என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 30 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 9



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




15) ‘பாவை விளக்கு’ 
அகிலன்
[பக்கம் 96 முதல் 99 வரை]



'பாவை விளக்கு' அகிலன் என்று ஜீவி சொல்கிறார்.

’பாவை விளக்கு’ நாவல் கல்கியில் தொடராக வந்த சமயம்,  இந்த நாவலில் வரும் உமா என்ற கதாபாத்திரதை அகிலன் கதையில் சாகடித்து விடக்கூடாது என்று வாசகர்களிடமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தபால்கள் கல்கி அலுவலகத்திலே குவிந்ததாம். 

ஜீவி இந்த மாதிரி அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை நிறைய இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  

இதையெல்லாம் படிக்கும் பொழுது பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளை எவ்வளவு ஆசை ஆசையாக வாசகர்கள் படித்திருக்கிறார்கள்  என்று நினைத்துப் பரவசப்பட்டேன். இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி எழுதறவங்களும் இல்லை, வாசிக்கறவங்களும் இல்லை என்று நினைத்துப் பார்க்க வருத்தமாக இருந்தது. 


1975-இல் அகிலனுக்கு அவரின் ‘சித்திரப்பாவை’ நாவலுக்கு ஞானபீடப்பரிசு தேடி வந்தது. இப்படியாக தமிழுக்கு முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றுத்தந்த பெருமையைத் தேடிக்கொண்டவர் அகிலன். 


இவரின் ‘பெண்’ ‘எங்கே போகிறோம்’ ’பால் மரக்காட்டினிலே’ ’நெஞ்சினனைகள்’ ‘கறுப்புத்துரை’ ‘புதுவெள்ளம்’   ஆகியவை குறிப்பிடத்தக்க பெருமை பெற்றவை. அகிலன் எழுதிய ‘கயல்விழி’ தான் பிறகு, ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படமாக ஆக்கப்பட்டது, என பல்வேறு செய்திகளைச் சொல்லியுள்ளார், ஜீவி. 



16) சிறுதைச் செம்மல்
கு. அழகிரிசாமி
[பக்கம் 100 முதல் 103 வரை]





இவரும் கல்கி பத்திரிகையில்தான்  நிறைய எழுதியிருக்கிறாராம். இவரைப் பற்றியும் இன்னொரு கரிசல் பூமிக்காரர் கி. ராஜநாராயணன் பற்றியும்  ஜீவி சொல்லியிருக்கிறார். 

கி.ரா. அவர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கிய அந்தஸ்து பெற்றவை என்று ஜீவி குறிப்பிடுகிறார்.   அழகிரிசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஜீவி எழுதியிருப்பது படிக்கப்  படிக்க சுவையாக இருக்கிறது.

இவர் எழுதிய ‘சுயரூபம்’ என்றோர் கதை, பசியின் கொடுமையில் அவஸ்தைப்பட்ட ஓர் மனிதனின் வேதனையைச் சொல்லும் கதை. இவரது கதைகள் பெரும்பாலும் கல்கியில் வெளியானவைகளாகும். ‘திரிவேணி’ ‘’ராஜா வந்தான்’ போன்ற கதைகளும், ‘டாக்டர் அனுராதா’ ’தீராத விளையாட்டு’  ’புது வீடு புது உலகம்’ ’வாழ்க்கைப் பாதை’ போன்ற புதினங்களும் தன் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளதாகச் சொல்கிறார் ஜீவி.  

இவர் மலேசியாவில் தமிழ் ஆசிரியராக இருந்ததும், மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனுக்கு ஆசிரியராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


அழகிரிசாமி அவர்கள் கட்டுரைகள் எழுதுவதிலும் ஒப்பாய்வு செய்வதிலும் வல்லவராவார். ‘எங்கனம் சென்றிருந்தேன்’ ‘காணிநிலம்’ என்ற இரண்டு ஒப்பாய்வு நூல்கள் என்றென்றும் இவர் பெயரைச்சொல்லும், என இவரைப்பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜீவி. 




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:  

 
  
   வெளியீடு: 01.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.





அதற்கு அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:  


  

   வெளியீடு: 03.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.




காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

திங்கள், 28 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 8



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி .

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




13) கடல் கண்ட கனவு .. 
மீ.ப.சோமு
[பக்கம் 86 முதல் 89 வரை]


'வட்டத்தொட்டி’ என்பது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ரசிகமணி டி.கே.சி.யின் இல்லத்து நடுமுற்றத்தில் வட்டவடிவில் தொட்டிக்கட்டு அமைப்பில் இருந்த இடத்தில் தமிழ்ச்சான்றோர்கள் ஒன்றாகக்கூடி இலக்கியச் செல்வங்களை இனிமையாகப் பகிர்ந்து கொள்வார்கள். ராஜாஜியும், கல்கியும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இதில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தவறாமல் மீ.ப. சோமசுந்தரம் அந்தக்கூட்டங்களில் ஓர் மாணவனைப்போல கலந்து கொள்வார். இதுவே தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பற்றுடன் பரிச்சயம் கொள்வதற்கு அவருக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்கிறார், ஜீவி.  

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த உடன், சிலரின் வேண்டுகோளை ஏற்று கல்கி பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் இருந்தார். அவர் கல்கியில் எழுதிய அழகான நாவல்தான் ’ரவிசந்திரிகா’. கல்கியில் வெளிவந்த ‘கடல் கண்ட கனவு’ என்ற நாவல் அழகான வர்ணனைகள் கொண்ட அவரின் அற்புதமான படைப்பாகும். இதைத்தவிர ‘நந்தவனம்’ ’எந்தையும் தாயும்’ ஆகிய இரு நாவல்களையும் சோமு எழுதியுள்ளார். ‘கேளாத கானம்’ ‘மஞ்சள் ரோஜா’ ‘திருப்புகழ் சாமியார்’ ஆனந்த விகடனில் சிறுகதைப் போட்டிக்கான பரிசுபெற்று பிரசுரம் ஆன  ’கல்லறை மோகினி' என்று நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்; ‘ஐம்பொன் மெட்டி’ ‘வீதிக்கதவு’ என்று இவரின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரின் ‘பொருநைக் கரையிலே’ ‘இளவேனில்’ ஆகிய கவிதைத்தொகுப்புகள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் என பல தகவல்கள் கூறுகிறார், ஜீவி.  

இராஜாஜி அவர்களுக்கு அணுக்கமாக இருந்து அவரின் பிரசித்திபெற்ற ஆக்கங்களுக்கு எழுத்து வேலைகளில் உதவியாய் இருந்திருக்கிறார் சோமு அவர்கள். மீ.பா. சோமு அவர்கள் எழுதியுள்ள சித்தர்களின் வரலாறு பற்றி செய்த ஆய்வுகள். ‘சித்தர் இலக்கியம்’ என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளது. 

கல்கியில் சோமு அவர்களால் எழுதப்பட்ட ‘அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்’ என்ற பயணக்கட்டுரைத் தொடருக்கு பிற்காலத்தில் சாகித்ய அகாதமி, விருது வழங்கியுள்ளது. இவரது படைப்புகள் பலவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது என இந்த நூலில் ஜீவி, மீ.பா.சோமு பற்றி பலசெய்திகளை அடுக்கிக்கொண்டே போய் உள்ளார்.



14) சூரல் நாற்காலிப் பெரியவர் 
’நகுலன்’
[பக்கம் 90 முதல் 95 வரை]



’நிழல்கள்’, ’நினைவுப்பாதை’, ’நாய்கள்’, ’நவீனன் டைரி’, ’சில அத்யாயங்கள்’, ’இவர்கள்’, ’வாக்குமூலம்’, ’அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி’ என்று 1965 இல் ஆரம்பித்து 2002 வரை நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரின் இயற்பெயர்: துரைசாமி. இவரின் மிகப்பிரபலமான ஏழே வரிக்கவிதையொன்று ’ராமச்சந்திரனா என்று கேட்டேன்’ என்று ஆரம்பிக்கும். இவரது கோட் ஸ்டாண்டு கவிதைகள் இவரை என்றும் நம் நினைவில் வைத்திருக்கும். 

தான் பழகிக்களித்த, பழகி விலகிப்போன படைப்பாளி சகாக்களைப் பற்றி ‘இவர்கள்’ நாவலில் நிறைய தகவல்கள் கிடைக்கும். இறப்பு குறித்து எதிர்கொண்ட ஆவலாதிகளைக்கொண்டது ’வாக்குமூலம்’. தமது சொந்த செலவில் நகுலன் தொகுத்து வழங்கிய 'குருக்ஷேத்திரம்’ என்ற தொகுப்பு நூலைப்பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. அதில் நகுலன் ரசித்த, எழுத்தால் தன்னைக் கவர்ந்தவர்களின் படைப்புக்களைப் பார்த்துப் பார்த்து தொகுத்துள்ளார் எனச்சொல்லி மகிழ்கிறார் ஜீவி.  சிறு பத்திரிகைகளில் நகுலனைப் பார்க்கத் தவறியவர்களுக்கு ‘காவ்யா’ மூலம் தொடர்ந்து நகுலன் படிக்கக்கிடைத்தார் என்றும் சொல்லி பூரித்துப்போய் உள்ளார்.


இவர் பிறந்த ஊர் கும்பகோணம். வளர்ந்து ஆளாகி வாழ்ந்தது திருவனந்தபுரம். கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் 85 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்தவர், நகுலன்.






இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்: 


  
   வெளியீடு: 30.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

சனி, 26 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 7



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் நம் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




11) ’வேள்வித்தீ’ 
எம்.வி.வெங்கட்ராம்
[பக்கம் 68 முதல் 76 வரை]


எம்.வி.வி.  இவரும் கும்பகோணத்துக்காரர் தான். தி.ஜா.வுடன் நெருங்கிப் பழகியவர்.   இவர் எழுதிய ’காதுகள்’ என்ற நாவலைப் பற்றி ஜீவி விவரிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. மஹாபாரத்தில் மாதவி என்பவரைப் பற்றி  ஒரு துணைக்கதை வருகிறதாம். நான் படித்ததில்லை.  அந்த மாதவி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எம்.வி.வி. அவர்கள் எழுதிய 'நித்ய கன்னி' நாவலைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்துகிறார்.  இவர் எழுதி இருப்பதைப் படித்து விட்டு அந்த ’நித்ய கன்னி'  நாவலை வாங்கிப் படித்தே ஆக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கு. பார்க்கலாம்.

ஒரு நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக்கூடாது என்பதில் கவனம் கொண்டவர் எம்.வி.வி. ‘நித்தியகன்னி’ போலவே சாகித்ய அகாதமி விருது பெற்ற ‘வேள்வித்தீ’, அவர் கொண்டிருந்த எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.


’வேள்வித்தீ’யில் ஓர் இடம்

கண்ணனின் மனைவி கெளசலையின் தோழி ஹேமா, இளம் விதவை. வசதியான குடும்பம். ஹேமா தன் சகோதரர்களுடன் வாழ்ந்து வருபவள். கெளசலையின் வீட்டுக்கு ஹேமா அடிக்கடி வரப்போக, சிலந்தி வலையில் சிக்கிய ஈயாகிறான் கண்ணன். ஒருநாள், கண்ணனின் மீதான அவளின் மோகத்தினால் அந்தக் கூத்தும், கண்ணன் வீட்டிலேயே நிறைவேறி நிகழ்ந்தும் விடுகிறது. 

வெளியே போயிருந்த கெளசலை அகஸ்மாத்தாக அந்த நேரத்தில் வீட்டினுள் நுழைய, கலைந்த ஆடையுடன் வெளியேறும் ஹேமாவைப் பார்த்து துணுக்குறுகிறாள்.  

பிறகு என்ன ஆச்சு ? 
ஜீவியின் நூலைப் படித்தாப் போச்சு! 





12) மனித நேயர் 
தி. ஜானகிராமன்
[பக்கம் 77 முதல் 85 வரை]



தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் தமிழுக்குக் கிடைத்த அற்புத எழுத்தாளர் என்று ஜீவி அவரை தம் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். சினிமாவாக வந்த ’மோகமுள்’ பலருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.  பாபு, யமுனா, ரங்கண்ணா என்று இந்த ’மோகமுள்’ கதையில் வரும் பாத்திரங்களை ஜீவி நமக்கு தெளிவாக அறிமுகப்படுத்துகிறார்.

தி.ஜா.வின்  பாயசம் என்ற சிறுகதையைப் பற்றி ஜீவி எழுதியிருப்பதைப் படித்த பொழுது கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படமும் 'சுந்தரி நீயும்..' பாட்டும் என் நினைவுக்கு வந்தது. இந்த பாயசம் சிறுகதையில் விவரிக்கும் மாதிரி அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. சினிமாவில் கல்யாண சாம்பாரில் மீன் துள்ளி விழுந்து விடுவதாகக் காட்டப்படுகிறது. தி.ஜா.வின் கதையில் கல்யாண பாயசத்தில் எலி விழுந்து விடுவதாக ஒரு ஜோடுத்தவலை (ஜோடுத்தவலை = மிகப்பெரிய அடுக்கு போன்றதோர் பாத்திரம்) பாயசத்தைக் கவிழ்த்து விடுகிறார் பொறாமை பிடித்த ஒருவர். ஜீவி இந்தக் கதையை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கும் விதமும் அனுபவித்துப் படிக்கிற மாதிரி நன்றாக இருக்கிறது.

’சிவப்பு ரிக்‌ஷா’வும், சாகித்ய அகாதமி பரிசுபெற்ற ‘சக்திவைத்ய’மும் இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். இயற்கையின் கொடையை சலிக்காமல் வர்ணிப்ப்பதில் மனிதர் மன்னன். இயற்கையை நேசித்த மஹாகலைஞனான தி.ஜா. தஞ்சைத்தரணியைச் சேர்ந்தவர். அவர் கதைக்களம் கேட்க வேண்டுமா? அதுபோல ஆட்களை வர்ணிப்பதோ அட்டகாசம். அவருக்கே கை வந்த கலை என்கிறார், ஜீவி. 

இந்த புத்தகத்தை நான் வாங்கியதிலிருந்து கீழே வைக்க மனமில்லை. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை கதைகள்!!  இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.





இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்

  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 
  
   வெளியீடு: 28.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

வியாழன், 24 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 6



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




9) பெரியவர்  ஆர் வி
[பக்கம் 60 முதல் 64 வரை]


ஆர்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம்கூட சலிப்பேற்றாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாவகம், கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்க வைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச்சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புக்களையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசாங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி. பாரதி சொன்னது போல, ‘எழுத்து எமக்குத் தொழில்’ என்று கூறி குடும்பத்தையும் நடத்திக்கொண்டு எழுத்தை நம்பியே வாழ்ந்து காட்டியவர். 33 ஆண்டுகளுக்கும் மேலாக கலைமகள் பத்திரிகை குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு கலைமகள் வெளியீடான ’கண்ணன்’ சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

பெரியவர் ஆர்வி எழுதியுள்ள முதல் நாவல் ‘உதய சூரியன்’ 1942-இல் சுதேசமித்திரனில் பிரசுரமாகியுள்ளது.  

இவரை இவரின் மாம்பலம் வீட்டில் நேரில் சந்தித்துள்ள ஜீவி, இவரின் அருமை பெருமைகளையும், இவர் வாங்கியுள்ள பல்வேறு விருதுகளையும், இவரால் ஊக்கமும் உற்சாகமும் அளித்து அறிமுகப்படுத்த இளம் எழுத்தாளர்கள் பலரையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

ஆர்வி ஐயா எழுத்தில் கல்கியில் தொடராக வெளிவந்துள்ள ‘தேன்கூடு’ ‘காணிக்கை’ சுதேசமித்திரனில் தொடராக வெளிவந்துள்ள ’திரைக்குப்பின்’ ‘அணையா விளக்கு’ ‘மேம்பாலம்’ ’முகராசி’ ’சொப்பண வாழ்க்கை’ ‘பனிமதிப்பாவை’ ‘மனித நிழல்கள்’ ’சந்தனப்பேழை’ ‘யெளவன மயக்கம்’ ‘வெளி வேஷங்கள்’ ‘அலை ஓய்ந்தது’ மற்றும் காவிரிப் பூம்பட்டினம் தொடர்பாக எழுதிய ‘இருளில் ஒரு தாரகை’ பல்லவ பிற்கால சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற ‘ஆதித்தன் காதலி’ ஆகிய பல நாவல்கள் தன் நினைவினில் உள்ளதாக மிகவும் சிலாகித்துச் சொல்கிறார் ஜீவி. 

இவர் ஆசிரியராக இருந்த ’கண்ணன்’ பத்திரிகையில் மூதறிஞர் ராஜாஜியில் ஆரம்பித்து பல்வேறு எழுத்துலக + அரசியல் ஜாம்பவான்கள் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளார் ஜீவி. 

ஆர்வி அவர்கள் எழுதிய நாவல்கள், அவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்று ஆர்வி அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த ஜீவி விவரிப்பதைப் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது.




நான் நேரில் சந்தித்த 40 வது பதிவர்
திருமதி. துளசிகோபால் அவர்கள்
http://thulasidhalam.blogspot.in/
சந்தித்தநாள்: 07.02.2016 
{சந்தித்த இடம்: பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் இல்லம், ஸ்ரீரங்கம்}


 

மேலும் அதிக விபரங்களுக்கு


நான் நேரில் சந்தித்த 41 வது பதிவர்
திரு. S.P. செந்தில் குமார் அவர்கள்
வலைத்தளம்: கூட்டாஞ்சோறு
http://senthilmsp.blogspot.com/
சந்தித்த நாள் (நேற்று): 23.03.2016 
{சந்தித்த இடம்: என் இல்லம்  ....
உடன் வருகை தந்திருந்த பதிவர் 
திருச்சி. தி. தமிழ் இளங்கோ அவர்கள்}

 


 
’தினத்தந்தி’ வழங்கும் 
’நம்மமுடியாத உண்மைகள்’
(’தினம் ஒரு தகவல்’ தொகுப்பு) By எஸ்.பி. செந்தில் குமார்
என்ற தன் சமீபத்திய நூல் வெளியீடு ஒன்றினையும்

 



ஜொலித்து கண்ணைப் பறிக்கும் அழகிய அட்டையுடன் கூடிய  
‘ஹாலிடே நியூஸ்’ 
என்ற ’தமிழின் முதல் சுற்றுலா மாத இதழ்’ 
(ஏப்ரில் 2016)  பிரதி ஒன்றினையும் 
எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

‘ஹாலிடே நியூஸ்’ 
இதழின் இணை ஆசிரியர் இவர் 
என்பதும் குறிப்பிடத்தக்கது.


திருச்சி. தி. தமிழ் இளங்கோ அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது 
சுகிசிவம் அவர்கள் எழுதி, பிரேமா பிரசுரம், சென்னை வெளியிட்டுள்ள 
‘ஆதி சங்கரர்’ என்ற நூல்.


என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலான 
’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’
திரு. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு என்னால் அளிக்கப்பட்டது.


எங்கள் இல்லத்தில் நாங்கள் மூவரும்
எங்கள் கட்டடத்தின் உச்சியில்   

முதல் முறையாக என் இல்லத்துக்கு 
வருகை தந்து மகிழ்வித்த 
பிரபல பதிவர் திரு. எஸ்.பி. செந்தில் குமார் 
(மதுரை) அவர்களுக்கும்,
அவருடன் வருகை தந்து மகிழ்வித்த (திருச்சி பதிவர்)
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.



  




10) ’பசித்த மானுடம்’ படைத்த
கரிச்சான் குஞ்சு
[பக்கம் 65 முதல் 67 வரை]




புத்தகத்தின் பெயர்: ‘பசித்த மானுடம்’. பெயர் வினோதம் காரணமாகவோ என்னவோ, அந்தப் புதினத்தை எழுதியவரின் பெயரான ‘கரிச்சான் குஞ்சு’ என்பதையும் என்னால் மறக்க இயலவில்லை என்கிறார், அப்போது சேலத்தில் வசித்து வந்த நம் ஜீவி. 

பின்னால்தான் தெரியுமாம் ..... மணிக்கொடி காலத்தின் முடிசூடா சிறுகதை மன்னன் கு.ப.ராஜகோபாலன் ’கரிச்சான்’ என்ற புனைப்பெயரிலும் எழுதியதனால், அவரின் அத்யந்த சீடரான நாராயணஸ்வாமி என்பவர், தனக்குப் புனைப்பெயராக ‘கரிச்சான் குஞ்சு’ என்பதை வரித்துக்கொண்டார் என்பது. 

பின்னால் ‘காலச்சுவடு’ பதிப்பகம், ‘பசித்த மானுட’த்தை புத்தகமாகப் பிரசுரித்திருக்கிறது. வாழ்க்கையின் வேகமான புரட்டிப்போடுதலின், அதன் தென்றலிலும் சூறாவளியிலும் சிக்கிக்கொண்ட வெவ்வேறு மனிதர்கள் பெற்ற பரிசையும், பாடத்தையும் சொல்லும் புனிதம் ‘பசித்த மானுடம்’ 

'What is true and relevant in Indian Philosophy?' என்று ஓர் ஆகச்சிறந்த நூல், அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யா எழுதியது. அழகாக இந்தத்தத்துவ நூலை மொழிபெயர்த்திருப்பவர் கரிச்சான் குஞ்சு அவர்கள்; ‘இவரால்தான் இது முடியும்’ என்கிற மாதிரி. 

’ஞானம் என்பது செறுக்காகித் தன்னையே பிடிசாம்பலாய்ச் சாப்பிட்டு விடாமல், அந்த வேள்வியை, ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே இல்லாமல் வாழ்ந்துள்ள இவரின் வாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது’ என்கிறார் ஜீவி.

எப்போதாவது கும்பகோணம் செல்கையில், டபீர் தெரு நுழைய நேரிடுகையில், கரிச்சான் குஞ்சு சாரின் நினைவு மேலோங்கி நெஞ்சை கனக்கச்செய்யும், என்கிறார் ஜீவி. 





இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 
  
   வெளியீடு: 26.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !!