களின் அன்புக்கு நானும் பாத்திரமாகி உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.//

      எனக்கும்தான். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் என் மீது கொண்டுள்ள தனி அன்புக்கும், பிரியத்திற்கும் என் நன்றிகள், சிவகாமி.

      நீக்கு
  32. இனியாவது இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் உடல் நலத்தை கவனி
    த்துக் கொள்ளவும் என தங்களின்
    மேல் உள்ள தனி அக்கறையால் கேட்டுக்கொள்கிறது உங்களின் இந்த சண்டி குதிரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //இனியாவது இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும் என தங்களின் மேல் உள்ள தனி அக்கறையால் கேட்டுக்கொள்கிறது உங்களின் இந்த சண்டி குதிரை. //

      இந்த எளியோன் மீது சண்டிக்குதிரை வைத்துள்ள ஆத்மார்த்தமான பிரியத்தையும், தனி அக்கறையையும் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறேன். தங்களின் அன்புக்கு என்றும் நான் அடிமை. தாங்கள் சொல்படியே இனி நான் கேட்கிறேன். மிக்க நன்றிம்மா, சிவகாமி.

      நீக்கு
  33. எனக்குள்ள பரிசு பணத்திற்கு உயில் எழுதி வைக்க வேண்டுமோ என்னவோ
    என தாங்கள் எழுதி இருப்பதை தயவுசெய்து நீக்கிடுங்கோ. விளையாட்டுக்கு கூட அது டோலல்லாம் சொல்லாதேங்கோ. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
    உங்கள் ப்ளாக்கர் பிரச்சனை தீர்ந்ததும்
    அந்த வரிகளை மாற்றி என்னை மகிழ்விக்க வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //எனக்குள்ள பரிசு பணத்திற்கு உயில் எழுதி வைக்க வேண்டுமோ என்னவோ என தாங்கள் எழுதி இருப்பதை தயவுசெய்து நீக்கிடுங்கோ. விளையாட்டுக்கு கூட அது போலெல்லாம் சொல்லாதேங்கோ. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள் ப்ளாக்கர் பிரச்சனை தீர்ந்ததும் அந்த வரிகளை மாற்றி என்னை மகிழ்விக்க வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். //

      OK .... OK .... Fully Agreed :)

      Removed those lines , according to your special Request

      [ Copy to Mrs. Angelin Sister also for kind information, please. ]

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  34. ஒரு போட்டி அறிவித்து விட்டு போட்டிக்கான கெடு தேதியான
    31--12--2015---அன்றே அனைத்து வெற்றியாளர்களையும் சிறப்பித்து அணிவகுத்து காட்டியுள்ளது தங்களின் திட்டமிடலயும் மிகச்சிறந்த புத்திசாலி தனத்தையும் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //ஒரு போட்டி அறிவித்து விட்டு போட்டிக்கான கெடு தேதியான 31--12--2015---அன்றே அனைத்து வெற்றியாளர்களையும் சிறப்பித்து அணிவகுத்து காட்டியுள்ளது தங்களின் திட்டமிடலயும் மிகச்சிறந்த புத்திசாலி தனத்தையும் காட்டுகிறது. //

      திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக, வரிசையாக ஏராளமாக பின்னூட்டங்கள் கொடுத்து, போட்டியில் முதல் பெண்மணியாக வெற்றிபெற்றுள்ள நீங்கள் இங்கு என்னைப்புகழ்ந்து ஏதேதோ சொல்றீங்கோ. எனக்குக் கூச்சமாக இருப்பினும், மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. மிக்க நன்றி, சிவகாமி. :)

      2013 இல் கணினி மூலம் தாங்கள் எனக்கு அளித்துள்ள ஏராளமான + தாராளமான பின்னூட்டங்களை என்னால் மறக்கவே முடியாது. பொக்கிஷமாக அவைகளை நினைத்துப் பாதுகாத்து, அடிக்கடி நானும் படித்து மகிழ்வது உண்டு. :) இப்போது அலைபேசி மூலம் பின்னூட்டங்கள் என்பதால் மிகவும் சுருக்கோ சுருக்கென சுருக்கி எழுதிட்டீங்கோ :(

      நீக்கு
  35. இத்தகைய மாபெரும் சாதனையாளறான தங்களை நான் என்றாலது ஒரு நாள்
    சந்திக்கும்போது நான் ஒரு மறக்க முடியாத பரிசு அளித்து மகிழ்விக்க நினைத்திருக்கேன் அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கத்துடன் உள்ளேன். அனைத்துக்கும் நன்றிகள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ>>>>>பூ [கோபு to பூந்தளிர்]

      //இத்தகைய மாபெரும் சாதனையாளரான தங்களை, நான் என்றாவது ஒரு நாள் சந்திக்கும்போது, நான் ஒரு மறக்க முடியாத பரிசு அளித்து மகிழ்விக்க நினைத்திருக்கேன்.//

      தங்களை நான் நேரில் சந்திப்பதே எனக்குக் கிடைக்கும் ஒரு மாபெரும் பரிசாக நான் நினைத்து மகிழ்வேன் !

      கடவுள் அருளால், முக்கியமாகப் ’போதும் என்ற மனம்’ + ஓரளவு அத்யாவஸ்யத் தேவைகளான எல்லாமே இன்று என்னிடம் உள்ளன. அதனால் தங்களின் அன்பு மட்டுமே எனக்குப்போதும். எதுவும் பரிசளிக்க நினைத்து சிரமப்படாதீங்கோ, ப்ளீஸ்.

      //அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கத்துடன் உள்ளேன்.//

      ஆஹா ! வரவர தமிழ் எழுத்துக்களில் நீங்க என்னை அப்படியே சொக்கத்தான் வைக்கிறீர்கள். Very Good Improvement in your Tamil Writing. I am very very Happy with this. வாழ்த்துகள்.

      //அனைத்துக்கும் நன்றிகள் சார் //

      பின்னூட்டப்புயல் போல ஏராளமாக இங்கு எழுதி அசத்தியுள்ளீர்கள். அனைத்துக்கும் என் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன். எங்கிருந்தாலும் நீங்க செளக்யமா சந்தோஷமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு என் மனம் நிறைந்த நல்லாசிகள், சிவகாமி.

      என்றும் பிரியமுள்ள கோபு

      நீக்கு
  36. அசர வைத்த அயராத முயற்சி. என்ன புள்ளிவிவரம்?.. மலைத்தேன். உங்கள் அன்பு உள்ளமும் மலைத் தேன் தான்!

    ஒரு பதிவைப் படித்தவுடன் அந்தப் பதிவைப் படித்ததினால் அந்தப் பதிவு நம் மனசைக் கிளறிய எண்ணங்களைச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பில் இடப்படும் நல்ல பல பின்னூட்டங்கள், பதிவிட்டவர்களாலேயே அலட்சியப்படுத்திய காலம் உண்டு.

    ஒரு பதிவுக்கு 20 பின்னூட்டங்கள் வந்ததென்றால், சில பதிவர்கள் தேர்ந்தெடுத்து சில பின்னூட்டங்களுக்கு மட்டும் பதிலளிப்பர். இந்த தேர்ந்தெடுத்தல் வேலையை எப்படிச் செய்கிறார்கள் என்று பல நேரங்களில் ஆச்சரியப்பட்டதுண்டு.

    ஆனால் நீங்களோ கொஞ்சமும் சலித்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்கும் அன்புடன் ஒவ்வொரு பின்னூஈட்டத்திற்கும் பதில் சொல்வதை ஒரு கடமையாக பதிவு போட்டதை விட கண்ணும் கருத்துமாக அக்கறை எடுத்துக் கொண்டு உங்கள் மனதில் பட்ட பதில்களை விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    இதுவே தங்கள் வெற்றிக்கு பாலபாடம் என்றறிவேன். பதிவு எழுதியவர்கள் பின்னூட்டங்களை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படியே பின்னூட்டமிட்டவர்களும் தங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாக பதிவர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை அறிந்தவர் நீங்கள் என்பதை அறிந்தேன்.

    இப்பொழுது நல்ல பின்னூட்டங்கள் தம் பதிவுகளுக்கு வரவேண்டுமே என்கிற எதிர்பார்க்கும் ஆர்வம் பதிவர்கள் மத்தியில் மலர்ந்திருக்கிறது. பின்னூட்டங்களைப் பற்றியே ஒரு பதிவு போட வேண்டும் என்று பல நேரங்களில் நானும் நினைத்ததுண்டு. எப்பொழுதோ, தெரியவில்லை.

    ஆனால் உங்களில் விளையும் எந்த ஆர்வத்தையும் உடனுக்குடன் செயல்படுத்துவதில் அதி திறமைசாலி நீங்கள். கதைகள் எழுதுவதற்கு தான் கற்பனை வேண்டும் என்பார்கள்; பதிவுகளில் இடும் படங்களுக்கும் அற்புத கற்பனைப்பூச்சு கொடுப்பவர் நீங்கள்.

    இப்படி நிறைய 'நீங்கள்' உண்டு.

    'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்/ என்றார் வள்ளுவர் பெருமான். ஆர்வத்திற்கும் அடைக்கும் தாழ் இல்லை என்று உங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

    அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள், கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி December 31, 2015 at 7:57 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கம் சார்.

      //அசர வைத்த அயராத முயற்சி. என்ன புள்ளிவிவரம்?.. மலைத்தேன். உங்கள் அன்பு உள்ளமும் மலைத் தேன் தான்!//

      ஆஹா, என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, தங்களிடமிருந்து ஓர் பின்னூட்டம். அதுவும் தேன் மழையெனப் பொழிந்துள்ளதில் நானும் மகிழ்ந்தேன், மலைத்தேன். தன்யனானேன்.

      //ஒரு பதிவைப் படித்தவுடன் அந்தப் பதிவைப் படித்ததினால் அந்தப் பதிவு நம் மனசைக் கிளறிய எண்ணங்களைச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பில் இடப்படும் நல்ல பல பின்னூட்டங்கள், பதிவிட்டவர்களாலேயே அலட்சியப்படுத்திய காலம் உண்டு.//

      அதே போல பதிவையே சுத்தமாகப் படிக்காமல், பதிவுக்கே சம்பந்தம் ஏதும் இல்லாமல், ஏனோ தானோவென, அழையா விருந்தாளி போல வெட்டி வருகை தந்து, வெட்டிக் கமெண்ட்ஸ் கொடுத்துச் செல்பவர்களும் இன்றும் ஆங்காங்கே உண்டு.

      //ஒரு பதிவுக்கு 20 பின்னூட்டங்கள் வந்ததென்றால், சில பதிவர்கள் தேர்ந்தெடுத்து சில பின்னூட்டங்களுக்கு மட்டும் பதிலளிப்பர். இந்த தேர்ந்தெடுத்தல் வேலையை எப்படிச் செய்கிறார்கள் என்று பல நேரங்களில் ஆச்சரியப்பட்டதுண்டு.//

      (1) அவரின் தயவு இவருக்குத் தேவைப்படலாம் (2) பின்னூட்டக் கருத்துக்களைவிட அவரின் த.ம போன்ற திரட்டிகளில் அளிக்கும் வோட் மட்டுமே இவருக்கு முக்கியமாகத் தேவைப்படலாம் (3) மொய்க்கு மொய் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு செயல் படலாம் (4) தனக்கு பதில் அளிக்கத்தூண்டுமாறு இவர் ஏதாவது கேள்வியைத் தன் பின்னூட்டத்தில் எழுப்பியிருக்கலாம் (5) வோட் அளிக்காமலும், தொடர் வருகை தராமலும், எப்போதாவது மட்டும் வருகை தந்து, குற்றம் குறைகள் மட்டும் சொல்லும் ஒருவருக்கு ஏன் நாம் பதில் அளிக்கணும் என ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம். அதனால் எல்லோருக்கும் பதில் அளிக்காமல் இருக்கலாம்.

      உலகம் பலவிதம்போல இவ்வாறு நம் பதிவுலகமும் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருப்பதனால், நான் இதில் தங்களைப்போல ஆச்சர்யப்பட்டதே இல்லை.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஜீவி சார் (2)

      //ஆனால் நீங்களோ கொஞ்சமும் சலித்துக் கொள்ளாமல், வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்கும் அன்புடன், ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் சொல்வதை ஒரு கடமையாக, பதிவு போட்டதை விட கண்ணும் கருத்துமாக அக்கறை எடுத்துக் கொண்டு, உங்கள் மனதில் பட்ட பதில்களை விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

      ஆமாம் சார். பதிவினைப்பற்றி வாசகர்களின் மனம் திறந்த கருத்துக்களைத்தவிர, வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, ஓர் நல்ல எழுத்தாளர் இதனை நிச்சயமாக ஓர் கடமையாக ஏற்று செய்யத்தான் வேண்டும் என்பதே என் எண்ணமும் கருத்துமாகும். அதற்கு நான் ஓர் முன்னுதாரணமாக இருந்து அவ்வப்போது என் பதிவுகளில் செயல்பட்டு வந்துள்ளேன்.

      பொதுவாக பதிவு வெளியிடுபவரும் ஓர் எழுத்தாளர். பின்னூட்டமிடுபவரும் ஓர் பதிவர் மற்றும் எழுத்தாளரே என்கிற நிலையில், எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து, வரிக்கு வரி பதில் தர வேண்டியதுதான் ஆரோக்யமான செயலாக இருக்க முடியும். மிகச்சிறப்பான எழுத்துக்கள் பாராட்டப்பட வேண்டும். ஊக்குவிக்கப்பட வேண்டும். அது பதிவினில் இருந்தாலும் சரி, பின்னூட்டத்தில் இருந்தாலும் சரி என நான் நினைக்கிறேன்.

      இவ்வாறு பிறரை தூண்டிவிட்டு, அவரின் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர மட்டுமே, நான் தங்களை நடுவராக நியமித்து, சென்ற 2014-ஆம் வருடம் முழுவதும் நாற்பது வாரங்களுக்குத் தொடர்ச்சியாகத் தொய்வின்றி நடத்திய என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் + இந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நான் நடத்தியுள்ள இந்த 100% பின்னூட்டமிடும் போட்டி, ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்களாகும் என்பது தங்களுக்கே நன்றாகத் தெரியும். இதுபற்றி மற்றவர்களுக்கும் புரியட்டுமே என்பதால் மட்டுமே இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளேன்.

      //இதுவே தங்கள் வெற்றிக்கு பாலபாடம் என்றறிவேன். பதிவு எழுதியவர்கள் பின்னூட்டங்களை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படியே பின்னூட்டமிட்டவர்களும் தங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாக பதிவர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை அறிந்தவர் நீங்கள் என்பதை அறிந்தேன்.//

      ஆமாம் சார். பதிவினை ஆழமாக மனதில் வாங்கிக்கொண்டு படித்து, மிகச்சிறப்பாக பின்னூட்டம் கொடுக்கும் வாசகர் ஒருவர், நியாயமாக இதனை எதிர்பார்ப்பார் என்பதுதான் உண்மை. அதனாலேயே மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு, இதோ என் பதில்களை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இங்கு அளித்துக்கொண்டு வருகிறேன்.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஜீவி சார் (3)

      //இப்பொழுது நல்ல பின்னூட்டங்கள் தம் பதிவுகளுக்கு வரவேண்டுமே என்கிற எதிர்பார்க்கும் ஆர்வம் பதிவர்கள் மத்தியில் மலர்ந்திருக்கிறது.//

      பதிவர்களுக்கு இந்த எதிர்பார்க்கும் ஆர்வம் இப்போது புதிதாக மட்டுமல்ல .... ஆரம்பத்திலிருந்தே எப்போதுமே மனதில் மலர்ந்துதான் வந்துள்ளது.

      வெகு சில, மிகச்சிறந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் அது மிகவும் நியாயமான எதிர்பார்ப்பும்கூட.

      இது சம்பந்தமாக, என் அனுபவத்தில், ஓர் விஷயத்தை தங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

      எனக்கு சமீபத்தில், ஒரு ஆறு மாதங்கள் முன்பு மட்டுமே அகஸ்மாத்தாக அறிமுகம் ஆன, ஒரு பெண் பதிவர் ஓர் மிகப்பெரிய கதையை எழுதியிருந்தார். என் தனிப்பட்ட பார்வைக்கும் கருத்துக்கும் அதனை அனுப்பியிருந்தார். அந்தக்கதையை மனதில் வாங்கிக்கொண்டு ரஸித்து ருசித்துப் படிக்கவே எனக்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது. அதன் தாக்கம் என்னிடம் ஒரு மாதத்திற்கும் மேல் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்த ஓரிரு மாதங்களும் தினமும், கதையில் வந்த சம்பவங்களின், அதே நினைவாகவே நான் இருந்து வந்தேன்.

      அவரை நான் வெகுவாகப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தேன். கதையின் ஒவ்வொரு திருப்பத்தையும், அதில் எனக்கு ஏற்பட்ட தாக்கங்களையும் விவரித்து, மனம் நெகிழ்ந்து பாராட்டியும்விட்டு, ஒரு பொறுப்பான இல்லத்தரசியாக இருப்பினும், எப்படித் தங்களால் இவ்வளவு சிறப்பாகவும், சற்றே புரட்சிகரமாகவும் இதனை எழுத முடிந்தது .... என்றும் கேட்டிருந்தேன்.

      தன் வலைத்தளத்தினில் பதிவிடப்பட்ட இந்தத் தன் கதைக்கு அதிகமாக பின்னூட்டங்களே வரவில்லையென்று வருத்தத்துடன் என்னிடம் சொன்னார்கள். இருப்பினும் என் ஒருவனின் பாராட்டுக் கடிதம் மட்டுமே, தனக்கு ஆயிரம் பாராட்டுகள் கிடைத்த திருப்தியைத் தந்துவிட்டதாக, என்னிடம் மனம் நெகிழ்ந்து சொல்லி மகிழ்ந்தார்கள்.

      இப்படி ஒரு மிகச்சிறந்த பெண் எழுத்தாளர், நம் வலையுலகில் இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாமல் உள்ளது என்பதே இதில் உள்ள வேதனையான விஷயமாக உள்ளது.

      அந்தப் பெண் பதிவரே, மேலும் பல சிறுகதைகளை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்கள். எனக்கு அவர்கள் அவ்வப்போது அனுப்பிய அனைத்தையும் படித்து மகிழ்ந்து FEEDBACK - MAIL மூலம் அவ்வப்போது கொடுத்து மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளேன்.

      என்றாவது ஒருநாள், எனக்கும் சூழ்நிலை ஒத்துவந்து, பிராப்தமும் சாதகமாக அமைந்து, அவரும் எனக்கு அனுமதி அளித்தால், அதே அவரின் நெடுங்கதையை பல பகுதிகளாகப் பிரித்து, நானே அதற்கான படங்களையும் என் கைகளால் வரைந்து, என் வலைத்தளத்தினில் ஓர் விறுவிறுப்பான ஓர் சிறிய தொடராகவே வெளியிட்டு, அந்தத் தொடரின் இறுதி அத்யாயத்தில் இந்தக்கதையை எழுதியவர் ‘இவரே’ என அவரின் புகைப்படத்துடனும் வலைப்பூ முகவரியுடனும் அறிவித்து, அவருக்கு மாபெரும் பாராட்டுகள் கிடைக்கச்செய்ய வேண்டும் என நான் என் மனதில் நினைத்துக் கொண்டுள்ளேன்.

      தற்சமயம் குடத்தில் இட்ட விளக்காக உள்ள அவரை குன்றில் ஏற்ற வேண்டும் என நான் என் மனதார விரும்புகிறேன்.

      இதே பெண் பதிவர் என் சிறுகதைகளிலும் சிலவற்றை மட்டும் படித்துவிட்டு, மிகவும் மகிழ்ந்து பாராட்டி மிக நீண்ட பின்னூட்டங்களாக மெயில் மூலம் எனக்கு அனுப்பியிருக்கிறார். இவர் என் பதிவுகளில் வந்து பின்னூட்டமிடுவதை ஏனோ தவிர்த்து வருகிறார். இருப்பினும் நான், அவர் எனக்கு அனுப்பியுள்ள மெயில்களை COPY & PASTE செய்து, என் சம்பந்தப்பட்ட கதைப் பதிவுகளின் பின்னூட்டப்பகுதியில் வெளியிட்டு வருகிறேன். அவற்றின் கீழே கடைசியாக அவர் பெயர் மட்டும் இல்லாமல் ..... ’இப்படிக்கு, தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை’ என்று மட்டும் என்னால் காட்டப்பட்டிருக்கும்.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> ஜீவி சார் (4)

      //பின்னூட்டங்களைப் பற்றியே ஒரு பதிவு போட வேண்டும் என்று பல நேரங்களில் நானும் நினைத்ததுண்டு. எப்பொழுதோ, தெரியவில்லை.//

      எப்போது முடியுமோ அப்போது அவஸ்யமாகப் போடுங்கோ, சார்.

      //ஆனால் உங்களில் விளையும் எந்த ஆர்வத்தையும் உடனுக்குடன் செயல்படுத்துவதில் அதி திறமைசாலி நீங்கள். கதைகள் எழுதுவதற்கு தான் கற்பனை வேண்டும் என்பார்கள்; பதிவுகளில் இடும் படங்களுக்கும் அற்புத கற்பனைப்பூச்சு கொடுப்பவர் நீங்கள்.

      இப்படி நிறைய 'நீங்கள்' உண்டு. //

      ஆஹா, தாங்கள் இதைச்சொல்லி நான் கேட்பது தான், எனக்குக் கிடைத்த மாபெரும் பரிசாக நான் உணர்ந்து மகிழ்கிறேன்.

      எதுவுமே ஓர் ஜனரஞ்சகமாகவும் சற்றே கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும், பதிவினில் நல்லதொரு PERFECTION இருக்க வேண்டும், THE WAY OF PRESENTATION எனக்கே ஒரு முழுத்திருப்தி தருவதாக இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கூடுதல் அக்கறையை நான் எடுத்துக்கொண்டு, அதற்காக மிகவும் அலட்டிக்கொள்ளும் டைப்தான் நான். மறுக்கவில்லை.

      //'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்/ என்றார் வள்ளுவர் பெருமான். ஆர்வத்திற்கும் அடைக்கும் தாழ் இல்லை என்று உங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள், கோபு சார்!//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், மிகச்சிறப்பான + மிக ஆழமான கருத்துகளுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  37. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chokkan Subramanian December 31, 2015 at 8:02 PM

      //தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      நீக்கு
  38. சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பும் அருமை!
    தங்கள் பதிவுகள் பற்றிய புள்ளி விவரங்களும் ஆச்சரியம்!

    தங்களுக்கும் பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
      December 31, 2015 at 10:48 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பும் அருமை!
      தங்கள் பதிவுகள் பற்றிய புள்ளி விவரங்களும் ஆச்சரியம்!//

      அருமையான ஆச்சர்யமான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, நண்பரே.

      //தங்களுக்கும் பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! //

      ஆஹா .... சந்தோஷம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  39. அன்புள்ள அய்யா
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yathavan nambi January 1, 2016 at 4:17 AM

      //அன்புள்ள அய்யா, வணக்கம். "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016" நட்புடன், புதுவை வேலு//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - அன்புடன் VGK

      நீக்கு
  40. சாதனையாளார்கள் அனைவருக்கும் வாழ்த்தும், உங்களுக்கு வணக்கமும் நன்றியும். மேலும் எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ January 1, 2016 at 6:54 AM

      //சாதனையாளார்கள் அனைவருக்கும் வாழ்த்தும், உங்களுக்கு வணக்கமும் நன்றியும். மேலும் எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!//

      வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      புத்தாண்டு டயரியை தினமும் நான் எடுத்து அதில் ஒருசில குறிப்புகள் எழுதும்போதெல்லாம் தங்களின் ஞாபகம் மட்டும்தான் எனக்கு வருகிறது.

      ஹாட்-ட்ரிக் போல, தாங்கள் எனக்கு அளித்த 2014 / 2015 / 2016 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான டயரிகளையும் சேர்த்து நான் போட்டோ பிடித்து, இப்போது இந்தப் பதிவினில் ஏற்றியுள்ளேன். ஏற்கனவே அதனைப் பதிவேற்ற முடியாதபடி ஏதேதோ ப்ளாக்கர் சிக்கல்கள் இருந்தன.

      தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  41. முதற்கண் தங்களால் பரிசளித்து கௌரவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ஐந்து ஆண்டுகளில் 806 பதிவுகளை வெளியிட்டு, 36,894 பின்னூட்டங்களைப்பெற்று தங்களின் வலைப்பதிவை தொடர்வோரை 386 ஆக கொண்டு, 3,67,855 தடவை தங்கள் பதிவை பார்க்க வைத்த தங்களின் சாதனையைக் கண்டு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மலர்கள் இருக்குமிடத்தைத் தானே வண்டுகள் மொய்க்கும்!

    உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. இந்த ஆண்டிலும் தங்களின் சாதனை தொடர வாழ்த்துகிறேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி January 1, 2016 at 12:50 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //முதற்கண் தங்களால் பரிசளித்து கௌரவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.

      //ஐந்து ஆண்டுகளில் 806 பதிவுகளை வெளியிட்டு, 36,894 பின்னூட்டங்களைப்பெற்று தங்களின் வலைப்பதிவை தொடர்வோரை 386 ஆக கொண்டு, 3,67,855 தடவை தங்கள் பதிவை பார்க்க வைத்த தங்களின் சாதனையைக் கண்டு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மலர்கள் இருக்குமிடத்தைத் தானே வண்டுகள் மொய்க்கும்! //

      ”முல்லை மலர் .... மேலே .... மொய்க்கும் வண்டு போலே ....” என்ற அருமையான அழகான இனிமையான திரைப்படப்பாடல் என் நினைவுக்கு வருகிறது :)

      //உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. இந்த ஆண்டிலும் தங்களின் சாதனை தொடர வாழ்த்துகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான பல நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றி, சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  42. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam January 1, 2016 at 3:03 PM

      //இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
      இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!//

      நன்றி.

      நீக்கு
  43. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் January 1, 2016 at 4:08 PM

      //அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். //

      வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி.

      நீக்கு
  44. ஹைய்யோ எம்மாம் பெரிய பதிவு..படங்க எல்லாம் சூப்பரா மின்னலுபோல ஜொலிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru January 1, 2016 at 5:24 PM

      வாங்கோ முருகு, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      ஏன் லேட்? குருஜியின் ’நம்மாளு’வும் மற்றவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டு பின்னூட்டங்கள் கொடுக்கலாம் என்றா?

      ஓக்கே .... ஓக்கே, அதுவும் நல்ல ஐடியாதான்.

      //ஹைய்யோ எம்மாம் பெரிய பதிவு..படங்க எல்லாம் சூப்பரா மின்னலுபோல ஜொலிக்குது //

      அப்போ உங்களை மாதிரியே ஜொலிக்குதுன்னு சொல்றீங்களா? சந்தோஷம்மா.

      முருகுவுக்கு ’மின்னலு’ என்று பெயர் சூட்டிய ’நம்மாளு’ To please note this point. :)

      - குருஜி கோபு

      நீக்கு
  45. வெறியாளர் + சாதனையாளர்4-- பொட்டபுள்ளக 4 ஆம்புளபுள்.
    ளகளா மொத்தமா 8-- பேருகளா. சூப்பரு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //வெறியாளர் + சாதனையாளர்
      4-- பொட்டபுள்ளக 4 ஆம்புளபுள்ளகளா
      மொத்தமா 8-- பேருகளா. சூப்பரு. //

      வெறியாளர் ஆஆஆஆஆ ?????

      ஒருவித வெறியுடன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளர்கள் ஆனதனால் இப்படி எழுதிப் போட்டீங்களோ?

      தேங்க் யூ ’வெரி(றி)’ மச்.

      நீக்கு
  46. ஆணுக்கு பெண் சரிசமம்லா நிரீபிச்சுட்டம்லா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //ஆணுக்கு பெண் சரிசமம்லா நிரீபிச்சுட்டம்லா. //

      தப்பும்மா தப்பு. பெண்ணுக்கு ஆண் சரிசமம்ன்னு ஆண்கள்தான் கஷ்டப்பட்டு நிரூபிச்சுருக்காங்கோ.

      07.12.2015 நிலவரப்படி இந்தப்போட்டியின் வெற்றியாளர்கள் மொத்தம் ஐவர் மட்டுமே.

      அதிலும் ஒரே ஒரு ஆண் + மற்ற நால்வரும் பெண்கள்.

      அதன்பின் அதாவது 08.12.2015 To 20.12.2015 வேஷ்டியை வரிந்துக்கட்டிக்கொண்டு முடித்துள்ளவர்கள்தான் மேலும் மூன்று ஆண்கள். :)

      நீக்கு
  47. இதுல மொதக 3 பேரு கோவைக்காரவுகளா??? ஓ. கே.. கோவக்காரங்க இல்லதான
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //இதுல மொதக 3 பேரு கோவைக்காரவுகளா???
      ஓ. கே.. கோவக்காரங்க இல்லதான//

      மூன்று பேருக்கும் கோபமே வராது. ரொம்பவும் தங்கமானவங்க. சாதா தங்கம் இல்லை. கொங்கு நாட்டுக் கோவைத் தங்கம்.

      அதுவும் அந்த ’நம்மாளு’ இருக்காகளே, அவங்களுக்கு கோபம் என்றால் என்ன அர்த்தம்ன்னே தெரியாதாம். என்னிடம் சொல்லி இருக்காங்க.

      அதனால்தான் நானும் அவங்களை ‘தி பெஸ்ட் ஃப்ரண்டு + நம்மாளு’ன்னு தேர்ந்தெடுத்து வெச்சுக்கிட்டேன். :)

      நீக்கு
  48. அஞ்சினாலும் அஞ்சாம் பொண்ணு கெடைக்காதுல்லா.ஒரு கதையில சொல்லினிங்க.. உங்கட செல்லப்பொண்ணு முருகுவுக்கு அஞ்சாம் இடம் கொடுத்து சிறப்பிட்டீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //அஞ்சினாலும் அஞ்சாம் பொண்ணு கெடைக்காதுல்லா. ஒரு கதையில சொல்லினிங்க.. உங்கட செல்லப்பொண்ணு முருகுவுக்கு அஞ்சாம் இடம் கொடுத்து சிறப்பிட்டீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குது. //

      அது ‘அஞ்சினாலும் இல்லை. ........ ’அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ என்பது. இதோ இந்தத் ’தை வெள்ளிக்கிழமை’ என்ற கதையிலே வருது, முருகு.

      http://www.gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html

      முருகுக்கு சந்தோஷம்ன்னா குருஜிக்கு அதைவிட சந்தோஷம்தானே ! :)

      நீக்கு
  49. நா தா இந்த பதிவுல ஸென்டர் ஆஃப அட்ராக்ஷன்....ங்குறத அல்லாரும் தெரிஞ்சிகோடோணும் ஜொள்ளிட்டன் ஸாரிங்கோ சொல்லி போட்டன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //நா தா இந்த பதிவுல ஸென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்....ங்குறத அல்லாரும் தெரிஞ்சிகோடோணும்.

      ஜொள்ளிட்டன் ஸாரிங்கோ சொல்லி போட்டன் //

      எல்லோரும் அநேகமாகத் தெரிஞ்சிக்கிட்டு இருப்பாங்கோ ... அதாவது எங்கட ஜெயாவும் நீங்களும் தான் செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் என்று. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

      3 + 2 + 3 = 8 அல்லவா. அதனால் நீங்கள் இருவருமே செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் தானாக்கும். ஹூக்க்க்க்கும் ! :)

      நீக்கு
  50. குருஜியின் பெஸ்ட் ஃப்ரெண்டு பூந்தளிர( நம்மாளு) அவுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //குருஜியின் பெஸ்ட் ஃப்ரெண்டு பூந்தளிர் (நம்மாளு) அவுகளுக்கு வாழ்த்துகள். //

      மிக்க நன்றி, முருகு. உங்களுக்கும் அவங்க பெஸ்ட் ஃப்ரெண்டுதானாக்கும். இல்லாட்டி உங்களை ’வாம்மா மின்னலு’ ன்னு ஆசையாகக் கூப்பிட்டிருப்பாங்களா ?

      இப்போதாவது எங்கட ’நம்மாளு’ பற்றிப் புரிஞ்சுக்கிட்டீங்களே, மிக்க நன்றிம்மா, முருகு.

      நீக்கு
  51. குருஜியின் பேரன்புக்கு பாத்திரமான செந்தாமரை முகம் கொண்ட திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவுகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //குருஜியின் பேரன்புக்கு பாத்திரமான செந்தாமரை முகம் கொண்ட திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவுகளுக்கு வாழ்த்துகள் //

      ஆஹா, இந்த ஒரு பின்னூட்டத்திலேதான், ஓரளவு தப்பு ஏதும் இல்லாமல், உள்ளதை உள்ளபடி, ஒழுங்கா, அழகா செந்தாமரைப் பூப்போலவே எழுதி அசத்தியிருக்கீங்க, முருகு. சபாஷ். :)

      நீக்கு
  52. குருஜியின் பெருமதிப்புக்குரிய பெரியவர் திரு பழனி கந்தசாமி ஐய்யா வுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //குருஜியின் பெருமதிப்புக்குரிய பெரியவர் திரு பழனி கந்தசாமி ஐய்யா வுகளுக்கு வாழ்த்துகள். //

      மிகவும் சந்தோஷம் முருகு.

      நீக்கு
  53. குருஜியிடம் அன்பு வைத்துள்ள அன்பு தங்கச்சி திருமதி அதிரஸம் ஜயா ஜெயா ஆண்டிவுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //குருஜியிடம் அன்பு வைத்துள்ள அன்பு தங்கச்சி திருமதி அதிரஸம் ஜயா ஜெயா ஆண்டிவுகளுக்கு வாழ்த்துகள். //

      திரும்பத்திரும்ப எங்கட ’கோடீஸ்வரி ஜெயா’வைப்போய் ’ஆண்டி’ன்னு சொல்லி, கடைசியில் எனக்கு அதிரஸமே தராமல் செய்துடுவீங்க போலிருக்கே, முருகு. :(

      நீக்கு
  54. எங்கட நேயர் கடதாசி படிச்சுபோட்டு போட்டில கலந்துகிட்டு கெலிச்ச திரு ஸ்ரீவத்ஸன் அவுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //எங்கட நேயர் கடதாசி படிச்சுபோட்டு போட்டில கலந்துகிட்டு கெலிச்ச திரு ஸ்ரீவத்ஸன் அவுகளுக்கு வாழ்த்துகள். //

      கரெக்ட் ...... குட். வெரிகுட் .... முருகு. :)

      நீக்கு
  55. வாத்யார் வாத்யார் என்று குருஜியைப்புகழும் சின்ன வாத்யாரு திரு ரவிஜி அவுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //வாத்யார் வாத்யார் என்று குருஜியைப்புகழும் சின்ன வாத்யாரு திரு ரவிஜி அவுகளுக்கு வாழ்த்துகள். //

      அவங்க எந்தப்பள்ளிக்கூடத்திலே வாத்யாரா இருக்காருன்னு சொல்லவே மாட்டேங்கறாக..... முருகு. :)

      நீக்கு
  56. தரமான கமண்டுக எளுதி எங்கட குருஜிய சொக்க வைத்துள்ள திரு சேஷாத்ரி அவுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //தரமான கமண்டுக எளுதி எங்கட குருஜிய சொக்க வைத்துள்ள திரு சேஷாத்ரி அவுகளுக்கு வாழ்த்துகள். //

      ஆஹா, சூப்பர். எங்கட முருகுவோட இந்தக்கருத்தும் குருஜியை சொக்கத்தான் வைக்கிறது. :) நல்லாவே யோசித்து பாயிண்ட் பாயிண்டா எழுதுறீங்க. அச்சா. பஹூத் அச்சா, முருகு.

      நீக்கு
  57. ஆயிரம் ரூவாக்கெல்லா யாராச்சிம் உயிலு எளுதுவாகளா குருஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //ஆயிரம் ரூவாக்கெல்லா யாராச்சிம் உயிலு எளுதுவாகளா குருஜி.//

      எங்க அப்பா (வாப்பா) காலத்திலெல்லாம் எழுதுவாங்க. இப்போ இது ஒரு பெரும்தொகையே இல்லைதான்.

      தொகை சிறியதாகவே இருந்தாலும், இன்னாருக்கு நாம் இவ்வளவு கொடுக்கணும்ன்னு வாரிசுகளிடம் மறக்காமல் சொல்லிவிட்டுப்போக உயில் உதவுமே, முருகு.

      நீக்கு
  58. சண்டி குதுர ரெண்டு பேத்துக்கும் லச்ச ரூவாக்கு எளுதி வச்சு போடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //சண்டி குதுர ரெண்டு பேத்துக்கும் லச்ச ரூவாக்கு எளுதி வச்சு போடுங்க. //

      ஆஹா, அதானே பார்த்தேன். அதிரடி அதிராவேதான், நீங்களும்.

      லட்ச ரூபாய் போதுமா முருகு. எப்படியும் எழுதறது எழுதப்போறேன். பத்து லட்சமோ ஒரு கோடியோ எழுதிடவா?

      என் மீது அதிக அன்பு செலுத்தும் இரண்டு குதிரைகளுக்கும் எவ்வளவு கொடுத்தாலும் தகும்தான்.

      ஆனாலும், எழுதிய பிறகுதான், எழுதிய தொகையை நான் சம்பாதிக்கவே ஆரம்பிக்கணும். :)

      நீக்கு
  59. ஒங்களுக்கும் ஒங்கூட்ல அல்லா பேத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //ஒங்களுக்கும் ஒங்கூட்ல அல்லா பேத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு. :)

      நீக்கு
  60. அதாரது ஞா. கலையரசிவங்க. அவங்ககுருஜிக்கு உறு துணையா இருந்துபோட்டு இன்னா ஒதவி பண்ணுனாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //அதாரது ஞா. கலையரசிவங்க. அவங்க குருஜிக்கு உறு துணையா இருந்துபோட்டு இன்னா ஒதவி பண்ணுனாக. //

      போட்டியில் அதெல்லாம் Strictly Confidential Matter ஆக்கும். இருப்பினும் இதோ இந்தப்பதிவினைப் போய்ப் பாருங்கோ, அவங்களைப்பற்றி உங்களுக்கும் தெரியவரும்.

      gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html

      ‘ஜீவீ + வீஜீ’ விருது

      நீக்கு
  61. ஆஹா தமிழ் இளங்கோ ஐயா புது டைரி தந்தாகளா.தொடர்ந்து மூணுவருசமா கொடுத்து ஹாட் ட்ரிக் கொடுத்தாகளா சந்தோசமுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //ஆஹா தமிழ் இளங்கோ ஐயா புது டைரி தந்தாகளா. தொடர்ந்து மூணுவருசமா கொடுத்து ஹாட் ட்ரிக் கொடுத்தாகளா, சந்தோசமுங்க. //

      ஆமாம் முருகு. அவர் என் மீது மிகவும் பிரியமுள்ள இனிய நண்பர். எங்கட திருச்சிக்காரர். கடந்த மூன்று ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னை என் வீட்டில் சந்தித்து, புது டயரி கொடுத்துச்செல்கிறார். இத்துடன் ஹாட்-ட்ரிக் போல தொடர்ந்து மூன்றாம் முறையாகக் கொடுத்துள்ளார். எனக்கும் சந்தோஷமே.

      நீக்கு
  62. வலையுலகில குருஜிக்கு 5--- வயசு ஆகிபோச்சா.ஐந்து வயதே ஆன குட்டி சுட்டி பாப்பாவுகளுக்கு ஜே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //வலையுலகில குருஜிக்கு 5--- வயசு ஆகிபோச்சா. ஐந்து வயதே ஆன குட்டி சுட்டி பாப்பாவுகளுக்கு ஜே.... //

      ஐந்து வயதே ஆகியுள்ள பொடிப்பையன்தான் நான். எனினும் என்னை குட்டி சுட்டிப் பாப்பா ஆக்கி ‘ஜே’ போட்டுள்ள எங்கட முருகுவுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  63. இன்னா குருஜி கடோசில தெர போட்டு மூடி போட்டீக. நல்லா ரெஸ்டு எடுத்து போட்டு தெரய வெரசா கீள எறக்கிட்டு வெளிய வாங்குருஜி. ஒங்கள ஆவலுடன் எதிர்பார்த்துகிட்டிருக்கு இந்த முருகு மின்னலு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //இன்னா குருஜி கடோசில தெர போட்டு மூடி போட்டீக. நல்லா ரெஸ்டு எடுத்து போட்டு தெரய வெரசா கீள எறக்கிட்டு வெளிய வாங்குருஜி. ஒங்கள ஆவலுடன் எதிர்பார்த்துகிட்டிருக்கு இந்த முருகு மின்னலு. //

      ஐந்து வருடங்கள் ஆனதால் மிகவும் அலுப்பாகிவிட்டது முருகு. மேலும் பழைய நட்புகளில் பலர் இப்போது வலையுலகில் இல்லாமல் எங்கோ போய் விட்டார்கள். அதில் ஒருசிலர் .ஃபேஸ்புக் பக்கம் போயிட்டாங்கோ. எனினும் தங்களின் ஆவல் + எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி, முருகு/மின்னலு. சற்றே நீண்ட ஓய்வுக்குப்பின் நானும் முயற்சிக்கிறேனம்மா.

      நீக்கு
  64. குருஜி சின்ன பொண்ணு நா.. என்னையும் மதிச்சி பெரிய ஆளாக சிறப்பித்து. இந்த பதிவினில் கொத்டு வந்துள்ள எங்கட குருஜியை நா மருக்காவும் கும்பிட்டுகிடுதேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //குருஜி சின்ன பொண்ணு நா.. என்னையும் மதிச்சி பெரிய ஆளாக சிறப்பித்து. இந்த பதிவினில் கொண்டு வந்துள்ள எங்கட குருஜியை நா மருக்காவும் கும்பிட்டுகிடுதேன். //

      நீங்க இப்போ எங்கிருந்தாலும், விரைவில் நிக்காஹ் முடிந்து உலகில் எந்த நாட்டில் எந்த ஊரில் செட்டில் ஆனாலும், செளக்யமாக, சந்தோஷமாக, மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடன் இருக்க வேண்டும். முடிந்தால் C.A. படிப்பையும் முடிக்க வேண்டும். குடும்பப் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வேண்டும். இதுவே உங்கட குருஜியின் விருப்பமாகும். உங்களுக்கு என் அன்பான ஆசிகள் முருகு.

      நீக்கு
  65. ரொம்ப நன்றிகள் குருஜி. இந்த முருகு பொண்ண மறந்துபோடாதீக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜி >>>>> முருகு

      //ரொம்ப நன்றிகள் குருஜி. இந்த முருகு பொண்ண மறந்துபோடாதீக. //

      மிக்க நன்றிம்மா. முருகு என்று செல்லப்பெயர் வைத்துள்ளதே நான் தானே. பிறகு எப்படி முருகுவை என்னால் மறக்க முடியும்? மறக்கவே மாட்டேன். நீங்களும் உங்கட குருஜியை மறந்துடாதீங்க, முருகு.

      என்றும் அன்புடன்
      உங்கள் குருஜி கோபு

      நீக்கு
  66. சாதனையாளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.
    நான் சிலகாலமாய் பயணத்திலேயே இருப்பதால் தொடர்ந்து பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் போட முடியவில்லை, மன்னிக்கவும்.
    உங்கள் வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
    புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு January 2, 2016 at 9:48 AM

      //சாதனையாளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும். நான் சிலகாலமாய் பயணத்திலேயே இருப்பதால் தொடர்ந்து பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் போட முடியவில்லை, மன்னிக்கவும்.
      உங்கள் வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டும் சாதனை படைக்க வாழ்த்துக்கள். புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர் அனைவருக்கும்.//

      வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் எவ்வளவோ பயணங்களுக்கு இடையேயும், இங்கு இன்று அபூர்வமாக வருகை தந்து கருத்தளித்து வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  67. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்! பட்டையைக் கிளப்புறீங்க! அசத்துங்க! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக் காரன் January 2, 2016 at 12:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்! பட்டையைக் கிளப்புறீங்க! அசத்துங்க! :-) //

      தங்களின் அன்பான வருகைக்கும், பட்டையைக்கிளப்பும் அசத்தலான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வேணு சார். :)

      அன்புடன் கோபு

      நீக்கு
  68. வணக்கம் கோபு சார்!சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பை இன்று தான் கண்டு களித்தேன். அனைவருக்கும் பாராட்டுக்கள்! இத்தனை படங்களைச் சேர்த்து எல்லாவற்றையும் அழகாகத் தொகுத்து அசத்தியிருக்கிறீர்கள்! பதிவுலகில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவது அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து பல்லாண்டுகள் பதிவுலகில் ஜாம்பவானாய் நீங்கள் வலம் வர வேண்டும்! நான் செய்த சிறு உதவிக்கு நன்றி கூறி என்னையும் பெருமைபடுத்தியிருப்பதற்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி January 4, 2016 at 10:47 PM

      //வணக்கம் கோபு சார்! //

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பை இன்று தான் கண்டு களித்தேன்.//

      அப்படியா ..... மிக்க மகிழ்ச்சி. மேடம் :)

      //அனைவருக்கும் பாராட்டுக்கள்! //

      மிக்க நன்றி, மேடம்.

      //இத்தனை படங்களைச் சேர்த்து எல்லாவற்றையும் அழகாகத் தொகுத்து அசத்தியிருக்கிறீர்கள்!//

      வெற்றியாளர்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பினை மிகவும் அழகாக ரசித்துச் சொல்லி, தாங்களும் அசத்தித்தான் இருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //பதிவுலகில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவது அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து பல்லாண்டுகள் பதிவுலகில் ஜாம்பவானாய் நீங்கள் வலம் வர வேண்டும்!//

      மிகச் சாதாரணமானவனாகிய என்னால் ஏதோ இதுவரை தொய்வு ஏதும் இல்லாமல் தொடர முடிந்தது, இந்த மிகச்சிறப்பான முதல் ஐந்து ஆண்டுகளின் இனிய நாட்களில் மட்டுமே.

      ஊக்கமும் உற்சாகமுமாக வாசகர்கள் தொடர்ந்து கொடுத்தவந்த பின்னூட்டங்களே இதற்கெல்லாம் காரணமாகும் என்பதை நினைக்க மிகவும் சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் உள்ளது.

      என் உடல்நிலை மற்றும் மாறிவரும் குடும்ப சூழ்நிலைகளால், இனியும் தொடர்ந்து இதுபோலவே எழுச்சியுடன் செயல்பட முடியுமா என்பது எனக்கே மிகவும் சந்தேகமாகத்தான் உள்ளது, மேடம்.

      //நான் செய்த சிறு உதவிக்கு நன்றி கூறி என்னையும் பெருமைபடுத்தியிருப்பதற்கு நன்றி.//

      ”காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” அல்லவா! தங்களுக்கு வேண்டுமானால் அது மிகச்சிறிய உதவியாக இருக்கலாம். ஆனால் .... அதனால் தக்க நேரத்தில் பயன் அடைந்த எனக்கு .... அது மிகப்பெரியதோர் உதவியாகும், மேடம். தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள், மேடம்.

      //உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! //

      மிகவும் சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நல்ல ரசனையுடன் கூடிய விரிவான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

      என்றும் நன்றியுடன் கோபு

      நீக்கு
  69. யம்மாடி எம்மாம் பெரிய பதிவு. எவ்ளோ பின்னூட்டங்கள்.

    பரிசுபெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பரிசு கொடுத்த கோபால் சாருக்கும் பாராட்டுகள். வாழ்க வளமுடன் :) இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan January 5, 2016 at 12:20 AM

      //யம்மாடி எம்மாம் பெரிய பதிவு. எவ்ளோ பின்னூட்டங்கள்.

      பரிசுபெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பரிசு கொடுத்த கோபால் சாருக்கும் பாராட்டுகள். வாழ்க வளமுடன் :) இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும் :) //

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      தங்களுக்கு தற்சமயம் உள்ள பல்வேறு வேலைகள் + நேர நெருக்கடிகளுக்கு இடையேயும், சற்றே எனக்காக நேரம் ஒதுக்கி, இங்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகள் + பாராட்டுகள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபால்

      நீக்கு
  70. வெற்றியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வாத்யாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் - பரிசுக்கும் வெரைட்டியான படிப்பனுபவத்தினை தந்தமைக்கும். விசிறிகளை உசுப்பேத்தி வெற்றிபெறச்செய்து ஆயிரம் ரூபாய் பரிசினை விசிறி வடிவினில் "விசிறி" குளுமைப்படுத்திய வாத்யாரை என்ன சொல்வது. ரோஜாப்பூ பொக்கே ஒக்கே. ஆனா இது என்னா வாத்யாரே நேரில வந்தாப்புல ஒரு ரோஜாச்செடி..(மரம்...???). அதுலயும் கஞ்சத்தனமே கிடையாது. டபுள் ஓக்கே.!!வெரைட்டியான கைதட்டல். வாத்யார் படம்னா யாராச்சும் விசில் அடிக்கணும். அந்த ஒரு படம்தான் மிஸ்ஸிங். முடிஞ்சா அதையும் சேருங்க வாத்யாரே!!!ஆடவரைவிட மகளிர் அணிவகுப்பு டாப் டக்கர். ரியாலிட்டிலயும் பல நேரம் அப்புடித்தேன் ஆகுதுங்கோ!! நன்றி நன்றி நன்றி...கடன்பட்டார் நெஞ்சம்போல...சில பேரு கடன திருப்பி வாங்கிட்டா அப்புறம் கமிட்மென்ட் இருக்காதுன்னு நெனப்பாங்க..இதுவும் அப்புடித்தான் போல இருக்கு...இல்லன்னா சொல்லுங்க நானே for போட்டு வாங்கிக்கிறேன். இதுக்கு நல்லா சப்ஸ்டிடியூட் போடுவோம்ல..பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்தும் படத்திற்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்!!! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI January 5, 2016 at 11:34 PM

      வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகப்பெரிய நகைச்சுவை மிகுந்த பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  71. கோயம்புத்தூர் மக்கள சொன்னீங்க...பி.எஸ்.என்.எல். குடும்ப மக்களப்பத்தி சொல்லலயே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI January 5, 2016 at 11:36 PM

      வாங்கோ வாத்யாரே, மீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

      //கோயம்புத்தூர் மக்கள சொன்னீங்க... பி.எஸ்.என்.எல். குடும்ப மக்களப்பத்தி சொல்லலயே...!!!//

      யூ ஆர் கரெக்ட். கோவைக்காரர்கள் மூவர் போலவே இந்தப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள சாதனையாளர்கள் மூவர் BSNL இன் நெருங்கிய தொடர்பு எல்லைக்குள் உள்ளவர்களே. :)

      நம் சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவராக இருந்து மிகச்சிறப்பாகச் செயலாற்றிய நம் உயர்திரு. ஜீவி சார் அவர்களும் ஓய்வு பெற்ற BSNL ஊழியரே என்பது தங்களுக்குத்தெரியுமோ தெரியாதோ. :)

      அன்புடன் VGK

      நீக்கு
  72. ரிப்ளை பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் January 6, 2016 at 10:50 AM

      //ரிப்ளை பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.//

      வாங்கோ, சிவகாமி. வணக்கம்மா. மிகவும் சந்தோஷம்மா :)

      பிரியமுள்ள கோ>>>>>பூ

      நீக்கு
  73. சார் ப்ரமிக்க வைக்கின்றது! எத்தனைப் பின்னூட்டங்கள் அனைத்திற்கும் தாங்கள் சோர்வில்லாமல் பொறுமையாகப் பதில் அளித்தது அருமை பரிசு பெற்றவர்களுக்கும், பரிசு கொடுத்து ஊக்குவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்! தங்களது சோர்விலா பயணம் தொடரவும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      January 6, 2016 at 11:26 PM

      வாங்கோ சார், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //சார் ப்ரமிக்க வைக்கின்றது! எத்தனைப் பின்னூட்டங்கள் அனைத்திற்கும் தாங்கள் சோர்வில்லாமல் பொறுமையாகப் பதில் அளித்தது.//

      கடந்த 10 நாட்களுக்கும் மேலாக என் ப்ளாக்கரில் ஏதேதோ விசித்திரமான பிரச்சனைகள் ஏற்பட்டு என்னைப் பாடாய்ப் படுத்தி பம்பரமாய் ஆட்டி விட்டது. நான் வெளியிட்டுள்ள இந்தப்பதிவே சரியாக வெளியிடப்பட்டுள்ளதா என நானே பார்க்க முடியாததோர் கொடுமை நிலவி வந்தது.

      சுமார் 70க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை மட்டும் என் மெயில் இன் பாக்ஸ் மூலம் படித்து மகிழ்ந்து என்னால் அவ்வப்போது பப்ளிஷ் கொடுக்க முடிந்தது.

      உடனுக்குடன் ஒவ்வொருவருக்குமான என் பதில்களை வேறொரு இடத்தில் எழுதி சேமித்து வைத்துக்கொண்டே வந்தேன்.

      வேறு யாராவது ஒரு பதிவருக்கு அவற்றை அப்படியே மெயில் மூலம் அனுப்பி, என் சார்பில் என் பதில்களை அவர்களை விட்டு வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன்.

      ஆனால் அதற்குள் ஏதோ அதிர்ஷ்டவசமாக நேற்று செவ்வாய்க்கிழமை (05.01.2016) இரவு 8 மணி சுமாருக்கு என் ப்ளாக்கர் பிரச்சனை திடீரென்று அதுவாகவே சரியாகி என் வலைப்பக்கத்தை என்னால் கண் குளிரக் கண்டு மகிழ முடிந்தது.

      உடனடியாக நேற்று இரவு முழுவதும் கண் விழித்து அனைத்துப் பின்னூட்டங்களுக்குமான என் பதில்களை வெளியிட்டு விட்டேன். இப்போதுதான் என் மனதுக்கு திருப்தியாகவும் சமாதானமாகவும் உள்ளது.

      //அருமை பரிசு பெற்றவர்களுக்கும், பரிசு கொடுத்து ஊக்குவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //தங்களது சோர்விலா பயணம் தொடரவும் வாழ்த்துகள் //

      என் பயணம் மேலும் தொடராமல் சோர்வு மட்டுமே தற்சமயம் தொடர்ந்து வருகிறது. ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதில் ஓர் அலுப்பு ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

      என்னால் முடியும் போது மீண்டும் ஒருவேளை நான் பதிவிட வந்தாலும் வருவேன். பார்ப்போம்.

      God is Great !

      தங்களின் இந்த இரண்டாவது பின்னூட்ட எண்: 148 அதற்கான என் பதில் : 149 எனக்காட்டுகிறது. இன்னும் ஒருசிலர் சற்றே தாமதமாக பின்னூட்டமிட வர வேண்டியுள்ளது. எப்படியும் மிகச்சுலபமாக இந்த எண்ணிக்கைகள் 160 ஐ எட்டிவிடக் கூடும் என நான் நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், வந்து குவிந்துள்ள பிறரின் பின்னூட்டங்களையும் அதற்கான என் பதில்களையும் பொறுமையாக வாசித்து ரஸித்து, சிலாகித்துச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  74. புதுவருட தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி January 7, 2016 at 11:43 AM

      வாங்கோ, வணக்கம். நீண்ட நெடுநாட்களுக்குப்பின் தங்களின் அபூர்வ வருகை (வருகை எண்: 150) மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //புதுவருட தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      நீக்கு
  75. ஆஹா. உங்க ப்ளாக் ப்ராப்லம் சரி ஆகி உங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் வந்த பிறகுதான் பின்னூட்டப்பெட்டிக்கே ஒரு கலகலப்பு வந்திருக்கு. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அன்பாக ரிப்ளை பண்ணி இருக்கீங்க. அந்த பூந்தளிர் மேடமும் முருகு மின்னலும் நிறயா நிறயா பின்னூட்டம் போட்டிருக்காங்களேன்னு நினைத்தேன். அவங்க ஒரோருபின்னூட்டத்துக்கும் சளைக்காம ரிப்ளை பண்ணி அசத்தி இருக்கீங்க. சந்தோஷமா இருக்கு

    பதிலளிநீக்கு
  76. ஸ்ரத்தா, ஸபுரி... January 7, 2016 at 12:22 PM

    வாங்கோ வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //ஆஹா. உங்க ப்ளாக் ப்ராப்லம் சரி ஆகி உங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் வந்த பிறகுதான் பின்னூட்டப்பெட்டிக்கே ஒரு கலகலப்பு வந்திருக்கு. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அன்பாக ரிப்ளை பண்ணி இருக்கீங்க.//

    ஆஹா, என் பதில்கள் ஒவ்வொன்றையும்கூட மிகவும் ரஸித்துப்படித்திருப்பீர்கள் போலிருக்கு. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    //அந்த பூந்தளிர் மேடமும் முருகு மின்னலும் நிறயா நிறயா பின்னூட்டம் போட்டிருக்காங்களேன்னு நினைத்தேன். //

    இவர்கள் இருவரும் மட்டும், இந்த ஒரேயொரு பதிவுக்கு மட்டும், போட்டி போட்டுக்கொண்டு இவ்வளவு பின்னூட்டங்கள் அனுப்பியிருக்கிறார்களே என எனக்கே மிகவும் வியப்பாகிப் போனது.

    இருவரும் மொபைல் ஃபோனில் பின்னூட்டமிடுபவர்களாக இருப்பதால், சின்னச் சின்னதாக பாயிண்ட் பாய்ண்டாக பிரித்துப் பிரித்து, அழகாக எழுதி அனுப்பி அசத்தியுள்ளார்கள்.

    இருவரும் என் மீது மிகவும் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்கள்.

    ’பூந்தளிர்’ பல்லாண்டுக்கு பின் மீண்டும் எனக்குக் கிடைத்ததோர் புதையல். அவர்கள் கணினி உபயோகித்த காலமான 2013-இல் தங்களைப்போலவே ஏராளமாகவும் தாராளமாகவும் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு என்னை மகிழ்வித்திருந்தார்கள்.

    நடுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் ’பூந்தளிர்’ என்ற புதையல் காணாமல் போனதால் நான் உண்மையிலேயே தவியாய்த் தவித்துப்போனேன்.

    மீண்டும் 2015 ஏப்ரல் மாதம் (24.04.2015 அன்று) ’பூந்தளிர்’ என்ற புதையல் எனக்குத் திரும்பிக்கிடைத்ததில், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். :)

    முருகு சமீபத்தில் 07.10.2015 மட்டுமே எனக்குக் கிடைத்துள்ள புது வாசக நட்பு. அவளின் வெள்ளந்தியான குழந்தைத்தனமும், கொச்சைத் தமிழ் பிரயோகமும், குறிப்பாக அவள் மனம் திறந்து எழுதியுள்ள உருக்கமான நேயர் கடிதமும் http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html என்னையும் மற்றவர்களையும் மிகவும் கவர்ந்து விட்டன.

    //அவங்க ஒரோருபின்னூட்டத்துக்கும் சளைக்காம ரிப்ளை பண்ணி அசத்தி இருக்கீங்க. சந்தோஷமா இருக்கு //

    நான் ஒவ்வொருவருடனும் இன்றுவரை என் நட்பினைத் தொடர இவ்வாறான அவர்களின் பின்னூட்டங்களும், அவர்கள் ஒவ்வொருவருக்கான என் பதில்களுமே காரணமாக அமைந்துள்ளன. எனக்கும் இதில் ஓர் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் அடங்கித்தான் உள்ளது. :)

    பதிவுலகில் கடந்த ஐந்து ஆண்டுகளில், நான் இதுபோல பெற்றதும் இழந்ததும் மிகவும் ஏராளமாகவே உள்ளன.

    தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அசத்தலான பல்வேறு கருத்துக்களுக்கும், மீண்டும் என் நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  77. கோபு அண்ணா,
    உங்க ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க நம்மால முடியாதுப்பா.

    31.12.2015 கிளம்பி பாலக்காடு போயிட்டு 03.01.2016 சென்னை திரும்பி வந்தேன். ஆனா இப்பதான் கணினி முன்னாடி உக்காரறேன். அழைப்பு வந்தா எழுந்து போயாகணும்.

    அடுத்த ஜென்மத்துல கோபு அண்ணாவா பொறக்கணும்ன்னு வேண்டிக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 6:18 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //கோபு அண்ணா, உங்க ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க நம்மால முடியாதுப்பா.//

      நான் ஸ்பீடா? இதை 2016-ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக் ஆக நினைத்து எனக்குள் சிரித்துக்கொள்கிறேன்.

      சென்ற வருஷம் 31.12.2015 அன்று இந்தப்பதிவுக்குப் பின்னூட்டங்கள் கொடுத்துள்ளவர்களுக்கு, வாழைப்பழச் சோம்பேறியான என்னால் இந்த வருஷம் 05.01.2016 க்கும் 06.01.2016 க்கும் இடைப்பட்ட நள்ளிரவு மட்டுமே பதில் அளிக்க முடிந்துள்ளது. என்னைப்போய் இப்படி அநியாயமாக ‘ஸ்பீடு’ என்கிறீர்களே, ஜெ ! வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது இதுதானோ?

      //31.12.2015 கிளம்பி பாலக்காடு போயிட்டு 03.01.2016 சென்னை திரும்பி வந்தேன். ஆனா இப்பதான் கணினி முன்னாடி உக்காரறேன். அழைப்பு வந்தா எழுந்து போயாகணும்.//

      அங்கு போய் ...
      ”பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா .....
      அவர் பழக்கத்திலே குழந்தையைப்போல் ஒரு அம்மாஞ்சி ராஜா .........” ன்னு டூயட் பாட்டுப் பாட்டுப்பாடினீங்களா, ஜெயா :)

      //அடுத்த ஜென்மத்துல கோபு அண்ணாவா பொறக்கணும்ன்னு வேண்டிக்கறேன்.//

      நான் அப்போ ஜெயாவாகப் பிறந்து, ஊசி பச்சமிளகாய் போல அழகாகவும், மூக்கும் முழியுமாகவும், ஸ்லிம்மாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், பாலக்காட்டுக்கு ஜாலியாக என் ஹப்பியுடன் பயணம் செய்துகொண்டிருப்பேனோ என்னவோ ! :)

      நீக்கு
  78. முதல்ல இருக்கற இரண்டு மான்களில் ஒண்ணு பூந்தளிர், இரண்டாவது முருகு.

    அம்மாடி ரெண்டு பொண்ணுங்களும் இப்படி பாய்ஞ்சு, பாய்ஞ்சு பின்னூட்டம் கொடுத்துட்டாங்களே.

    கோயம்புத்தூர்க்காரங்க ரொம்ப நல்லவங்கன்னு தெரியும். ஆனா இப்படி மொத்தமா விருதுகளை குத்தகை எடுப்பாங்கன்னு தெரியாம போச்சே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 6:21 PM

      //முதல்ல இருக்கற இரண்டு மான்களில் ஒண்ணு பூந்தளிர், இரண்டாவது முருகு.//

      அதே அதே .... சபாபதே ! மிகச்சரியாகச் சொல்லிட்டீங்கோ.

      ஆனால் அவர்கள் இடத்தில் நான் ஜெயாவையும் இன்னொருத்தரையும்தான் துள்ளிவரும் புள்ளி மான்களாக எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

      //அம்மாடி ரெண்டு பொண்ணுங்களும் இப்படி பாய்ஞ்சு, பாய்ஞ்சு பின்னூட்டம் கொடுத்துட்டாங்களே.//

      பாய்ஞ்சு பாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு பின்னூட்டங்கள் கொடுத்து என்னையே அப்படியே மயக்கமடையச் செய்துட்டாங்கோ ஜெயா. இன்னும் எனக்கு மயக்கமே தெளியவில்லையாக்கும்.

      //கோயம்புத்தூர்க்காரங்க ரொம்ப நல்லவங்கன்னு தெரியும். ஆனா இப்படி மொத்தமா விருதுகளை குத்தகை எடுப்பாங்கன்னு தெரியாம போச்சே.//

      நல்லவர்கள், வல்லவர்கள், ஸ்பீடு கிங் + ஸ்பீடு குயின் போன்றவர்களும்கூட. சிறுகதை விமர்சனப்போட்டிக்கு விமர்சனங்கள் அனுப்பும்போதும் அப்படித்தான் அவர்கள். போட்டிக்கான என் கதையை நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியிட்டவுடன் முதல் ஓரிரண்டு விமர்சனங்கள் படு ஸ்பீடாக கோவையிலிருந்துதான் எனக்குக் கிடைத்து வந்தனவாக்கும்.

      அவை என்றும் என்னால் மறக்கவே முடியாத மகத்தான நாட்கள் ஆகும். மிகப்பசுமையான நினைவலைகள். :)

      நீக்கு
  79. இப்படி எங்களோட வெற்றிக்கு மாய்ஞ்சு, மாய்ஞ்சு கை வலிக்க கை தட்டறாங்களே அவங்களுக்கு வெற்றியாளர்கள் சார்பில் ஒரு சிரம் தாழ்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 6:23 PM

      //இப்படி எங்களோட வெற்றிக்கு மாய்ஞ்சு, மாய்ஞ்சு கை வலிக்க கை தட்டறாங்களே அவங்களுக்கு வெற்றியாளர்கள் சார்பில் ஒரு சிரம் தாழ்ந்த நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தது போல சிலமுறை எனிமா (எனிமா = பின்னூட்டங்கள்) கொடுத்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  80. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் January 7, 2016 at 7:47 PM

      வாங்கோ, சார். வணக்கம்.

      //வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  81. //
    இதுபோல நான் கேட்ட தகவல்களை இன்றுவரை எனக்கு அளிக்காமல், இழுத்தடித்துக் கடுக்காய் கொடுத்துவரும் இரண்டு சண்டிக்குதிரைகளும் இதில் உள்ளனர். என் மீதுள்ள ஒருவித ஆத்மார்த்தமான பிரியத்தினால், இவர்கள் இருவரும் மட்டும் நேரில் என்னை சந்திக்கும்போது பரிசினை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள். //

    ம்க்கும். எங்களுக்கு மட்டும் பிரியம் இல்லையாக்கும். நான் கூடதான் நேர வந்து வாங்கிக்கறேன்னு சொன்னேன். பிடிவாதமா அனுப்பி வெச்சுட்டீங்க. பரவாயில்லை. முன்னாடியே கிடைச்சது சந்தோஷம்தான். ஹி, ஹி, ஹி, ஹி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 7:48 PM

      **இதுபோல நான் கேட்ட தகவல்களை இன்றுவரை எனக்கு அளிக்காமல், இழுத்தடித்துக் கடுக்காய் கொடுத்துவரும் இரண்டு சண்டிக்குதிரைகளும் இதில் உள்ளனர். என் மீதுள்ள ஒருவித ஆத்மார்த்தமான பிரியத்தினால், இவர்கள் இருவரும் மட்டும் நேரில் என்னை சந்திக்கும்போது பரிசினை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள்.**

      //ம்க்கும். எங்களுக்கு மட்டும் பிரியம் இல்லையாக்கும்.//

      அதுபோல நான் சொன்னேனா, இல்லை சொல்வேனா, ஜெயா. நம் பிரியம் தான் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த, உலகப் பிரஸித்தி பெற்ற விஷயம் ஆச்சே ஜெயா. :)

      //நான் கூடதான் நேர வந்து வாங்கிக்கறேன்னு சொன்னேன். பிடிவாதமா அனுப்பி வெச்சுட்டீங்க. பரவாயில்லை.//

      ஆமாம் ஜெயா. நீங்களும் அதுபோலத்தான் சொன்னீங்க. நான் தான் UNPAID CASES அதிகமாக என்னிடம் வைத்துக் கொள்ள விரும்பாமல் தங்களுக்கு அனுப்பி வைத்தேன்.

      அதனால் என்ன, ஜெயாவுக்கு எப்போதெல்லாம் விருப்பமோ அப்போதெல்லாம் பிறந்தாத்துக்கு வந்து இந்த கோபு அண்ணாவை சந்தித்துவிட்டுப் போகலாம். கவலையை விடுங்கோ ஜெ.

      //முன்னாடியே கிடைச்சது சந்தோஷம்தான். ஹி, ஹி, ஹி, ஹி.//

      தீபாவளி சமயம் இந்தப்பரிசு பற்றி ஒரு தனிப்பதிவே தங்களால் வெளியிட முடிந்ததே; சந்தோஷம் இல்லாமல் இருக்குமா, என்ன.

      http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

      எனக்கும் சந்தோஷமே.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  82. சாதனையாளர்கள்

    பூந்தளிர் சிவகாமி
    திரு இராஜராஜேஸ்வரி
    திரு பழனி கந்தசாமி
    திருமதி ஜெயந்தி ரமணி (ஹி ஹி ஹி நான் தான். நானே தான்).
    செல்வி முருகு
    திரு ஸ்ரீவத்ஸன் (சரணாகதி)
    திரு ரவிஜி ரவி
    திரு சேஷாத்ரி

    அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 7:51 PM

      சாதனையாளர்கள்

      பூந்தளிர் சிவகாமி
      திரு இராஜராஜேஸ்வரி
      திரு பழனி கந்தசாமி
      திருமதி ஜெயந்தி ரமணி (ஹி ஹி ஹி நான் தான். நானே தான்).
      செல்வி முருகு
      திரு ஸ்ரீவத்ஸன் (சரணாகதி)
      திரு ரவிஜி ரவி
      திரு சேஷாத்ரி

      அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ.

      //திருமதி ஜெயந்தி ரமணி (ஹி ஹி ஹி நான் தான். நானே தான்).//

      :) நான் வேறு யாரோ என்னவோன்னு நினைச்சுப் போட்டேன். ஹி...ஹி...ஹி... மிக்க நன்றி, ஜெ.:)

      நீக்கு
  83. ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையேங்கற பழமொழிக்கு ஏத்தா மாதிரி ’கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும்’ அரசியல்வாதியில் இருந்து அலட்டல் பேர்வழிகள் வரை அதிகம் இருக்கும் இந்தக் காலத்துல,

    சொந்தப் பணத்தை வலையுக பதிவர்களுக்கு போட்டி வைத்து பரிசாக அள்ளிக் கொடுத்திருக்கற உங்கள என்ன சொல்ல.

    ‘மலைக்கோட்டை மாவள்ளல்’ வாழ்க, வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 7, 2016 at 8:07 PM

      //‘மலைக்கோட்டை மாவள்ளல்’ வாழ்க, வாழ்க.//

      எது நடந்தாலும், மலைக்கோட்டை போல இம்மியும் அசையாமல் இருக்கும் என்னைப்போய், ஏதாவது சொல்லி அசைக்கப் பார்க்கிறீர்களே, ஜெயா. :)

      எனினும் தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள், ஜெ.

      நீக்கு
  84. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், எனினும் என்ன வை.கோ அவர்களே உங்களை அத்தனை எளிதில் எப்படி இத்தனை நண்பர்களும் விடைபெற்றுக்கொள்ள அனுமதித்தார்கள். மீண்டும் வாருங்கள். உங்கள் பதிவு மழையில் நனைய பல பதிவர்கள் காத்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha January 8, 2016 at 7:05 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம். உங்களைப்பார்த்தே பல மாதங்கள் (வருஷங்கள்) ஆச்சு. நல்லா இருக்கீங்களா?

      //வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்//

      மிக்க மகிழ்ச்சி, சந்தோஷம். மிக்க நன்றி.

      //எனினும் என்ன வை.கோ அவர்களே உங்களை அத்தனை எளிதில் எப்படி இத்தனை நண்பர்களும் விடைபெற்றுக்கொள்ள அனுமதித்தார்கள்.//

      பெரும்பாலும் புதியவர்களான இவர்களிடம் என்ன அனுமதி கேட்டு விடைபெற்றுக் கொள்வது என நினைத்து, நானே நைஸாகக் கம்பி நீட்டிவிட்டேன்.

      //மீண்டும் வாருங்கள். உங்கள் பதிவு மழையில் நனைய பல பதிவர்கள் காத்திருக்கின்றனர். //

      தங்களைப் போன்ற, (2011-12 ஆம் ஆண்டு) பழைய வலையுலக நட்புகள் + பதிவர்கள் யாரையும் இப்போது கண்ணால் காணவே முடியாமல் அல்லவா உள்ளது.

      வழிகாட்டிகளான, உங்கள் எல்லோருடைய வழியையும் மட்டுமே நானும் இப்போது பின்பற்ற நினைத்துள்ளேன். :)

      தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி, ஷக்தி.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. அன்புள்ள ஷக்தி,

      Please refer my Post: http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
      தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY

      அதில் நான் தங்களைப்பற்றி சிறப்பித்து எழுதியுள்ள வரிகள் இதோ:

      [**** புதிதாக வருகை தந்துள்ள Ms. ஷக்திபிரபா அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலும், ஊன்றிப்படித்தல் என்ற தனித்தன்மையும், மிகச்சரியாக திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் கருத்துக்களும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன. அவர்களுக்கு என்னுடைய கூடுதல் சிறப்பு நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் **** ]

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஷக்தி (2)

      அதற்குத் தங்களின் விரிவான பின்னூட்டம் இதோ:

      Shakthiprabha November 13, 2011 at 10:05 PM

      உங்க கதைகளைப் போலவே நன்றிப் பதிவு கூட சுவாரஸ்யமாக இருக்கிறது. நிஜமாகவே, தற்கால சூழலில் ஜனரஞ்சகமாக "சிறுகதை எழுதுவது எப்படி" என்று நீங்கள் வகுப்பெடுக்கலாம்.

      நான் தங்கள் வலைப்பதிவின் சுட்டியை "ஜீவி-பூவனம்" அவர்களின் பதிவில் தான் கண்டேன். அதன் பின் ஜி.எம்.பி சார் அவர்களின் பதிவிலும் பார்த்தேன். அடுத்த சில தினங்களில் "நட்சத்திர பதிவராக" தாங்கள் அமர்ந்திருந்தது, மலைப்பாகவும் உங்களின் பதிவுகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஊட்டுவதாகவும் இருந்தது.

      குட்டிக் குட்டி உற்சாங்கங்களே மனிதனை இயங்கவைக்கும் சக்தி. அவ்வகையில் நல்ல சிறுகதை எழுத்தாளருக்கு நானும் ஒரு பங்குக்கு சிறு உற்சாகம் அளித்தேன் என்ற நினனப்பே எனக்கு நிறைவைத் தருகிறது.

      இந்த ஒரு வாரத்தில் உங்கள் கதைகளில் சிலவற்றை என் கணவரிடமும், ஒன்றிரண்டை என் அம்மாவிடமும் பகிர்ந்து, சிலாகித்திருக்கிறேன்.

      உங்கள் நட்சத்திர பதிவுக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த 6 கதைகள் (in that same order)

      1. ஜாங்கிரி
      2. உடம்பெல்லாம் உப்புச்சீடை
      3. பூபாலன்
      4. ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
      5. நல்ல காலம் பிறக்குது
      6. பிரமோஷன்

      இன்னும் நிறைய எழுதுங்கள். உங்களுக்கு இந்த நட்சத்திரவாரத்திலேயே நிறைய பேர் விசிறிகள் ஆகியிருப்பார்கள்.

      "Happy இன்று முதல் Happy" என்ற தலைப்பை பார்த்ததும் "அப்பாடா ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சுது, இனி ஜாலி தான்" ன்னு குஷியாகி குதிக்கிற பசங்க நினைவில் வருகிறார்கள். :))) (just for jest :D ) நட்சத்திர பதிவர் என்றால் எளிதானது அல்ல என்பதை பலர் சொல்லி உணர்கிறேன். அதை மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> ஷக்தி (3)

      2014-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் நேரத்தில் ஆரம்பித்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி வரை என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக தொய்வின்றி நான் 40 வாரங்களுக்கு நடத்திய ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் ... முதல் கதையான ... தங்களுக்கு மிகவும் பிடித்தமான ‘ஜாங்கிரி’ கதைக்கு, விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் முதன் முதலாக இரண்டாம் பரிசினை முழுவதுமாகப் [Not Sharing] பெற்று மகிழ்வித்தீர்கள்.

      Please Refer:
      http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-02-03.html

      அதில் தங்களின் பின்னூட்டம் இதோ:

      Shakthiprabha January 28, 2014 at 12:48 PM

      இத்தகு மேடை அமைத்துக்கொடுத்த வை.கோ சார் அவர்களுக்கு மிக்க நன்றி. கதை அருமையாக இருந்தால் தான் விமர்சனம் எழுத வரும். ஆகவே அனைத்து பெருமையும் கதைக்கே. நடுவர்கள் குழு என் விமர்சனத்தை ரசித்து இரண்டாம் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி. என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள் பல. நேரமின்மையால் உடன் பதிலிடமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும். அனைவருக்கும் பெரும் நன்றி. என் மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்ளுங்கள் :)

      -=-=-=-=-=-

      அதன்பின் அந்தத் தொடர் போட்டிகளில் உங்களை என்னால் பார்க்கவே முடியாமல் போனதில் மிகவும் வருத்தமே.

      ஏதோ இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து இங்கு சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. சொல்லி விட்டேன். மிக்க நன்றி, ஷக்தி.

      அன்புடன் கோபு

      நீக்கு
    5. கோபு >>>>> ஷக்தி (4)

      மின்மினிப்பூச்சிகள் எப்போதாவது தான் நம் கண்களில் தென்படும். அதுபோலவே ‘மின்மினிப்பூச்சிகள்’ என்ற வலைப்பதிவராகிய ஷக்திப்ரபா அவர்களும். :)

      தங்களுக்கு என் அன்பான ஆசிகளும் வாழ்த்துகளும்.

      எங்கிருந்தாலும், என்றும் ’ஷக்தி’ செளக்யமாக க்ஷேமமாக அனைத்து சந்தோஷங்களுடனும் வாழ்க வாழ்க என பிரார்த்தித்துக்கொள்கிறேன் !

      நீக்கு
  85. சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள். வள்ளலாய் அள்ளித்தரும் வைகோசாருக்கு அரங்கன் மேலும் பொருள் வளம் தரட்டும்! அவருடைய நல்ல மனம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா January 8, 2016 at 7:48 PM

      ஆஹா, பச்சைக்கிளி ஒன்று பறந்துவந்து இங்கு அமர்ந்துள்ளதே .. பார்க்கவே பரவஸமாக உள்ளதே! :)

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

      //வள்ளலாய் அள்ளித்தரும் வைகோசாருக்கு அரங்கன் மேலும் பொருள் வளம் தரட்டும்! அவருடைய நல்ல மனம் வாழ்க!//

      ஆஹா, பிறந்தகம் ஸ்ரீரங்கமான தங்களின் நல்வாக்கு பள்ளிகொண்ட பெருமாள் அரங்கன் காதில் விழுந்து, அவர் அருளால் அப்படியே பலிக்கட்டும்.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், நல்ல மனதுடன் + மணத்துடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  86. I am moved............ you have recollected so much of our interactions.... உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆசிக்கு என்றும் பெருமகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் கதைகளில் பலப் பல சிறுகதைகள் இன்றும் என் மனம் கவர்ந்தவை. பூபாலன் special....அப்புறம் இன்னொரு சிறுகதை, இளவயது காதலை மீண்டும் சந்திக்கும் தருணங்களை விவரிக்கும் கதை............. இன்னும் நிறைய எழுதவேண்டும். இராஜராஜேஸ்வரி போன்றோர்களும் இங்கு எழுதுவதில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha January 9, 2016 at 11:41 AM

      வாங்கோ ஷக்தி, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //I am moved............ you have recollected so much of our interactions.... உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆசிக்கு என்றும் பெருமகிழ்ச்சியும் நன்றியும்.//

      மிகவும் சந்தோஷம்மா.

      //உங்கள் கதைகளில் பலப் பல சிறுகதைகள் இன்றும் என் மனம் கவர்ந்தவை. பூபாலன் special....அப்புறம் இன்னொரு சிறுகதை, இளவயது காதலை மீண்டும் சந்திக்கும் தருணங்களை விவரிக்கும் கதை............. இன்னும் நிறைய எழுதவேண்டும்.//

      2011 நவம்பரில் என்னால் வெளியிடப்பட்டிருந்த ‘பூபாலன்’ கதை, மீண்டும் மீள் பதிவாக 2014 செப்டம்பரில் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்காக மீண்டும் என்னால் வெளியிடப்பட்டுள்ளது. இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35.html

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஷக்தி (2)

      இளவயது காதலை மீண்டும் சந்திக்கும் தருணங்கள் எனத் தாங்கள் சொல்லியுள்ளது ’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் கதையாகும்.

      என் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான கதை அது. இந்த என் கதையை இதுவரை படிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்கள், கொடுப்பிணை இல்லாத துரதிஷ்டசாலிகள் மட்டுமே, என்பது என் எண்ணமாகும். :)

      2011 ஜூன் மாத இறுதியில் நான்கு சிறுபகுதிகளாகப் பிரித்து என்னால் வெளியிடப்பட்ட கதை ‘மறக்க மனம் கூடுதில்லையே’.

      நான் பதிவுலகுக்கு வந்து ஆறே மாதங்களுக்குள் வெளியிட்டிருந்த இந்தக்கதை வாசகர்களிடையே மாபெரும் வரவேற்பினை எனக்குப் பெற்றுத்தந்தது. என் பதில்கள் ஏதும் இல்லாமலேயே அந்த நான்கு பகுதிகளுக்கும் சேர்த்து 250க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் எனக்குக் கிடைத்திருந்தன.

      உங்களின் நட்பு எனக்கு 2011 நவம்பர் முதல் மட்டுமே கிடைத்ததால், அந்த சிறுகதையின் நான்கு பகுதிகளிலுமே தங்களின் பின்னூட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

      அந்த நான்கு சிறு பகுதிகளிலும் நம் ரிஷபன் சார், சுந்தர்ஜி சார், மோஹன்ஜி, சேட்டைக்காரன் வேணு சார், தி. தமிழ் இளங்கோ சார், S. ரமணி சார், A.R. ராஜகோபாலன் சார், ஸ்ரீராம், ரியாஸ் அஹமத், VENKAT Sir, திருமதிகள்: இராஜராஜேஸ்வரி மேடம், சாகம்பரி மேடம், மனோ சாமிநாதன் மேடம், ரஞ்ஜனி மேடம், ஏஞ்ஜலின், தேனம்மை மேடம், அப்பாவித் தங்கமணி மேடம், வித்யா சுப்ரமணியம் மேடம் போன்ற சில பிரபலங்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்கள் விலை மதிப்பற்றவைகளாகும்.

      அதே ‘மறக்க மனம் கூடுதில்லையே’ கதையும் 2014-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், சிறுகதை விமர்சனப்போட்டிக்கு மீள் பதிவாக, பல்வேறு புதிய படங்களுடன், என்னால் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

      இந்தப் போட்டிக் கதைக்கு தாங்களும் விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தீர்கள். அது என்னிடம் பத்திரமாக பொக்கிஷமாக இன்றும் உள்ளது. அடிக்கடி அவற்றையெல்லாம் எடுத்து நான் படித்து மகிழ்வதுண்டு. :)

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஷக்தி (3)

      //இராஜராஜேஸ்வரி போன்றோர்களும் இங்கு எழுதுவதில்லையா? //

      அவர்களுக்கும் என்னைப்போலவே இந்த மாதத்துடன் (On 20/01/2015) வலையுலகுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

      ஆடி ... ஓடி ... பாடியபடி தினமும் ஒரு பதிவு வீதம் உற்சாகமாகவே எழுதி வந்தார்கள் ... 2014 வரை ... முதல் 1500 பதிவுகள் வெளியிடும்வரை.

      அதன் பிறகு கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டார்கள்.

      இப்போது ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் என பதிவு எழுதி வெளியிட்டு வருகிறார்கள்.

      இன்று கூட மார்கழி மாத அமாவாசையும், ஹனுமத் ஜயந்தியும், மூலா நக்ஷத்திரமும், ஸ்திர வாரமாகிய சனிக்கிழமையும் சேர்ந்துள்ளதால் ‘மனதுக்கினிய ஸ்ரீ ராமாஞ்சனேயர்’ என்ற தலைப்பில் சூப்பராக ஒரு பதிவு கொடுத்துள்ளார்கள். இதோ இணைப்பு:

      http://jaghamani.blogspot.com/2016/01/blog-post_9.html

      என்னைப்போலவே அவர்களுக்கும் உள்ளத்தில் உற்சாகம் இருப்பினும், உடல்நிலை ஒத்துழைக்காமல் இருப்பதுபோல என்னால் நன்கு உணர முடிகிறது.

      என் பக்கம் வந்து அவர்கள் நிறைய பின்னூட்டங்கள் இடுவதும் இப்போதெல்லாம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. :(

      இருப்பினும், நான் இதுவரை வெளியிட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் (2+806=808) அவர்களின் பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      முன்பெல்லாம் என் ஒவ்வொரு பதிவின் பின்னூட்டப் பகுதிகளிலும், இவர்களின் செந்தாமரை அதிக எண்ணிக்கையில் பூத்துக்குலுங்கி, தாமரைத் தடாகமாகக் காட்சியளித்து, என்னை மகிழ்விக்கும். அவற்றை என்னால் என்றும் ’மறக்க மனம் கூடுதில்லையே !’

      நான் இன்று புதுப்பதிவுகள் ஏதும் தர விரும்பாமல் பதிவுலகிலிருந்து விலகிக்கொள்ள விரும்புவதற்கு மூல காரணமே, இவர்களைப்போன்ற (+ ஷக்தியைப் போன்ற) நல்லோர்களின் + என் நலம் விரும்பிகளின் தொடர் ஆதரவும், ஊக்கமும், உற்சாகமும் முன்பு போல எனக்குத் தொடர்ந்து கிடைக்காததால் மட்டுமே எனக் கூறிக்கொண்டு, தங்களுக்கான என் பதிலை நிறைவு செய்து கொள்கிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  87. Sir...u r an amazing person! Wish u a happy new year and many many years of happy blogging!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ashok January 9, 2016 at 2:33 PM

      //Sir...u r an amazing person! Wish u a happy new year and many many years of happy blogging!

      Welcome Sir, Thank you Sir, Thanks a Lot Sir. - vgk

      நீக்கு
  88. இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்.?????...... நீங்க தகவல் தரலைனா மறந்தே போயிப்பேன். பதிவு பெ..........ரி........சா .........இருக்கேன்னு பாத்தா பின்னூட்டங்கள். அதைவிட பெ.......ரி......சா.......... சுவாரசியமாக இருக்கு..நினைத்ததை வெற்றிகரமாக சாதிச்சு காட்டிட்டீங்க.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... January 9, 2016 at 5:52 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்.?????...... நீங்க தகவல் தரலைனா மறந்தே போயிருப்பேன்.//

      இந்த ஒரு தொடருக்கு மட்டும் தாங்களும் தங்கள் நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். இந்த இறுதிப்பகுதிக்கு மட்டும் தாங்கள் இருவரும் வருகை தராததால், நான் உங்களுக்கும் அவருக்குமாக சேர்த்து ஸ்பெஷலாகத் தங்களுக்கு மட்டும் ஓர் தகவல் அளித்திருந்தேன். இப்போ ’ஆல் இஸ் வெல்’ ஆகிப் போனதில் மகிழ்ச்சியே. :)

      //பதிவு பெ..........ரி........சா ......... இருக்கேன்னு பாத்தா பின்னூட்டங்கள். அதைவிட பெ.......ரி......சா.......... சுவாரசியமாக இருக்கு.. நினைத்ததை வெற்றிகரமாக சாதிச்சு காட்டிட்டீங்க.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  89. மறுபடி மறுபடி வந்து கொண்டே இருக்க தோணுதே. பதிவை நிதானமாக படிச்ச பிறகும்கூட மேலும் மேலும் என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கு அதற்கு தாங்கள் என்ன ரிப்ளை பண்ணி இருக்கீங்கன்னு தெரிந்து கொள்ள மறுபடி வந்துவிட்டேன். சிலபேருக்கு ரெண்டு மூணு வாட்டில கூட ரிப்ளை பண்ணி இருக்கீங்க. எல்லாமே வெகு சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 10, 2016 at 10:08 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மீண்டும் மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //மறுபடி மறுபடி வந்து கொண்டே இருக்க தோணுதே. பதிவை நிதானமாக படிச்ச பிறகும்கூட மேலும் மேலும் என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கு .. அதற்கு தாங்கள் என்ன ரிப்ளை பண்ணி இருக்கீங்கன்னு தெரிந்து கொள்ள மறுபடி வந்துவிட்டேன்.//

      அதுதான் உங்களைப்போன்ற + என்னைப்போன்ற சிலரின் ஸ்பெஷாலிடியே. அதுபோல என் வாசகர்கள் நிறைய பேருக்குத் தோணும்தான். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு கூச்சத்தினால் வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். :) இந்தப்பதிவு + பரிசளிப்பு எல்லாமே பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்டவை அல்லவா. அதனால் வந்து குவியும் பின்னூட்டங்களும், அதற்கான என் பதில்களும் தங்களைப்போன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் படிக்கணும் என்ற தாகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில் வியப்பேதும் இல்லைதான்.

      //சிலபேருக்கு ரெண்டு மூணு வாட்டில கூட ரிப்ளை பண்ணி இருக்கீங்க. எல்லாமே வெகு சுவாரசியம்.//

      ஆமாம். அவர்களும் வெகு சுவாரஸ்யமானவர்களே. அவர்களுடனான என் நட்பும் சுவாரஸ்யமானவைகளே என்பதால் இருக்கக்கூடும்.

      மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  90. சார் வனக்கம். உங்க பதிவுகள் சில படிச்சிருக்கேன். பின்னூட்டம் போட முடியலே. ஜி.மெயில் ஐ.டி. மட்டும் இருந்தா கமெண்ட் போட முடியாது போலன்னு நினைத்து இன்று புதிதாக வலைப்பூ ஆரம்பித்து இரண்டு பதிவும் போட்டிருக்கேன். பதிவு பக்கம் வரணும் சார்.
    பின்னூட்ட சாதனையாளர் பதிவு ரொம்ப சிறப்பாக இருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வளவு சிறப்பாக ஒரு போட்டி வைத்து விருது பரிசு கொடுத்து சந்தோஷப்படுத்தியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இனி அடிக்கடி உங்க பதிவுகள் பக்கம் என்னைப்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. dhasara637 January 11, 2016 at 12:02 PM

      //சார் வ ண க் க ம்.//

      வாங்கோ வணக்கம். என் வலைப்பதிவுப் பக்கம் தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. WELCOME!

      //உங்க பதிவுகள் சில படிச்சிருக்கேன். பின்னூட்டம் போட முடியலே. ஜி.மெயில் ஐ.டி. மட்டும் இருந்தா கமெண்ட் போட முடியாது போலன்னு நினைத்து இன்று புதிதாக வலைப்பூ ஆரம்பித்து இரண்டு பதிவும் போட்டிருக்கேன்.//

      இருக்கலாம். எப்படியோ முயன்று இறுதியில் வெற்றிபெற்று இன்று ஓர் பின்னூட்டம் எழுதி அனுப்பி விட்டீர்களே! சபாஷ். வெரி குட். :)

      தங்களின் புதிய வலைப்பூவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

      //பதிவு பக்கம் வரணும் சார்.//

      உங்கள் வலைப்பக்கம் FOLLOWER ஆக PROVISION ஏதும் வைக்காததால், தாங்கள் வெளியிடும் புதிய பதிவுகள் டேஷ்-போர்டு மூலம் என் கவனத்திற்கு அவ்வப்போது வராமல் போகக்கூடும். எனவே தாங்கள் வெளியிடும் புதிய பதிவுகளுக்கு, இதுபோல தகவல் அளித்தால் மட்டுமே, என்னால் அங்கு வர முயற்சிக்கப்படும். மெயில் மூலமும் தாங்கள் எனக்குத் தகவல் அளிக்கலாம்.

      My Mail ID: valambal@gmail.com

      //பின்னூட்ட சாதனையாளர் பதிவு ரொம்ப சிறப்பாக இருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //இவ்வளவு சிறப்பாக ஒரு போட்டி வைத்து விருது பரிசு கொடுத்து சந்தோஷப்படுத்தியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      அன்பான வருகைக்கும், சந்தோஷத்துடன் கூடிய அழகான வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

      //இனி அடிக்கடி உங்க பதிவுகள் பக்கம் என்னைப்பார்க்கலாம்.//

      இதனைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      ஸ்ரத்தா, ஸபுரி... என்னும் நண்பர் தினமும் என் பழைய பதிவுகளில் (2011 ஜனவரி முதல் வரிசையாக) ஒன்று அல்லது இரண்டு வீதம் தேர்ந்தெடுத்து பொறுமையாகப் படித்து, மிகவும் சிறப்பாக பின்னூட்டம் அளித்து வருகிறார். அவரைப் போலவே தாங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

      WELCOME ! Bye for now. அன்புடன் VGK

      நீக்கு
  91. இன்று என் பின்னூட்டத்திற்கான தங்கள் சிறப்பான பதிலைப் படித்தேன். தங்கள் அன்புக்கு நன்றி.

    தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் மனம் நிறைந்த
    பொங்கல் வாழ்த்துக்கள், கோபு சார்!

    பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி January 11, 2016 at 3:10 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம்.

      //இன்று என் பின்னூட்டத்திற்கான தங்கள் சிறப்பான பதிலைப் படித்தேன். தங்கள் அன்புக்கு நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)

      //தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள், கோபு சார்!. பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!//

      மிகவும் சந்தோஷம் சார். தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் ‘பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!’ என என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய மஹர சங்கராந்தி நல்வாழ்த்துகள் சார்.

      -=-=-=-=-=-

      பொங்கல் வாழ்த்து
      ===================

      செங்கரும்புச் சாறெடுத்து இதழினிலே தேக்கி,

      சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,

      மதமதத்த கைகளிலே வளையல் வீசி,

      மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !

      பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள் !!

      Ref: http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_12.html

      -=-=-=-=-=-

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  92. ஆஹா...இணையம் இன்று இசைந்து கொடுத்து விட்டது தங்கள் பக்கம் பார்க்க....

    வருஷம் இல்லை கோபு சார் இதோவந்து விட்டேன்...

    சாதனையாளர் சாதனையாளர்களுக்கு பரிசு மழையை பொழிவது சிறப்போ சிறப்பு....அனைவருக்கும் பராட்டுகள்.

    தங்களின் ஆக்கங்கள் இனி தொடர்ந்து வரவேண்டும் சார். மற்றவர்களின் விருப்பும் போல் எனக்கும் உள்ளது. சிறுகதைகள் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 191
      R.Umayal Gayathri January 11, 2016 at 8:30 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆஹா...இணையம் இன்று இசைந்து கொடுத்து விட்டது தங்கள் பக்கம் பார்க்க....//

      மிக்க மகிழ்ச்சி. :)

      http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

      இந்தப்போட்டியை நான் என் மேற்படி பதிவினில் முதன் முதலாக அறிவித்த 31.03.2015 அன்று தாங்கள் தான் முதல் வருகை தந்து முதல் பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். நீங்கள் மறந்தாலும் அதை நான் இன்னும் மறக்கவே இல்லை. இதோ பாருங்கோ:

      -=-=-=-=-=-=-=-

      R.Umayal Gayathri March 31, 2015 at 2:25 PM

      புதுமையிலும் புதுமையாய்
      கருத்துகளுக்கு கெளரவமாய்
      வை கோ ஐயா
      வைத்தார் ஒரு போட்டி...!!

      இராஜேஸ்வரி அம்மா விரவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் கோவில் பதிவுகள் மீண்டும் வலம் வர வேண்டும்.

      கருத்தை கணக்கு வைத்து
      கருத்துக்கு போட்டி வைத்து
      பொருளாளர் வங்கி ஐயா
      பொருள் கொடுக்க காத்திருக்கார்
      சகோக்கள் சரமாரி க ரு த் தி டு க.

      -=-=-=-=-=-=-=-

      தங்களின் அந்தப்பின்னூட்டத்திற்கான என் பதில் இதோ:

      R.Umayal Gayathri March 31, 2015 at 5:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இராஜேஸ்வரி அம்மா வி ரை வி ல் குணமடைய பிரார்த்திக்கிறேன். //

      மிக்க நன்றி.

      //சகோக்கள் சரமாரி கருத்திடுக//

      ”சகோக்கள் சரமாரி கருத்திடுக” எனச்சொல்லிவிட்டு நீங்க எஸ்கேப் ஆனால் எப்படி? நீங்க போட்டியில் கலந்துகொண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?

      போட்டியில் கலந்துகொள்ள தயவுசெய்து முயற்சி செய்யுங்கள்.

      ஆனால் நான் யாரையும் வற்புருத்திக் கட்டாயப்படுத்தப் போவது இல்லை. கலந்துகொள்வதோ கலந்து கொள்ளாததோ அவரவர்கள் இஷ்டம் + செளகர்யப்படி மட்டுமே.

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      -=-=-=-=-=-=-=-

      இவ்வாறு தாங்கள் அன்று சுமார் ஒன்பது மாதங்கள் முன்பு தூண்டிவிட்டுப்போன தீபம் நன்கு பிரகாசமாக கார்த்திகை மாதம் வரை எரிந்து, மார்கழி மாதப் பனியாக பரிசுகளுடன் பங்கேற்றவர்களைக் குளிரச் செய்துள்ளது, இப்போது.

      >>>>>

      நீக்கு
    2. 192
      கோபு >>>>> திருமதி. உமையாள் காயத்ரி மேடம் (2)

      //வருஷம் இல்லை கோபு சார் .... இதோவந்து விட்டேன்...//

      போன வருஷம் 2015-இல் உங்களை எப்போதோ நான் பார்த்தது. இப்போ பாருங்கோ, அடுத்த புதிய வருஷம் 2016 பிறந்துவிட்டது. அதனால் அவ்வாறு நான் சொல்லி இருப்பேன். :)

      //சாதனையாளர் சாதனையாளர்களுக்கு பரிசு மழையை பொழிவது சிறப்போ சிறப்பு.... அனைவருக்கும் பா ரா ட் டு க ள்.//

      ஆஹா, என்னைப்போய் இப்படி ’சாதனையாளர்’ எனச் சொல்லிட்டீங்களே. நான் எப்போதும் சாதாரணமானவன் மட்டுமே, மேடம்.

      //தங்களின் ஆக்கங்கள் இனி தொடர்ந்து வரவேண்டும் சார். மற்றவர்களின் வி ரு ப் ப ம் போல் எனக்கும் உள்ளது.//

      ஆஹா, உங்களைப்போலவே விருப்பங்கள் எனக்கும்தான் உள்ளன. ஆனால் ........

      //சிறுகதைகள் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்த வாசிக்கும் ஆவலுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  93. சளைக்காமல் தொடர்ந்து முயன்று வெற்றி பெற்ற பின்னூட்ட சாதனையாளர்கள் பூந்தளிர் சிவகாமி, இராஜராஜேஸ்வரி மேடம், பழனி கந்தசாமி ஐயா, நண்பர் சேஷாத்ரி அவர்கள், மாயவரத்தான் ரவிஜி அவர்கள், சரணாகதி ஸ்ரீவத்சன் அவர்கள், செல்வி மெஹ்ருன்னிசா, ஜெயந்தி ரமணி மேடம் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். உரியவர் இருவருக்கு உரிய பரிசினைக் கொடுக்காமல் தன்னிடத்தில் வைத்திருப்பதையே கடன்பெற்றார் நெஞ்சம் போலக் கலங்குவதற்கு உவமை கூறும் கோபு சாரின் இளகிய மனம் கண்டு வியக்கிறேன். சாதனைப்போட்டிகளில் மற்றுமொரு சாதனையை செய்துமுடித்திருக்கும் கோபு சாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 194
      கீத மஞ்சரி January 13, 2016 at 6:46 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சளைக்காமல் தொடர்ந்து முயன்று வெற்றி பெற்ற பின்னூட்ட சாதனையாளர்கள் பூந்தளிர் சிவகாமி, இராஜராஜேஸ்வரி மேடம், பழனி கந்தசாமி ஐயா, நண்பர் சேஷாத்ரி அவர்கள், மாயவரத்தான் ரவிஜி அவர்கள், சரணாகதி ஸ்ரீவத்சன் அவர்கள், செல்வி மெஹ்ருன்னிசா, ஜெயந்தி ரமணி மேடம் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி.

      சளைக்காமல் எட்டு முறை மிக்க மகிழ்ச்சி :)

      //உரியவர் இருவருக்கு உரிய பரிசினைக் கொடுக்காமல் தன்னிடத்தில் வைத்திருப்பதையே கடன்பெற்றார் நெஞ்சம் போலக் கலங்குவதற்கு உவமை கூறும் கோபு சாரின் இளகிய மனம் கண்டு வியக்கிறேன்.//

      ஆமாம் மேடம். பிறருக்குத் தர வேண்டிய பரிசினை, சொன்னால் சொன்னபடி, தாமதம் ஏதுமின்றி உடனடியாகத் தந்துவிட வேண்டும் எனத் துடிப்பவன் நான். இவர்கள் இருவரும் மட்டும் என்னிடம் ஏதேதோ விசித்திரமான காரணங்கள் சொல்லி, மிகவும் அடம் பிடித்துத்தான் வருகிறார்கள். :)

      //சாதனைப்போட்டிகளில் மற்றுமொரு சாதனையை செய்துமுடித்திருக்கும் கோபு சாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல நல்ல கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  94. சார் ரியல்லி ஐயாம் வெரி ஸாரி. ரொம்ப நாளாக நெட் தகறாறு. உங்க பக்கம் வரவே முடியலே. இப்ப கடைசி ஆளாக வந்திருக்கேன். படங்கள் பதிவு பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப நால்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 196
      srini vasan January 14, 2016 at 11:18 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் ரியல்லி ஐயாம் வெரி ஸாரி. ரொம்ப நாளாக நெட் தகறாறு. உங்க பக்கம் வரவே முடியலே.//

      அதனால் என்ன? பரவாயில்லை. ஸாரியெல்லாம் எதற்கு? கெளன், சுடிதார், சல்வார் மட்டும் போதுமே:)

      Please go through my Story:

      ’சுடிதார் வாங்கப் போறேன்’
      http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

      //இப்ப கடைசி ஆளாக வந்திருக்கேன்.//

      கடைசி ஆள் என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் நம்மாளுங்க நிறைய பேர் (என் ரெகுலர் பழைய கஸ்டமர்கள்) இங்கு வருகை தரவே இல்லையே. :) ஒருவேளை நான் நேரில் போய் தனி அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்ற கோபமாகக்கூட இருக்கும் அவர்களுக்கு. :)

      என் சிறுகதையான ‘அழைப்பு’ படியுங்கோ, புரியும்.
      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html

      //படங்கள் பதிவு பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப
      ந ல் லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  95. நிறைவ பதிவுக்கு முதலிலேயே வர நினைத்தேன். அலைஓய்ந்து சமுத்திர ஸ்னானம செய்யமுடியுமா????? பொறுப்புகளும் கடமைகளும் வரிசைகட்டி நிககுதே. புது இடம் புது ப்ராபளம். நெட் பக்கமே வரமுடியல. பதிவும் பொருத்தமான படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு. பின்னூட்டம் பற்றி சொல்லவே வேண்டாம். நீங்க முன்னே ஒருவருக்கு ரிப்ளை பின்னூட்டத்தில்.சொல்லியிருந்தீங்க இல்லயா 100-200- பின்னூட்டமெல்லாம் சர்வ சாதாரணம் என்று. அதை நிரீூபிக்கும் விதத்தில் இந்த பதிவிலும் நிறையவே இருக்கு. அதுவும் அந்த முருகு மின்னலும் பூந்தளிர் அவர்களும் தாராளமாக போட்டி போட்டுக்கொண்டு எழுதி இருக்காங்க. நீங்களும் அவங்களுக்கு சரிக்கு சரியா பதில் கொடுத்திருக்கீங்க. பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் மத்தியில் இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க் இருப்பது ரொம்ப நல்ல விஷயம். சந்தோஷமா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 198
      சரணாகதி. January 14, 2016 at 6:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைவுப் பதிவுக்கு முதலிலேயே வர நினைத்தேன்.//

      சந்தோஷம். :)

      //அலைஓய்ந்து சமுத்திர ஸ்னானம் செய்யமுடியுமா????? பொறுப்புகளும் கடமைகளும் வரிசைகட்டி நிக்குதே. புது இடம் புது ப்ராப்ளம். நெட் பக்கமே வரமுடியல.//

      அதனால் பரவாயில்லை. நான் இதையெல்லாம் எனக்குள் மிகவும் நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.

      //பதிவும் பொருத்தமான படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

      //பின்னூட்டம் பற்றி சொல்லவே வேண்டாம். நீங்க முன்னே ஒருவருக்கு ரிப்ளை பின்னூட்டத்தில் சொல்லியிருந்தீங்க இல்லயா 100-200 பின்னூட்டமெல்லாம் சர்வ சாதாரணம் என்று. அதை நிரூபிக்கும் விதத்தில் இந்த பதிவிலும் நிறையவே இருக்கு.//

      முன்பெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் இவை சர்வ சாதாரணமாகத்தான் இருந்து வந்தது. IN FACT என் பழைய வலையுலக நட்புகளில் சிலர் இன்னும் இந்தப்பதிவுப்பக்கமே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள் அல்லவா. அதுபோலத் தானோ என்னவோ இதுவும் !

      //அதுவும் அந்த முருகு மின்னலும் பூந்தளிர் அவர்களும் தாராளமாக போட்டி போட்டுக்கொண்டு எழுதி இருக்காங்க. நீங்களும் அவங்களுக்கு சரிக்கு சரியா பதில் கொடுத்திருக்கீங்க.//

      ஆமாம். அவர்கள் இருவரின் இத்தகைய மிகச்சிறப்பான பின்னூட்டச் செயல் நானே சற்றும் எதிர்பாராத ஒன்றுதான். போட்டியே ஒருவழியாக முடிந்த பின்னும், பரிசினையே இன்னும் இவர்கள் இருவரும் மட்டும் தங்களின் கையில் வாங்காதபோதும், போட்டி போட்டுக்கொண்டுதான் எழுதி இருக்காங்க. REALLY இருவரும் என் மீது மிகவும் AFFECTIONATE PEOPLE ஆக உள்ளவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

      //பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் மத்தியில் இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க் இருப்பது ரொம்ப நல்ல விஷயம். சந்தோஷமா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தி. பாராட்டியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      10.12.2015 (கார்த்திகை-24) குருவாரம் வியாழக்கிழமை முதல் அனுஷபூஜையும், 06.01.2016 (மார்கழி-21) புதன்கிழமை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஆராதனையுடன் கூடிய இரண்டாவது அனுஷ பூஜையும் சிறப்பாக நடைபெற்றன. வரும் 03.02.2016 (தை-20) புதன்கிழமை, 01.03.2016 (மாசி-18) செவ்வாய்க்கிழமை மற்றும் 28.03.2016 (பங்குனி-15) திங்கட்கிழமை ஆகிய நாட்களில் இந்த மன்மத வருஷத்திற்கான அடுத்தடுத்த அனுஷபூஜைகள் நடைபெற உள்ளன. இவை தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க !

      அன்புடன் VGK

      நீக்கு
  96. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு