என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 23 மார்ச், 2020

22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !


கொரனா வைரஸ் பீதி 
இந்தியா முழுவதும் ஊரடங்கு
22.03.2020 ஞாயிறு




^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^


^22.03.2020 AT MARINE DRIVE - MUMBAI^


வாட்ஸ்-அப்பில் வந்த செய்திகளில் 
படித்ததில் மிகவும் பிடித்தது:


*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்*

*சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது. மழை அதன் போக்கில் பெய்கின்றது. வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை*

*மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌*

*தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டுக் குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை*

*மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, வீட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது*

*முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான், அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து, அதுதான் உலகமென்றான்*

*மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான், சம்பாத்தியமென்றான், விஞ்ஞானமென்றான், என்னன்னெவோ உலக நியதி என்றான்*

*உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக, நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்*

*ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்*

*ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம், அவனால் உயிரை படைக்க முடியும், என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன், என மார்தட்டினான்*

*ஒரு கிருமி, கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி, சொல்லி கொடுத்தது பாடம்*

*முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்*

*பல்லிக்கும், பாம்புக்கும், நத்தைக்கும், ஆந்தைக்கும்கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்*

*மண்புழுவுக்கும் கூட நான் சமமானவனோ பலமானவனோ இல்லையா என்பதில் அழுகின்றான்*

*முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில், மரத்தை விட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது*

*மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்*

*காட்டுக்குள் விலங்குகளும், பறவைகளும், மரங்களும், நீர் வீழ்ச்சிகளும்கூட அவைகள் பாஷையில் பேசுகின்றன‌*

*ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது*

*தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில், காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்*

*கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க, மனிதனை வெளியே தள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு*

*அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம். கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடற்கரை வந்து சிரிக்கின்றது மீன்*

*தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..*

*மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில். வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு*

*அவமானத்திலும், வேதனையிலும், கர்வம் உடைந்து, கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்*




ooooooOoooooo



01-07-1945 TO 22-03-2020

😭😭😭😭 
அசாத்யமான அறிவு, ஆற்றல், நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்ஜக உணர்வு, மனிதாபிமானம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்ந்த 'விசு' என்ற  மிகவும் மகத்தானதோர் மனிதர் நம்மை விட்டு இன்று பிரிந்துள்ளது, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
😭😭😭😭





என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?

கடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்படுத்தியுள்ளனர். இன்று அவர்கள் நம்மிடையே இல்லாதுபோனாலும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள பதிவுகளும், பின்னூட்டங்களும், காலத்தினால் அழியாத காவியங்களாக இருந்து நம்மை சற்றே ஆறுதல் படுத்தி வருகின்றன. 


எனது இனிய நண்பரும், ‘எனது எண்ணங்கள்’ என்ற பிரபல வலைப்பதிவருமான, [http://tthamizhelango.blogspot.com]  திருச்சி, திருமழபாடி, திரு.  தி. தமிழ் இளங்கோ அவர்கள்.  


நம் அனைவர் மனதையும் உலுக்கிய இவரின் மறைவு நிகழ்ந்த நாள்: 02.02.2019. நேற்றுடன் ஓராண்டு ஓடிப்போய் விட்டது. எங்களின் மிகவும் ஆழமான நட்பினை எடுத்துக்கூறும் ஒருசில பதிவுகள்:

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் ’எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்:-

திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் [04.09.2012]

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன் [27.02.2013]

திருச்சியில் மூத்த பதிவர் GMB ஐயா அவர்களோடு ஓர் இனிய சந்திப்பு [03.07.2013]

எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... V.G.K.  (நூல் விமர்சனம் 10.09.2013)

அன்பின் சீனா - மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஓர் சந்திப்பு (07.10.2013)

ஆரண்ய நிவாஸ் - ஓரு இலக்கிய அனுபவம் (15.08.2014)

தமிழ் வலையுலகில் விருதுகள் (15.09.2014)

திருச்சி மாவட்ட வலைப்பதிவர்களே ! (17.09.2014)

வெளிநாடு செல்லும் V.G.K. - வாழ்த்துகள் (14.11.2014)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (23.02.2015)

பயணங்கள் முடிவதில்லை by VGK (28.01.2016)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (08.02.2016)

VGK அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் (13.02.2016)

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு (09.01.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன் (25.03.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே! (28.03.2018)


எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில பதிவுகள்:-
ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்

சந்தித்த வேளையில் ... பகுதி - 2 of 6

சந்தித்த வேளையில் ... பகுதி - 4 of 6  

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-3] 

 



சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-4] 



எங்கள் அடுக்குமாடிக் கட்டட உச்சியில் (மொட்டை மாடியில்) தமிழ் இளங்கோ 

  


யானை வரும் பின்னே ... மணி ஓசை வரும் முன்னே ! 
 


2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  


ஹனிமூன் வந்துள்ள பதிவர் தம்பதியினர் !  
 



2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்   
 

  




’அன்பின் திரு. சீனா ஐயா ’
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட

ஆத்தங்குடி 


திரு. பெ.க.சு.பெ.கரு.கா. 


சிதம்பரம் செட்டியார் அவர்கள்


[வலைத்தளம்: ‘அசைபோடுவது’] 


மறைவு: 16.03.2019


தொடர்புடைய சில பதிவுகள்

மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம்.


அன்பின் சீனா ஐயா அவர்களின் 40-வது திருமண நாள் விழா

  

  

17.01.2020 
’முதல் தை வெள்ளிக்கிழமை’
இரவு சுமார் 11 மணிக்கு கோவையை சேர்ந்த  'மன அலைகள்’  http://swamysmusings.blogspot.com/ மூத்த வலைப்பதிவர், முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [வயது 84] மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிதரும் செய்தியை பதிவு செய்துகொள்கிறேன். இதுவிஷயம் 28.01.2020 அன்று அவரின் துணைவியாரையும், சகோதரியையும் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓரிரு மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சைகள் மேற்கொண்டு வந்துள்ளார்.  22.12.2019 அடியேன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவுக்கு கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.



  • Palaniappan Kandaswamy  எழுத்தாளர் சந்திப்பை ரசித்தேன்.

மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் எனது இனிய நண்பர். பழுத்த அனுபவசாலி.  எனது இல்லத்திற்கு மும்முறை வருகை தந்து மகிழ்வித்தவர். அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.  


அவருடன் தொடர்புடைய சில பதிவுகள்

02.04.2014 முதல் வருகைக்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html


10.10.2015 இரண்டாவது வருகைக்கான இணைப்பு


15.03.2017 புதன்கிழமை மூன்றாவது முறையாக 
’ஹாட்-ட்ரிக்’ வருகை தந்து மகிழ்வித்த போது .....

   

சிலுக்கு ஜிப்பா ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்



2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும்,  அன்புடன் வருகை தந்து, அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ள, தூய நட்பான, தெய்வீகப் பதிவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள்: 09.02.2020   

 
   
.02.2019 
 மூன்றாம் ஆண்டு நினைவஞ்ச 

"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

 வலைத்தளம்: மணிராஜ்

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

[ மறைவு: 09.02.2016 ]

தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(

http://gopu1949.blogspot.com/2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018

நினைவு நாள்: 09.02.2019

நினைத்துப் பார்க்கிறேன்

2014ம் ஆண்டு முழுவதும் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய பதிவுகளுக்கான இணைப்புகள்:

Highest Hat-Trick Winner 
[முதலிடம்]

ஜீவீ-வீஜீ விருது 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது 
[முதலிடம்]


போட்டி பற்றிய பல்வேறு அலசல்கள்





திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடன்
’போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி’

                   



            ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் 
              (சிறப்பிடம்)            

                     
100% பின்னூட்டமிடும் போட்டி
சாதனையாளர் விருது - 2015



 



   



என்றும் தங்கள் நினைவுகளுடன்,



[வை. கோபாலகிருஷ்ணன்]