என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 19 மே, 2013

ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!


By
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஜயந்தி
வரும் 25.05.2013 சனிக்கிழமை.

ஸ்திர வாரம், ஸித்த யோகம், 
பெளர்ணமி + வைகாசி அனுஷம்

பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் முதலிய மஹான்களை நாம் நமது கண்களால் கண்டதில்லை. ஏனெனில் இவர்கள் நாம் பிறப்பதற்கு வெகு காலம் முன்பாகவே பிறந்தவர்கள்.

ஆனால் ஏராளமான தபஸ்ஸுடன் அனுக்ரஹ சக்தியுடன், இந்திரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, தேசத்தையும் தேச மக்களின் நலனையுமே கருத்தில் கொண்டு, வேத சாஸ்திர வழிமுறையிலிருந்து சிறிதும் நழுவாதவராக, நூறு வருடங்கள் வாழ்ந்த மஹான்தான் நமது காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள். 

இவரை நாம் கண்ணால் தரிஸனம் செய்துள்ளோம். இவருக்கு நமஸ்காரம் செய்துள்ளோம். இவர் நம்மை தனது கண்களாலும் கைகளாலும் அனுக்கிரஹித்து உள்ளார். அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்**. 

மேலும் இவரின் கட்டளையை ஏற்று அதற்குத் தக்க செயல்படும் பாக்யத்தையும் பெற்றுள்ளோம், என எண்ணும்போதே நமது உள்ளம் பூரிப்படைகிறது. என்னே இவரின் தபஸ் சக்தி! அனுக்ரஹ சக்தி!!

ஒவ்வொருவரையும் அவரது கடமையில் ஈடுபடுத்திய மஹான். பதவி, பொருள், புகழ், இந்திரிய சுகம், அனைத்தையும் துறந்து வாழ்ந்த சிறந்த துறவி. வேதம், சாஸ்திரம், கலைகள், புராணம், கலாசாரம், பண்பாடு ஆகியவைகளைப் புதுப்பித்து நிலை நாட்டிய மஹான்.

ஒரு நாள்கூட தனது கைகளால் செல்வத்தை [பணம்] தொடாமல் நூறு வயது வாழ்ந்தவர். பஸ், ரயில், கார், விமானம் போன்ற வாகனங்களின்றி காஷ்மீர் முதல் கன்யாக்குமரி வரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை , பாத யாத்திரையாகவே சென்று ஆங்காங்கேயுள்ள பாமர ஜனங்களுக்கும் அருள் வழங்கிய அருளாளர்.

இவரைப்பற்றிய சரித்திரத்தை உள்ளத்தில் நினைத்து ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவதரித்த [பிறந்த] தினமான வைகாசி அனுஷ நக்ஷத்ரமான வரும் சனிக்கிழமை [25.05.2013] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தியன்று இவர்களை தியானித்து நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் ஜயமும், சந்தோஷமும்  அடைவோமாக!



-oooOooo-

-

    
ஸ்ரீ மஹாபெரியவா பற்றி 
சமீபத்தில் படித்ததில் பிடித்தது

 HIS HOLINESS MAHAPERIYAVA
MIRACLE INCIDENT -2 

[ LINK FOR MIRACLE - INCIDENT-1 : 


பல வருடங்களுக்கு முன்பு, கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். 

[கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு மரியாதைச்சொல். 

அதுபோல ஸாமவேதம் முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களை அவர்களின் பெயருக்குப்பின் ‘சிரெளதிகள்’ என்ற மரியாதைச்சொல் சேர்த்து அழைப்பதுண்டு]

ராமநாத கனபாடிகள் அவர்களின் மனைவி பெயர் தர்மாம்பாள். அவர்களுக்கு ஒரே மகள். அவள் பெயர் காமாக்ஷி.

ராமநாத கனபாடிகள் அவர்கள் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தை வயிற்றுப் பிழைப்புக்காகக் கொள்ளவில்லை.  உபன்யாஸம் பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில் அவர்களாகப் பார்த்து அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார். 

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் மிகுந்த விஸ்வாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

இருபத்திரண்டு வயதான அவர்களின் மகள் காமாக்ஷிக்குத் திடீரென ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயம் ஆனது.  மணமகன் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள், “பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து .....கையிலே எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?” 

கனபாடிகள் பவ்யமாக, “தர்மு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்.  சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே” என்று சொல்ல, தர்மாம்பாளுக்கு கோபம் வந்து விட்டது.

“அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப்பண்ண முடியும்? நகைநட்டு, சீர்செனத்தி, பொடவை, துணிமணி வாங்கி, சாப்பாடு போட்டு,  எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும் பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும்.  ஏற்பாடு பண்ணுங்கோ!” இது தர்மாம்பாள். 

இடிந்து போய் நின்றார், ராமாநாத கனபாடிகள்.

உடனே தர்மாம்பாள், “ஒரு வழி இருக்கு. சொல்றேன். கேளுங்கோ! கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ; கொஞ்சம் பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ. அங்கே ஸ்ரீ மடத்துக்குப்போய், ஒரு தட்டிலே பழங்களை வெச்சு கல்யாணப் பத்திரிகையையும் வெச்சு, மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ; பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ ... ஒங்களுக்கு ‘இல்லே’ன்னு சொல்லமாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன்.   

அவ்வளவு தான் ..... ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்து விட்டது. 

“என்ன சொன்னே .... என்ன சொன்னே ... பெரியவாளைப்பார்த்துப் பணம் கேக்கறதாவது .... என்ன வார்த்த பேசறே நீ ...” என்று கனபாடிகள் முடிப்பதற்குள் ..... 

”ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குரு தானே? குருவிடம் போய் யாசகம் கேட்டால் என்ன தப்பு?” என்று கேட்டாள், தர்மாம்பாள்.

“என்ன பேசறே தர்மு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது” என்று சொல்லிப்பார்த்தார் கனபாடிகள்.  பயனில்லை./

அடுத்தநாள் ’மடிசஞ்சி’யில் [மடிசஞ்சி = ஆச்சாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளிப்பை] தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார், கனபாடிகள்.

ஸ்ரீமடத்தில் அன்று மஹா பெரியவாளைத் தரிஸனம் பண்ண ஏகக்கூட்டம்.  ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார், ராமநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின் கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும் அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், “ஐயா ... ஐயா ... அந்தத்தட்டிலே என் பெண்ணின் கல்யாணப் பத்திரிகைகள்  வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். அதை இப்படிக்கொடுங்கோ” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.

அதற்குள் மஹா ஸ்வாமிகள், கனபாடிகளைப் பார்த்து விட்டார்கள். ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், “அடடே! நம்ம கரூர் ராமநாத கனபாடிகளா? வரணும் ... வரணும்.  ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் செளக்யமா? க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?” என்று விசாரித்துக்கொண்டே போனார். 

”எல்லாம் பெரியவா அனுக்கிரஹத்திலே நன்னா நடக்கிறது” என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தார். 

உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே “ஆத்திலே .... பேரு என்ன ... ம்... தர்மாம்பாள்தானே? செளக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்; அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ... என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரி தானே? என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்,”எல்லாமே சரி தான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தர்முதான் பெரியவாளைப் பார்த்துட்டு வரச்சொன்னா...”என்று குழறினார். 

“அப்போ ... நீயா வரல்லே?” இது பெரியவா. 

“அப்படி இல்லே பெரியவா. பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கு.  தர்மு தான் பெரியவாளை தரிஸனம் பண்ணிட்டு .... பத்திரிகைகளை சமர்பிச்சுட்டு .....  என்று கனபாடிகள் முடிப்பதற்குள், “ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச்சொல்லியிருப்பா”  என்று பூர்த்தி செய்து விட்டார், ஸ்வாமிகள். 

பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா, “உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன்; நடத்திக்கொடுப்பியா? என்று கேட்டார். 

”அஸைன்மெண்டுன்னா ..... பெரியவா?” இது கனபாடிகள்.

“செய்து முடிக்க வேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம். எனக்காக நீ பண்ணுவியா?” 

பெரியவா திடீரென்று இப்படிக்கேட்டவுடன், வந்த விஷயத்தை விட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு, “சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்” என்றார்.

உடனே பெரியவா, “ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட் கொடுக்கப்போறேன்? உபன்யாஸம் பண்றது தான். திருநெல்வேலி கடைய நல்லூர் பக்கத்திலே ஒரு அக்ரஹாரம். ரொம்ப மோசமான நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம செத்துப் போய்டறதாம்.  கேரள நம்பூத்ரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல, பெருமாள் கோயில்ல ’பாகவத உபன்யாஸம்’ பண்ணச்சொன்னாளாம். ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் இங்கே வந்தார். விஷயத்தைச்சொல்லிட்டு, ”நீங்கதான் ஸ்வாமி, பாகவத உபன்யாஸம் பண்ண ஒருத்தரை அனுப்பி வைத்து உபகாரம் பண்ணனும்” ன்னு பொறுப்பை என் தலையிலே கட்டிட்டுப் போய்ட்டார். நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணிட்டு வரணும். மற்ற விபரமெல்லாம் மடத்து மேனேஜருக்குத் தெரியும்.  கேட்டுக்கோ. சிலவுக்கு மடத்துல பணம் வாங்கிக்கோ. இன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவணை [வெகுமானம்] அவா பார்த்துப் பண்ணுவா. போ.. போ.. போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம் பேச ஆரம்பித்து விட்டார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள் மத்யானம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள் கோயில்.  கோயில் பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காக்கூட கனபாடிகளை வந்து பார்க்கவில்லை. ‘உபன்யாஸத்தின் போது எல்லோரும் வருவா’ என அவரே தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டார்.

மாலைவேளை. வரதராஜப்பெருமாள் சந்நதி முன் அமர்ந்து பாகவத உபன்யாஸத்தைக் காஞ்சி பரமாச்சார்யாளை மனதில் நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே எதிரே ஸ்ரீ வரதராஜப்பெருமாள், பெருமாள் கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர் ... இவ்வளவு பேர்தான்.

உபன்யாஸம் முடிந்ததும், ”ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரல்லே?” என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.

அதற்கு பட்டர், “ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டு பட்டுக்கிடக்குது! இந்தக்கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை. அதை முடிவு கட்டிண்டுதான் “கோயிலுக்குள்ளே நுழைவோம்”ன்னு சொல்லிட்டா. உபன்யாஸத்திற்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல ஊர் இப்படி ஆயிருக்கேன்னு ரொம்ப வருத்தப்படறேன்” என்று கனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார் பட்டர்.

பட்டரும், மெய்க்காவலரும். பெருமாளும் மாத்திரம் கேட்க பாகவத உபன்யாஸத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார், ராமநாத கனபாடிகள். 

பட்டாச்சாரியார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி பிரஸாதத்தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து அந்தத்தட்டில் போட்டார். 

பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச்சொல்லி, சம்பாவணைத் தட்டை கனபாடிகளிடம் அளித்து, “ஏதோ இந்த சந்தர்ப்பம் இதுபோல ஆயிடுத்து. மன்னிக்கணும். ரொம்ப நன்னா ஏழு நாளும் பாகவதக்கதை சொன்னேள். எந்தனைரூவா வேணும்னாலும் சம்பாவணை பண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயில் ஏத்தி விட்டுடறேன்” என கண்களில் நீர்மல்க உருகினார்.

திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும், மெய்க்காவலருமாக வந்து ரயிலில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார், கனபாடிகள்.

அன்றும் மடத்தில் பரமாச்சார்யாளை தரிஸிக்க ஏகக்கூட்டம். அனைவரும் நகரும்வரைக் காத்திருந்தார் கனபாடிகள்.

“வா ராமநாதா! உபன்யாஸம் முடிச்சுட்டு இப்பதான் வரயா? பேஷ் ... பேஷ். உபன்யாஸத்துக்கு நல்ல கூட்டமோ? சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?” என்று உற்சாகமாகக் கேட்டார், ஸ்வாமிகள்.

கனபாடிகளின் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், “இல்லே பெரியவா. அப்படி எல்லாம் கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே ஏதோ பிரச்சனையாம், பெரியவா. அதனாலே கோயில் பக்கம் ஏழு நாளும் யாருமே வரல்லே” என்று ஆதங்கப்பட்டார் கனபாடிகள்.

”சரி... பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?”

“ரெண்டே .. ரெண்டு பேர் தான் பெரியவா. அதுதான் வருத்தமா இருக்கு” இது கனபாடிகள்.

உடனே பெரியவா, “இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்” என்றார்.  

”வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொன்ணு அந்தக்கோயில் மெய்க்காவலர்” என்று சொல்லி முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடி இடியென்று வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

”ராமநாதா, நீ பெரிய பாக்யசாலிடா! தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.




“அப்படின்னா பெரிய சம்பாவணை கெடச்சிருக்க வாய்ப்பில்லை ... என்ன?” என்றார் பெரியவா.

”அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவலர் ஒரு ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து, மொத்தம் முப்பத்திரெண்டே கால் ரூவா கெடச்சது பெரியவா” கனபாடிகள் தெரிவித்தார்.

“ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயிட்டு வந்தே. உன்னோட வேதப்புலமைக்கு நெறயப் பண்ணனும். இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு” என்று கூறி, காரியஸ்தரைக் கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளுக்குச் சால்வை போர்த்தி ஆயிரம் ரூபாயை பழத்தட்டில் வைத்துக்கொடுக்கச் சொன்னார்.

“இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு, நீயும் ஒன் குடும்பமும்  பரம செளக்யமா இருப்பேள்” என்று உத்தரவும் கொடுத்து விட்டார், ஸ்வாமிகள்.

கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப்பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது.

“பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை ... பெண் கல்யாணம் நல்லபடி நடக்கணும்..... ‘அதுக்கு .... அதுக்கு ....” என்று அவர் தயங்கவும், “என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாஹத்தை சந்திர மெளலீஸ்வரர் ஜாம்ஜாம்ன்னு நடத்தி வைப்பார். ஜாக்கிரதையா ஊருக்குப் போய்ட்டு வா” என்று விடை கொடுத்தார், பரமாச்சாரியாள். 

ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்.

”இருங்கோ.... இருங்கோ .... வந்துட்டேன் ....” உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக்குரல்.

வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஹாரத்தி எடுத்து உள்ளே அழைத்துப்போனாள். காஃபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு, “இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோ” என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்.

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள். அங்கே ஸ்வாமிக்குமுன்பாக ஒரு பெரிய மூங்கில் தட்டில், பழ வகைகளுடன் புடவை, வேஷ்டி, இரண்டு திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.  

”தர்மு.... இதெல்லாம்.....” என்று அவர் முடிப்பதற்குள், “காஞ்சிபுரத்துலேந்து பெரியவா கொடுத்துட்டு வரச்சொன்னதா” இன்னிக்குக் கார்த்தால மடத்தை சேர்ந்தவா இருவர் கொண்டு வந்து வெச்சுட்டுப்போறா. ”எதுக்கு?” ன்னு நானும் கேட்டேன். 

“ஒங்காத்துப்பொண்ணு கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா”ன்னு சொன்னார்கள்” என்று முடித்தாள் அவர் மனைவி.

கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. பெரியவாளுடைய கருணையே கருணை. நான் வாயத்திறந்து ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அன்ப்பியிருக்கு பாரு” என்று நா தழுதழுக்க ”அந்தக் கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்று கேட்டார்.

”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.


கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.


மிகச்சரியாக பதினைந்தாயிரம் ரூபாய்!

அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.


oooooOooooo

சுபம்

oooooOooooo




** ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேச்சுக்களை நேரில் கேட்கும் பாக்யம் கிடைக்காதவர்களுக்கு பயன்படும் விதமாக, அவர்கள் பேசி அருளியுள்ள அனுக்ரஹ வார்த்தைகளை [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


130 கருத்துகள்:

  1. ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர

    மகா பெரியவாளப் பத்தி படிக்கப் படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேச்சுக்களை நேரில் கேட்கும் பாக்யம் கிடைக்காதவர்களுக்கு பயன்படும் விதமாக, அவர்கள் பேசி அருளியுள்ள அனுக்ரஹ வார்த்தைகளை [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**

    ஆவலுடனும், நன்றியுடனும் காத்துக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI May 19, 2013 at 3:52 AM

      வாங்கோ வாங்கோ .... வணக்கம்.

      ”ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!” என்ற தலைப்புடன் இந்தப்பதிவினை நான் வெளியிட்ட ஒருசில மணித்துளிகளில் திருமதி ‘ஜெயந்தியின் ரமணிகரமான’ முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. சந்தோஷமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி.

      //மகா பெரியவாளப் பத்தி படிக்கப் படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.//

      ;))))) அவர்களைப்பற்றிப் படிக்கவும் சந்தோஷப்படவும் அவர்களின் அனுக்ரஹம் + கொடுப்பிணை வேண்டும். அது தங்களுக்கு நிறைய உள்ளது. ;)))))

      //ஆவலுடனும், நன்றியுடனும் காத்துக்கொண்டிருக்கிறோம்.//

      மிக்க நன்றி. தாமதமானாலும் ஒவ்வொரு பகுதிக்கும் தங்களின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

      யாருக்குமே [உங்களுக்கு உள்பட] தனித்தகவல் நான் தருவதாக இல்லை.

      அதுபோல ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி பதில் எழுதவும் நேரம் இருக்காது என நினைக்கிறேன்.

      விரைவில் தொடர்பதிவினில் சந்திப்போம். பிரியமுள்ள கோபு.

      நீக்கு
  2. ராமநாத கனபாடிகள் மகா பெரியாவாளை தரிசித்து மனைவி கேட்கச் சொன்னதை கேட்காமல் திரும்பி வந்ததும், பெரியவா அவருக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அனுப்பியதையும் படித்தபோது கிருஷ்ணரைப் பார்க்கச் சென்ற குசேலன் ஞாபகம்தான் வந்தது.

    ராமநாத கனபாடிகள் தன் மனதறிய பெரியவாளிடம் நேரிடையாக பணம் கேட்பதை விரும்பவில்லை. மனைவி சொன்னாளே என்பதற்காகத்தான் சென்றிருக்கார். அவர் மனமறிந்து பெரியவாள் கனபாடிகளை அதைப் பற்றி பேச விடாமலே இருந்திருக்கிறார்.

    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருப்பதே நமக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, ஜாலி, ஜாலி, நான் தான் முதலில் பின்னூட்டம் கொடுத்திருக்கேனா?
      ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே செய்தித்தாளில் எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு மின்சாரம் விட்டு விட்டு வரும்ன்னு படித்தேன். மத்தியானம் மின்சாரம் வந்ததும் கம்ப்யூட்டரில் என் வலைப்பூவில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ’ஜயந்தி வரட்டும், ஜயம் தரட்டும்’ என்ற பதிவு. பதிவு போடும் போது 'NO COMMENTS' என்று பார்த்ததும் நினைத்தேன். ஒரு வேளை நாம் முதல் ஆளா பின்னூட்டம் கொடுக்கப்போறோமோ என்று ஒரு நப்பாசை. ஆனால் சந்தேகம்தான். நிறைய பேர் பின்னூட்டம் கொடுத்திருப்பா. கோபு அண்ணா இன்னும் அனுமதி வழங்கி இருக்க மாட்டார் என்று.

      ஆஹா, இப்ப பார்த்ததும் நான் தான் முதல்ன்னு தெரிஞ்சதும் தன்யனானேன்.

      ஜயந்தி வந்துட்டேன், ’தெய்வம் மனுஷ்ய ரூபேண’, கோபு அண்ணா நீங்க எனக்கு ஜயம் கிடைக்கணும்ன்னு வாழ்த்துங்கோ. அதை பெரியவாளே உங்க ரூபத்தில வாழ்த்தினதா எடுத்துக்கறேன்.

      நீக்கு
    2. //அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருப்பதே நமக்குப் பெருமை.//

      ஆம். அவரைப்போன்ற மஹான்கள் பலர் தோன்றிய, அவர்கள் அனைவரின் பாதங்கள் பட்ட, இந்தப் புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து வருவதே நாம் செய்த மிகப்பெரிய புண்ணியம் + பாக்யம் + பெருமை ஆகும்..

      நீக்கு
    3. JAYANTHI RAMANI May 20, 2013 at 12:34 AM

      //ஐயா, ஜாலி, ஜாலி, நான் தான் முதலில் பின்னூட்டம் கொடுத்திருக்கேனா? //

      //ஆஹா, இப்ப பார்த்ததும் நான் தான் முதல்ன்னு தெரிஞ்சதும் தன்யனானேன். //

      //ஜயந்தி வந்துட்டேன், ’தெய்வம் மனுஷ்ய ரூபேண’, கோபு அண்ணா நீங்க எனக்கு ஜயம் கிடைக்கணும்ன்னு வாழ்த்துங்கோ. அதை பெரியவாளே உங்க ரூபத்தில வாழ்த்தினதா எடுத்துக்கறேன்.//

      ரொம்ப சந்தோஷமம்மா!

      என் ஆத்மார்த்தமான வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எப்போதும் உண்டு.

      எப்போதுமே, எதிலுமே, ஜய மங்களமாக அனைவரும் நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  3. அருமையான பகிர்வு! தெய்வங்கள் கேட்டுக் கொடுப்பதில்லை! அருமை ! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி May 19, 2013 at 4:33 AM

      //ஆஹா..அற்புதம்!//

      வாங்கோ வணக்கம். மிக்க நன்றி.

      நீக்கு
  5. கருணைக் கடலான பெரியவாளின் அனுக்ராஹம், அவரை நம்பி வந்த ராமநாத கனபாடிகளுக்குக் கிடைத்த விதம் எங்களுக்கும் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது.
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    மகாபெரியவாளின் அருள் பெற்றவர்களின் அனுபவத்தை உங்கள் பதிவுகள் மூலம் படிக்க நானும் தயாராக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan May 19, 2013 at 4:53 AM

      வங்கோ வணக்கம்.

      //கருணைக் கடலான பெரியவாளின் அனுக்ராஹம், அவரை நம்பி வந்த ராமநாத கனபாடிகளுக்குக் கிடைத்த விதம் எங்களுக்கும் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர //

      ரொம்ப சந்தோஷம்.

      //மகாபெரியவாளின் அருள் பெற்றவர்களின் அனுபவத்தை உங்கள் பதிவுகள் மூலம் படிக்க நானும் தயாராக இருக்கிறேன்.//

      அவைகள் பற்றி அவ்வப்போது பிறகு நேரம் கிடைக்கும் போது வெளியிடுவேன்.

      இப்போது ஆரம்பிக்க உள்ள தொடர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவ்வப்போது அருளியுள்ள ஒருசில அனுக்ரஹ வார்த்தைகள் மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  6. நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் ஜயமும், சந்தோஷமும் அடைவோமாக!///
    வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் May 19, 2013 at 5:30 AM

      வாருங்கள் வணக்கம்.

      *****நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் ஜயமும், சந்தோஷமும் அடைவோமாக!*****

      //வாழ்த்துக்கள் ஐயா/

      மிக்க நன்றி.

      நீக்கு
  7. vgk அவர்களே

    நம்பி கெட்டவர் எவரையா ?
    பெரியவாளை
    நம்பி கெட்டவர் எவரையா ?

    பெரியவா மீது மதிப்பு கொண்டவருக்கு
    உமது பதிவு அரும் பெரும் விருந்து
    அவரை அறியாதவருக்கு கசக்கும் மருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman May 19, 2013 at 5:49 AM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரம்.

      //vgk அவர்களே

      நம்பி கெட்டவர் எவரையா ?
      பெரியவாளை
      நம்பி கெட்டவர் எவரையா ?

      பெரியவா மீது மதிப்பு கொண்டவருக்கு
      உமது பதிவு அரும் பெரும் விருந்து
      அவரை அறியாதவருக்கு கசக்கும் மருந்து.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  8. அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்**. //

    ஆமாம், அவரிடம் நாம எவ்வளவு வேணாப் பேசலாம். ஆனால் நேரிடையாகப் பேசினதில்லை. :))) மானசீகமாய்த் தான்.

    நல்ல பதிவு, மேற்கண்ட நிகழ்வு குறித்தும் ஏற்கெனவே படிச்சிருக்கேன் என்றாலும் திரும்பத் திரும்பப் படிக்கப் படிக்க அலுக்காத ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam May 19, 2013 at 6:16 AM

      வாங்கொ, வணக்கம்.

      *****அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்*****

      //ஆமாம், அவரிடம் நாம எவ்வளவு வேணாப் பேசலாம். ஆனால் நேரிடையாகப் பேசினதில்லை. :))) மானசீகமாய்த் தான். //

      மானசீகமாகப் பேசினாலேயே போதும். எல்லோருடைய மனதிலும் உள்ளவற்றை அறியும் மஹாஞானி அல்லவா!

      //நல்ல பதிவு, மேற்கண்ட நிகழ்வு குறித்தும் ஏற்கெனவே படிச்சிருக்கேன் என்றாலும் திரும்பத் திரும்பப் படிக்கப் படிக்க அலுக்காத ஒன்று. பகிர்வுக்கு நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  9. வியக்க வைக்கும் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் May 19, 2013 at 6:23 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வியக்க வைக்கும் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... மேலும் தொடர வாழ்த்துக்கள்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  10. அருமை. படிக்கப்,படிக்க, மஹாப்பெரியவாளின் மஹிமை தெவிட்டாதது. அவர்காலத்தில் அவரை,தரிசித்து,அவர் வாக்குகள் கேட்டிருக்கிறோம்
    என்பதே மகிழ்ச்சியான விஷயம். உங்கள் எழுத்துகள் மூலம் மேலும் கேட்கப்போகிரோம்,படிக்கப் போகிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi May 19, 2013 at 6:53 AM

      வாங்கோ, வணக்கம், நமஸ்காரம்.

      //அருமை. படிக்கப்,படிக்க, மஹாப்பெரியவாளின் மஹிமை தெவிட்டாதது. அவர்காலத்தில் அவரை, தரிசித்து, அவர் வாக்குகள் கேட்டிருக்கிறோம் என்பதே மகிழ்ச்சியான விஷயம். உங்கள் எழுத்துகள் மூலம் மேலும் கேட்கப்போகிறோம், படிக்கப் போகிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்//

      மிக்க மகிழ்ச்சி. எல்லாம் தங்களைப்போன்றவர்களின் ஆசீர்வாதத்தில் + தந்திடும் உற்சாகத்தில் நல்லபடியாக முடியணும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்


      நீக்கு
  11. \\அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.\\ - தெய்வ கடாட்ச அனுபவங்கள் படிக்கும் நம்மையும் மெய் சிலிர்க்கவைக்கிறது. சுய நலமற்ற பக்தனுக்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு May 19, 2013 at 6:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      *****அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.*****

      //தெய்வ கடாட்ச அனுபவங்கள் படிக்கும் நம்மையும் மெய் சிலிர்க்கவைக்கிறது. சுய நலமற்ற பக்தனுக்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு..!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  12. கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டது அந்த கனபாடிகள் கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... May 19, 2013 at 7:04 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டது அந்த கனபாடிகள் கதை...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் May 19, 2013 at 8:06 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வியக்க வைக்கும் பதிவு ஐயா//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், வியக்க வைக்கும் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  14. I felt very emotional. Find no words to write.
    One thing i can say ... that is thanks for the post.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji May 19, 2013 at 9:16 AM

      வாங்கோ, அன்புள்ள விஜி மேடம். வணக்கம்.

      //I felt very emotional. Find no words to write. One thing i can say ... that is thanks for the post. --- viji//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  15. ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் அவர்களுக்கு மாகபெரியவர் அருள் செய்த விபரம் மிகவும் அருமை.
    வியக்க வைக்கும் அற்புதங்கள் நிகழ்த்தியவர் அல்லவா!
    அவரைப் பற்றி பகிர்ந்து கொள்வதை படிக்க ஆவலாக இருக்கிறோம்.
    ஜயமும் சந்தோஷமும் எல்லோர் வாழ்விலும் அவர் அருளுட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 19, 2013 at 9:35 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் அவர்களுக்கு மஹா பெரியவர் அருள் செய்த விபரம் மிகவும் அருமை. வியக்க வைக்கும் அற்புதங்கள் நிகழ்த்தியவர் அல்லவா! அவரைப் பற்றி பகிர்ந்து கொள்வதை படிக்க ஆவலாக இருக்கிறோம்.

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //ஜயமும் சந்தோஷமும் எல்லோர் வாழ்விலும் அவர் அருளுட்டும்//

      மிக்க மகிழ்ச்சி. அப்படியே நடக்க அனைவரும் அனைவருக்காகவும் பிரார்த்திப்போமாக !

      நீக்கு
  16. ராமநாத கனபாடிகள் மட்டுமல்ல படிப்பவர் கண்களும் குளமாகும் பதிவு இது.
    எத்தனை அற்புதம் இது?வார்த்தைகள் இல்லை நினைப்பதை எழுத...
    மகாபெரியவரின் அற்புதங்களை படிக்க காத்திருக்கிறோம்.
    நன்றி பகிர்விற்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam May 19, 2013 at 9:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ராமநாத கனபாடிகள் மட்டுமல்ல படிப்பவர் கண்களும் குளமாகும் பதிவு இது. எத்தனை அற்புதம் இது?வார்த்தைகள் இல்லை நினைப்பதை எழுத... மகாபெரியவரின் அற்புதங்களை படிக்க காத்திருக்கிறோம். நன்றி பகிர்விற்கு..//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  17. ”நான் எண்ணிப்பார்க்கலே”

    எண்ணிப்பார்க்கமுடியாத
    எண்ணங்களை
    ஏற்றமுடன் அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 19, 2013 at 10:54 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ. இனிய வந்தனங்கள்

      *****”நான் எண்ணிப்பார்க்கலே” *****

      பொதுவாக பெண்மணிகள் [மனைவிகள்] பணம் மட்டுமல்ல ... . ....எதையுமே எண்ணிப்பார்ப்பதில்லை.

      இருப்பினும் அவர்கள் PIN புத்தியுள்ளவர்கள். அதாவது மிகவும் SHARP BRAIN கொண்ட புத்திசாலிகள்..

      //எண்ணிப்பார்க்கமுடியாத எண்ணங்களை ஏற்றமுடன் அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. //

      மிகவும் SHARP BRAIN கொண்ட புத்திசாலியான தங்களின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      நீக்கு
  18. இவரின் கட்டளையை ஏற்று அதற்குத் தக்க செயல்படும் பாக்யத்தையும் பெற்றுள்ளோம், என எண்ணும்போதே நமது உள்ளம் பூரிப்படைகிறது. என்னே இவரின் தபஸ் சக்தி! அனுக்ரஹ சக்தி!!


    ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 19, 2013 at 10:56 AM

      *****இவரின் கட்டளையை ஏற்று அதற்குத் தக்க செயல்படும் பாக்யத்தையும் பெற்றுள்ளோம், என எண்ணும்போதே நமது உள்ளம் பூரிப்படைகிறது. என்னே இவரின் தபஸ் சக்தி! அனுக்ரஹ சக்தி!! ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!*****

      மிக்க மகிழ்ச்சி. ;)))))

      நீக்கு
  19. ஒரு நாள்கூட தனது கைகளால் செல்வத்தை [பணம்] தொடாமல் நூறு வயது வாழ்ந்தவர். பஸ், ரயில், கார், விமானம் போன்ற வாகனங்களின்றி காஷ்மீர் முதல் கன்யாக்குமரி வரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை , பாத யாத்திரையாகவே சென்று ஆங்காங்கேயுள்ள பாமர ஜனங்களுக்கும் அருள் வழங்கிய அருளாளர்.

    அருளாளரின் பாதம் பட்ட பாரத பூமி புண்ணிய பூமி ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 19, 2013 at 10:57 AM

      *****ஒரு நாள்கூட தனது கைகளால் செல்வத்தை [பணம்] தொடாமல் நூறு வயது வாழ்ந்தவர். பஸ், ரயில், கார், விமானம் போன்ற வாகனங்களின்றி காஷ்மீர் முதல் கன்யாக்குமரி வரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை , பாத யாத்திரையாகவே சென்று ஆங்காங்கேயுள்ள பாமர ஜனங்களுக்கும் அருள் வழங்கிய அருளாளர்.*****

      //அருளாளரின் பாதம் பட்ட பாரத பூமி புண்ணிய பூமி ..!//

      மிகச்சரியாக மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம். ;)))))

      நீக்கு
  20. தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

    எத்தனையோ சோகத்தையும் சேர்த்து சிரித்த சிரிப்பாயிற்றே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 19, 2013 at 10:59 AM

      *****தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.*****

      //எத்தனையோ சோகத்தையும் சேர்த்து சிரித்த சிரிப்பாயிற்றே..!//

      எது சொன்னாலும் மிகவும் அருமையாகவே புரிந்துகொண்டு சொல்லுகிறீர்கள்.

      இது .... இது .... இது தான் எனக்கு உங்களிடம் ரொம்பப்பிடிச்சிருக்கு.

      நீக்கு
  21. அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.

    கருணைக்கடல் அளித்த காருண்யம் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 19, 2013 at 11:01 AM

      *****அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.*****

      //கருணைக்கடல் அளித்த காருண்யம் ..!//

      மிக்க மகிழ்ச்சி மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆழ்ந்த பல கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  22. அச்சச்சோ இதென்னைது புதுப் பிரச்சனை? எதுக்கு இப்போ ஜெயந்தியைக் கூப்பிடுறீங்க கோபு அண்ணன்?.. ஆன்ரீஈஈஈஈஈஈஈஈஈஈ இங்க ஓடி வாங்கோ...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, கோபு அண்ணன் கூப்பிட்டதும் முதல்ல ஓடி வந்துட்டேன். அறுசுவை ஜேமாமியை உங்களுக்கு நினைவிருக்கா. நான் தான். எண்ட வலைப்பூக்கு உங்கள அனுப்பச் சொல்லி உங்கட பூசார் கிட்ட சொன்னேனே. சொல்லலையா?

      நீக்கு
    2. அச்சச்சோஓஓஓஓஓஓஓஓஓஒ... சத்தியமா? அறுசுவை ஜேமாமியோ நீங்க? அடக் கடவுளே.. இதுக்குத்தான் பெயர் மாத்தாமல் வரோணும் என்பது. நான் ஆரோ புதியவர் என நினைத்திருந்தேனே.... நான் உங்களை எல்லாம் அடிக்கடி நினைப்பதுண்டு.. உங்களிடம் இருந்து படித்து சிரித்து கற்றுக்கொண்ட சொல்தான் இப்பவும் நான் இடைக்கிடை பாவிப்பது.. “கரீட்டு”.. எனும் சொல்ல். அதை எழுதும்போதெல்லாம் உங்களை நினைப்பேன்ன்.

      ஆரம்பமே இப்படி எனக்கு சொல்லியிருக்கலாமே... இனி உங்களிடமும் வருகிறேன். உங்கள் வலைப்பூ எனக்கு தெரியாது. ஒருநாள்கூட பார்த்ததில்லை. என்னில ஒரு கெட்ட பழக்கம், என்பக்கம் வருவோரின் வலைப்பூ மட்டும் திறப்பேன் படிப்பேன்ன்.. அதுக்குமேல நேரமும் இருப்பதில்லை.

      இன்று அறிந்தது ரொம்ப மகிழ்ச்சி.

      நீக்கு
    3. அன்புள்ள அதிரா, வணக்கம்.

      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html இந்த என் பதிவினில் அந்த அறுசுவை “ஜெ” மாமிக்கும், உங்களுக்கும் சேர்த்து நான் எழுதியுள்ள பதில்களை தயவுசெய்து பொறுமையாகப் படித்துப்பாருங்கோ.

      நீக்கு
    4. athira May 19, 2013 at 12:59 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //அச்சச்சோ இதென்னைது புதுப் பிரச்சனை?//

      புதுப்பிரச்சனை அல்ல. வழக்கமான, பழகிப்போன பிரச்சனை மட்டுமே [அதாவது அன்புள்ள அதிரடி அதிராவின் வருகை]

      //எதுக்கு இப்போ ஜெயந்தியைக் கூப்பிடுறீங்க கோபு அண்ணன்?..//

      அடடா, ஜயந்தி என்றதும் யாரோ ஒரு பெண்மணி என்று நினைச்சுட்டீங்களா? ;)))))

      மஹான்கள் அவதரித்த தினத்தை ’ஜயந்தி’ என்று சொல்லிக் கொண்டாடுவார்கள்.

      இந்தியாவில், அக்டோபர் 2ம் தேதி ‘காந்தி ஜயந்தி’ அல்லவா! அதுபோலத்தான்.

      அதுபோல ‘ஜயம்’ என்பவளும் இங்கு பெண்ணைக்குறிப்பது அல்ல. ’ஜயம்’ என்றால் ’வெற்றி’ என்று இங்கு பொருள் கொள்ளல் வேண்டும்.

      //ஆன்ரீஈஈஈஈஈஈஈஈஈஈ இங்க ஓடி வாங்கோ...:))//

      அடடா, அவங்க நடந்து வரவே நாலு நாழியாகும்! எப்படி ஓடி வருவாங்கோ???? ;)))))

      கம்முன்னு இருங்கோ அதிரா, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ;)

      நீக்கு
    5. JAYANTHI RAMANI May 20, 2013 at 12:39 AM

      வாங்கோ, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //அதிரா, கோபு அண்ணன் கூப்பிட்டதும் முதல்ல ஓடி வந்துட்டேன். //

      மிக்க நன்றிம்மா !

      //அறுசுவை ஜேமாமியை உங்களுக்கு நினைவிருக்கா. நான் தான். எண்ட வலைப்பூக்கு உங்கள அனுப்பச் சொல்லி உங்கட பூசார் கிட்ட சொன்னேனே. சொல்லலையா?//

      நானே பலமுறை சொல்லியாச்சு. இப்போதான் பார்த்து கவனித்திருக்காங்கோ.

      இனி உங்களுக்காச்சு, அவங்களுக்காச்சு. ;)))))

      ஜாடிக்கு ஏற்ற மூடி தான் இருவருமே. வாழ்த்துகள்.

      நீக்கு
  23. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க. அழகிய கதை, ரசிச்சுப் படிச்சேன்ன்.. இதுக்குமேல ஒண்ணும் சொல்ல வருகுதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 19, 2013 at 1:00 PM

      //நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க. அழகிய கதை, ரசிச்சுப் படிச்சேன்ன்.. இதுக்குமேல ஒண்ணும் சொல்ல வருகுதில்லை.//

      மிக்க மகிழ்ச்சி அதிரா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா..

      நீக்கு
  24. அன்பின் VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவரைப் பற்றிய, பல சிறப்பம்சங்களை உங்கள் பதிவுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி! இந்த பதிவில் உங்கள் பதிவில் கிடைத்த அருமையான கருத்துக்கள் இவை ... ..

    //கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு மரியாதைச்சொல். //

    // குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது” //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ May 19, 2013 at 3:40 PM

      //அன்பின் VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //பெரியவரைப் பற்றிய, பல சிறப்பம்சங்களை உங்கள் பதிவுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி! இந்த பதிவில் உங்கள் பதிவில் கிடைத்த அருமையான கருத்துக்கள் இவை ... ..

      *****கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு மரியாதைச்சொல்.

      குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது” ***** //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  25. ஜயஜய சங்கர
    ஹரஹர சங்கர.
    நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் May 19, 2013 at 7:01 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜயஜய சங்கர ஹரஹர சங்கர. நன்றி கோபு சார்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  26. மெய்சிலிர்த்துப்போனேன்.இது போன்ற நிகழ்வுகல் படுக்கும்போதெல்லாம் இப்படித்தான்!நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’படிக்கும்’, படுக்கும் அல்ல!

      நீக்கு
    2. றீச்சர் ஓடிவாங்கோ இன்னொரு மிசுரேக்கு:).. “நிகழ்வுகள்”.. ல் அல்ல:)) கண்டுபிடிச்சனில்ல பூஸோ கொக்கோ.. ம்ஹூம்ம்ம்:)).

      நீக்கு
    3. குட்டன் May 20, 2013 at 12:00 AM

      வாங்க, வணக்கம்.

      //மெய்சிலிர்த்துப்போனேன்.இது போன்ற நிகழ்வுகள் படிக்கும் போதெல்லாம் இப்படித்தான்! நன்றி ஐயா.//

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  27. அன்பின் வை.கோ - அருமையான பதிவு - ஜயந்தி வந்த உடனே ஜயமும் தொடர்ந்து வந்தது நன்று - மஹாப் பெரியவா குறிப்புணர்ந்து அனுக்கிரஹம் பண்ணுபவர். அவரிருக்கப் பயமேன் - சிறுவயதில் தஞ்சையில் மஹாப் பெரியவா பட்டணப் பிரவேசம் செய்த போது கண்டு களீத்திருக்கிறேன். ஒரு பதிவும் இட்டிருக்கிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) May 20, 2013 at 12:05 AM

      வாருங்கள் அன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ - அருமையான பதிவு - ஜயந்தி வந்த உடனே ஜயமும் தொடர்ந்து வந்தது நன்று - மஹாப் பெரியவா குறிப்புணர்ந்து அனுக்கிரஹம் பண்ணுபவர். அவரிருக்கப் பயமேன் - சிறுவயதில் தஞ்சையில் மஹாப் பெரியவா பட்டணப் பிரவேசம் செய்த போது கண்டு களித்திருக்கிறேன். ஒரு பதிவும் இட்டிருக்கிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      தங்களின் அந்தப் பதிவினைப் படித்துப்பார்த்த ஞாபகம் உள்ளது. மீண்டும் பார்க்கிறேன், ஐயா.

      நீக்கு
  28. வியக்க வைக்கும் நல்ல பதிவு.
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
    மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி May 20, 2013 at 2:36 AM

      வாங்கோம்மா, வணக்கமுங்க.

      //வியக்க வைக்கும் நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், வியக்க வைக்கும் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      //மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா!//

      தாங்களே சொல்லிட்டீங்க ! தொடரத்தான் ஆசைப்படுகிறேன். பார்ப்போம். பிராப்தம் கைகூடி வரட்டும். வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  29. மஹாப் பெரியவர் அனுக்கிரஹம் படித்து மனம் குளிர்ந்தது.

    தொடருங்கள்.... காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி May 20, 2013 at 4:34 AM

      வாங்க, வணக்கம்.

      //மஹாப் பெரியவர் அனுக்கிரஹம் படித்து மனம் குளிர்ந்தது. தொடருங்கள்.... காத்திருக்கின்றோம்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  30. எப்படி இப்படி பெரிய பதிவுகளை ஐ மீன் நீண்ட பதிவுகளைச் சலிப்பின்றி பதிகிறீர்களோ!
    மிக நல்ல தகவல்கள் . மிக்க நன்றி.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kavithai (kovaikkavi) May 20, 2013 at 11:13 PM

      வாங்க, வணக்கம்.

      //எப்படி இப்படி பெரிய பதிவுகளை ஐ மீன் நீண்ட பதிவுகளைச் சலிப்பின்றி பதிகிறீர்களோ! //

      இதில் என்ன சலிப்பு இருக்கிறது?

      IN FACT, ஒருசிலரின் மிகச்சிறிய கவிதைகளைப்படித்து, புரிந்து கொள்ளத்தான் எனக்கு மஹா அலுப்பாகவும், சலிப்பாகவும், கடுப்பாகவும் உள்ளது.

      //மிக நல்ல தகவல்கள் . மிக்க நன்றி. நல்வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்.//

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  31. படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது ஐயா..மேலும் தொடர வேண்டுகிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga May 21, 2013 at 4:52 AM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது ஐயா..மேலும் தொடர வேண்டுகிறேன்!!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா..

      நீக்கு
  32. ம்காபெரியவரின் தீர்க்க தரிசனமும் கருணையும் நெகிழ வைத்தது!//கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன்// மிகவும் இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. May 21, 2013 at 9:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ம்காபெரியவரின் தீர்க்க தரிசனமும் கருணையும் நெகிழ வைத்தது!//

      மிகவும் சந்தோஷம், சார்.

      *****கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன்*****

      மிகவும் இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமானக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  33. //இவரை நாம் கண்ணால் தரிஸனம் செய்துள்ளோம். இவருக்கு நமஸ்காரம் செய்துள்ளோம். இவர் நம்மை தனது கண்களாலும் கைகளாலும் அனுக்கிரஹித்து உள்ளார். அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்//

    படிக்கும்போதே மெய் சிலிர்க்கவைக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் May 22, 2013 at 12:39 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      *****இவரை நாம் கண்ணால் தரிஸனம் செய்துள்ளோம். இவருக்கு நமஸ்காரம் செய்துள்ளோம். இவர் நம்மை தனது கண்களாலும் கைகளாலும் அனுக்கிரஹித்து உள்ளார். அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்*****

      //படிக்கும்போதே மெய் சிலிர்க்கவைக்கிறது !//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமானக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள். சார்.

      நீக்கு
  34. hello sir.. its soo nice to read your article... I do not know your email address.. Please send me a test mail to acolorfulbutterfly@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Riya Kathir May 22, 2013 at 1:14 AM

      அன்புள்ள ரியா வாங்கோ, வணக்கம்.

      //hello sir.. its soo nice to read your article...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமானக் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ரியா.

      // I do not know your email address.. Please send me a test mail to acolorfulbutterfly@gmail.com//

      Test Mail sent to you, as requested. Welcome. Bye for now. - GOPU

      நீக்கு
  35. கண்கலங்க வைக்கும் சம்பவம்.
    எனக்கு ஒரு மிகப் பெரிய குறை உண்டு. குற்ற உணர்ச்சி என்றும் சொல்லலாம். மகா பெரியவரை நான் ஒருமுறை கூட தரிசனம் செய்ததில்லை. என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். May 23, 2013 at 3:20 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //கண்கலங்க வைக்கும் சம்பவம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //எனக்கு ஒரு மிகப் பெரிய குறை உண்டு. குற்ற உணர்ச்சி என்றும் சொல்லலாம். மகா பெரியவரை நான் ஒருமுறை கூட தரிசனம் செய்ததில்லை. என்ன சொல்ல?//

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இன்றும் பல பக்தர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டு, அவர்களை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் உள்ளார்கள்.

      தங்கள் மனக்குறை நீங்க ஓர் சிறிய உபாயம் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

      காஞ்சி சங்கரமடத்திற்குச்செல்லுங்கள். அங்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம் உள்ளது. மிகச்சிறிய பகுதி தான்.

      காலை ஸ்நானம் செய்துவிட்டு, மடி வஸ்த்ரங்களுடன் அதிஷ்டானத்தை முடிந்தால் 12 பிரதக்ஷணம் செய்யுங்கள்.

      அந்த அதிஷ்டானத்திலேயே ஓர் கண்ணாடி அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா நேரில் பிரத்யக்ஷமாக அமர்ந்திருப்பதுபோலவும், ஆசி வழங்குவதுபோலவும், மெழுகினால் ஓர் மிகப்பெரிய சிலை செய்து வைத்துள்ளார்கள்.

      ஒவ்வொரு பிரதக்ஷண முடிவிலும் அந்த மெழுகுச்சிலைக்கு 4 நமஸ்காரங்கள் செய்யுங்கள்.

      பக்தி சிரத்தையுடன், நம்பிக்கையுடன் செய்யுங்கோ. அன்று இரவே உங்கள் கனவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, பிரத்யக்ஷமாகக் காட்சி தருவார்.

      முடிந்தால் வரும் 25.05.2013 சனிக்கிழமையே செய்யுங்கள். அல்லது வேறு ஏதாவது ஒரு மாத அனுஷத்தில் இதைச்செய்யுங்கள்.

      வில்வம் அல்லது துளஸி மாலை மட்டும் வாங்கிச்செல்லுங்கள். அதிஷ்டானத்திற்கு அந்த மாலையைப் போடச்சொல்லுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்..

      நீக்கு
  36. மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் அழகான கதையாக பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 23, 2013 at 3:25 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் அழகான கதையாக பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..//

      மிகவும் சந்தோஷம்.

      நீக்கு
  37. ஆத்திலே .... பேரு என்ன ... ம்... தர்மாம்பாள்தானே? செளக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்; அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ... என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரி தானே?//

    கனகபாடிகளுக்கு எப்படி இருந்திருக்கும் அந்த சூழ் நிலையில் பெரியவர் அனைத்து விஷயங்களையும்
    சொல்லும்போது !!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 23, 2013 at 3:30 AM

      *****ஆத்திலே .... பேரு என்ன ... ம்... தர்மாம்பாள்தானே? செளக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்; அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ... என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரி தானே?*****

      //கனபாடிகளுக்கு எப்படி இருந்திருக்கும் அந்த சூழ் நிலையில் பெரியவர் அனைத்து விஷயங்களையும் சொல்லும்போது !!!!!!!//

      ஆமாம். நிர்மலா. அவர்களுக்கு ஞாபகசக்தி மிக அதிகம். மேலும் கடும் தபோவலிமையினால் அவரால் எதையுமே மிகச்சுலபமாக [முக்காலமும்] உணர்ந்து சொல்லமுடியும்.

      நானே பலமுறை தரிஸனத்திற்குச்சென்றபோது, இதை நேரில் கவனித்து மிகவும் வியந்து போயுள்ளேன்.

      நீக்கு
  38. ”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.//

    i appreciate Mrs.Kanagapaadigal here...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 23, 2013 at 3:34 AM


      ***** ”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.*****

      // I appreciate Mrs.Kanagapaadigal here...:)) //

      I appreciate YOU here NIRMALA, for exactly pointed out the correct scene.

      பணத்தையும் அந்த மாமி எண்ணிப்பார்க்கவில்லை. இதுபோல ஓர் அனுக்ரஹம் கிடைக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்கவில்லை அல்லவா! ;)))))

      நீக்கு


  39. அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.//

    மனதை நெகிழவைத்தது !!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 23, 2013 at 3:40 AM

      *****அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.*****

      //மனதை நெகிழவைத்தது !!!!!//

      நெகிழ வைத்தத் தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி, நிர்மலா..

      நீக்கு
  40. [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**//



    ஆமாம் அண்ணா மிக நல்ல விஷயம் .

    நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடைய வேணும் ..மேலும் அடுத்த சந்ததிக்கு வருங்கால பிள்ளைகளுக்கு கண்டிப்பாக பயன்படும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 23, 2013 at 3:45 AM

      ***** [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.*****

      //ஆமாம் அண்ணா மிக நல்ல விஷயம் .

      நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடைய வேணும் .. மேலும் அடுத்த சந்ததிக்கு வருங்கால பிள்ளைகளுக்கு கண்டிப்பாக பயன்படும் .//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான பல்வேறு கருத்துக்களுக்கும், வரப்போகும் பதிவுகளுக்காக, ஆறுதலான ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  41. Mall a nekizavaithathu into a kathai I will come again and write more comments very soon.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vijiskitchencreations May 23, 2013 at 4:17 PM

      வாங்கோ விஜிசத்யா மேடம், வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      30.04.2013 அன்று தாங்கள் இந்தியா வந்திருப்பதாகச்சொல்லி எனக்கு ஓர் மெயில் கொடுத்து என் தொலைபேசி எண்ணைக் கேட்டிருந்தீர்கள்.

      நான் அன்றைக்கே உடனடியாக பதில் அனுப்பி இருந்தேன்.

      தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்வதாகவும், 11.05.2013 வரை இந்தியாவில் தான் இருப்பேன் என்றும் சொல்லியிருந்தீர்கள்.

      அதன் பிறகு தங்களிடமிருந்து எனக்கு எந்தத்தகவலும் இல்லை.

      இப்போ எங்கே இருக்கிறீர்கள்? நான் தங்களுக்கு என் கைபேசி எண்ணுடன் அனுப்பிய மெயிலைப் பார்த்தீர்களா? இல்லையா !

      ஏன் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. பிறகு நேரம் கிடைக்கும்போது மெயிலில் பதில் எழுதுங்கோ.

      //Mall a nekizavaithathu into a kathai I will come again and write more comments very soon.//

      Very Glad. Thanks a Lot Viji Sathya, Madam. Kindly convey my kind enquiries to your daughter Divya. With Best Wishes ...... VGK

      நீக்கு
  42. அழகான பதிவு ஐயா படிக்க படிக்க வந்து கொண்டே இருந்தது கருணையின் ரகசியமும் அருமை
    நன்றிகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. SRH May 24, 2013 at 12:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகான பதிவு ஐயா //

      மிக்க மகிழ்ச்சி.

      //படிக்க படிக்க வந்து கொண்டே இருந்தது கருணையின் ரகசியமும் அருமை //

      அந்தக் கருணாமூர்த்தியின் அனுக்ரஹ ரகசியம் முடிவில்லாதது. அதனால் படிக்கப்படிக்க மேலும் வந்துகொண்டே தான் இருக்கும்.

      நான் எவ்வளவோ சுருக்கமாகத்தான் இங்கு கொடுத்துள்ளேன் ;)

      தங்களைப்போல மிகச்சுருக்கமான பதிவுகளாகத்தந்து எனக்குப்பழக்கம் இல்லை.

      இருப்பினும் இனிவரும் பதிவுகளை அதுபோல குட்டியூண்டு பதிவுகளாகத்தர முயற்சிக்க உள்ளேன்.

      //நன்றிகள் ஐயா//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  43. பக்திப் பரவசம் பலதையும் மறக்கடிக்கும் ஓர் அருமையான தகவலை இன்றைய நாளில் மிகவும் ரசித்துப் படித்த பாக்கியம் எனக்கும் கிட்டியது தங்களால் ! தீர்க்கதரிசிகள் இறைவனின் தூதுவர்கள் நாம் எதையும் சொல்லித் தான் தெரியப்படுத்த வேண்டும் என்பது கிடையாது அவ்வாறே ராமநாத கனபாடிகளின் உள்ளத்தைக் குளிர வைத்த மகானின் ஜெயந்தி தினத்தை நாளை நாமும் பூஜித்து ஜெயம் பெறுவோம் அனைவருக்கும் இந்நாள் இன்பம் அளிக்கும் நன்னாளாக அமையட்டும் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ambal adiyal May 24, 2013 at 2:22 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பக்திப் பரவசம் பலதையும் மறக்கடிக்கும் ஓர் அருமையான தகவலை இன்றைய நாளில் மிகவும் ரசித்துப் படித்த பாக்கியம் எனக்கும் கிட்டியது தங்களால் !//

      மிக்க மகிழ்ச்சி.

      //தீர்க்கதரிசிகள் இறைவனின் தூதுவர்கள் நாம் எதையும் சொல்லித் தான் தெரியப்படுத்த வேண்டும் என்பது கிடையாது அவ்வாறே ராமநாத கனபாடிகளின் உள்ளத்தைக் குளிர வைத்த மகானின் ஜெயந்தி தினத்தை நாளை நாமும் பூஜித்து ஜெயம் பெறுவோம்.//

      மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

      //அனைவருக்கும் இந்நாள் இன்பம் அளிக்கும் நன்னாளாக அமையட்டும் .//

      ஆமாம். அனைவருக்குமே இந்நாள் மட்டுமல்ல, எல்லா நாடகளுமே இன்பம் அளிக்கும் நன்னாளாகவே அமையட்டும். தங்களின் இத்தகைய நல்ல பொதுநல எண்ணங்களுக்குப் பாராட்டுக்கள்.

      //மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  44. அருமையான கட்டுரை. பெரியவா பெரியவாதான். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kasiviswanath ramanathan May 25, 2013 at 9:34 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //அருமையான கட்டுரை. பெரியவா பெரியவாதான். நன்றி.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  45. ள், “ஐயா ... ஐயா ... அந்தத்தட்டிலே என் பெண்ணின் கல்யாணப் பத்திரிகைகள் வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். அதை இப்படிக்கொடுங்கோ” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.

    விழ வேண்டியவர் காதில்
    விழுந்தாகிவிட்டதே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 26, 2013 at 12:12 AM

      வாங்கோ, வாங்கோ, தங்களின் மீண்டும் மீண்டும் வருகை, எனக்கு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்தோஷம். நன்றி.

      ***** “ஐயா ... ஐயா ... அந்தத்தட்டிலே என் பெண்ணின் கல்யாணப் பத்திரிகைகள் வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். அதை இப்படிக்கொடுங்கோ” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.*****

      //விழ வேண்டியவர் காதில் விழுந்தாகிவிட்டதே..!//

      ஆம் அதுதான் மிகவும் முக்கியம். மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

      [இருப்பினும் என் கோரிக்கைகள் விழ வேண்டியர் காதில் இன்னும் விழுந்ததாகத் தெரியவில்லை. ;( ]

      நீக்கு
  46. மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ; பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ ... ஒங்களுக்கு ‘இல்லே’ன்னு சொல்லமாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன். /

    நம்பிக்கையுடன் வந்தவருக்கு கேட்காமலேயே
    நினைத்தது கிடைத்ததே..!
    நம்பினார் கெடுவதில்லை..
    நான்குமறை தீர்ப்பாயிற்றே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 26, 2013 at 12:15 AM

      ***** மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ; பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ ... ஒங்களுக்கு ‘இல்லே’ன்னு சொல்லமாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன்.*****

      //நம்பிக்கையுடன் வந்தவருக்கு கேட்காமலேயே நினைத்தது கிடைத்ததே..! //

      அவர்செய்துள்ள பாக்யம் அப்படி. கேட்காமலேயே அனுக்ரஹம் கிடைத்துள்ளது.

      ஆனால் எனக்கு ???? மனதில் நினைத்தும், வாய் விட்டேக் கேட்டும்கூட ஒருசில விஷயங்கள் இதுவரை கிடைக்கவில்லையே!

      நான் செய்த பாக்யம் அப்படிப்போலிருக்கு.;(

      //நம்பினார் கெடுவதில்லை.. நான்குமறை தீர்ப்பாயிற்றே...!!! //

      இன்னும் ஏதோவொரு நம்பிக்கையுடன் தான், நானும் இருந்து வருகிறேன். பார்ப்போம்.

      நினைத்தேன் .... வந்தாய் [வந்தீர்கள்] நூறு வயது !

      தங்களின் பின்னூட்ட எண்ணிக்கை நூற்றுக்கு நூறு எனக்காட்டுகிறது. அதைத்தான் சொல்கிறேன். ;)))))

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றியோ நன்றிகள்.

      நீக்கு
  47. மகாபெரியவரின் மேன்மையைப் பறைசாற்றும் மகத்தான அனுபவம். வாசிப்போரை மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவம். பெரியவரின் ஜெயந்தியை முன்னிட்டு இப்பதிவை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  48. கீத மஞ்சரி May 26, 2013 at 6:33 PM

    வாங்கோ, வணக்கம்.

    //மகாபெரியவரின் மேன்மையைப் பறைசாற்றும் மகத்தான அனுபவம். வாசிப்போரை மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவம். பெரியவரின் ஜெயந்தியை முன்னிட்டு இப்பதிவை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வை.கோ.சார்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  49. Aasai May 27, 2013 at 9:41 AM

    //தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.//

    தகவலுக்கு மிக்க நன்றி. தற்சமயம் என் பதிவுகளை எந்தத் திரட்டியிலும் இணைக்க நான் விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  50. பேரனின் உபனயனத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் பெங்களூர் திரும்பினேன். கூடிய விரைவில் எல்லாப் பதிவுகளையும் படித்து பின்னூட்டம் எழுதுகிறேன். பொறுத்தருள பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan May 30, 2013 at 9:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பேரனின் உபனயனத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் பெங்களூர் திரும்பினேன்.//

      மிகவும் சந்தோஷம். வடுவுக்கு [தங்கள் பேரனுக்கு] என் அன்பார்ந்த ஆசிகள். வாழ்த்துகள்.

      //கூடிய விரைவில் எல்லாப் பதிவுகளையும் படித்து பின்னூட்டம் எழுதுகிறேன். பொறுத்தருள பிரார்த்தனை.//

      அடடா, ஒன்றும் அவசரமே இல்லை. மெதுவா வாங்கோ, மெதுவா படியுங்கோ, மெதுவா கருத்துச்சொல்லுங்கோ. Take your own Time. No urgency at all, Madam.

      நீக்கு
  51. Gopu Sir, Though I could not visit your blog post that day, I was thinking that you will certainly make a post on mahaperiyava. Glad to read the miracle incident. Thanks for sharing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira May 31, 2013 at 12:27 AM

      வாங்கோ மீரா, வணக்கம்.

      //Gopu Sir, Though I could not visit your blog post that day, I was thinking that you will certainly make a post on mahaperiyava. Glad to read the miracle incident. Thanks for sharing.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா. WELCOME !

      நீக்கு
  52. அன்பார்ந்த ஐயா வணக்கம். ஒரு பக்திக்கதை படிப்பது போலிருந்தது இந்தப் பதிவு.மகாப்பெரியவாளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படிக்கும்போதே கண்களில் நீர் நிறைகிறது.புதிய உலகத்திற்கு இட்டுச்செல்லும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
    அன்புடன்
    ருக்மணி சேஷசாயி

    பதிலளிநீக்கு
  53. Rukmani Seshasayee June 2, 2013 at 9:52 PM

    //அன்பார்ந்த ஐயா வணக்கம். //

    வாங்கோ, மேடம். அன்பான இனிய நமஸ்காரங்கள்.

    //ஒரு பக்திக்கதை படிப்பது போலிருந்தது இந்தப் பதிவு. மகாப்பெரியவாளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படிக்கும்போதே கண்களில் நீர் நிறைகிறது. புதிய உலகத்திற்கு இட்டுச்செல்லும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அன்புடன்//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  54. எனக்கும் அவரின் தரிசனம் கிடைத்தது நான் செய்த புண்ணியமே.அவரின் சிந்தனைகளை புத்தகம் வாயிலாக வாசித்திருக்கிறேன் உங்க பதிவுகளிலிருந்தும் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கு. உங்க தொடர் தொடர வாழ்த்துக்கள்.
    படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆரம்பமே அழகாக உள்ளது.
    மனதை நெகிழவைத்தது. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  55. ammulu June 10, 2013 at 11:54 PM

    வாங்கோ அம்முலு, வணக்கம்.

    //எனக்கும் அவரின் தரிசனம் கிடைத்தது நான் செய்த புண்ணியமே. அவரின் சிந்தனைகளை புத்தகம் வாயிலாக வாசித்திருக்கிறேன் உங்க பதிவுகளிலிருந்தும் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கு. உங்க தொடர் தொடர வாழ்த்துக்கள். //

    மிகவும் சந்தோஷம் அம்முலு
    .
    //படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆரம்பமே அழகாக உள்ளது.
    மனதை நெகிழவைத்தது. நன்றிகள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் ஐயா.. மிகவும் பயனுள்ள பதிவு. நல்ல முயற்சி.
    அனைவருக்கும் சத்சங்க விஷயங்களாக இவைகள் சென்றடையும்போது பலன் நிறையவே உண்டு.

    தங்களின் வேண்டுகோளால் உரிய நேரங்களில் படிக்கமுடியாது தவறவிட்ட பதிவுகளை படித்து அவற்றிற்கு கருத்துப்பதிவினை இன்று இங்கு பதிக்கின்றேன்.

    நல்ல முயற்சி! தொடருங்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி June 16, 2013 at 9:10 AM

      //வணக்கம் ஐயா..//

      வாங்கோ இளமதி. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களாம்மா?

      //மிகவும் பயனுள்ள பதிவு. நல்ல முயற்சி. அனைவருக்கும் சத்சங்க விஷயங்களாக இவைகள் சென்றடையும்போது பலன் நிறையவே உண்டு.//

      அப்படியாம்மா. மிகவும் சந்தோஷமம்மா.

      //தங்களின் வேண்டுகோளால் உரிய நேரங்களில் படிக்கமுடியாது தவறவிட்ட பதிவுகளை படித்து அவற்றிற்கு கருத்துப்பதிவினை இன்று இங்கு பதிக்கின்றேன்.//

      இந்தப்பதிவுக்குப்பிறகு நான் யாருக்கும் எந்தத்தகவலோ, வேண்டுகோளோ கொடுப்பதை நிறுத்திக்கொண்டு விட்டேன், இளமதி.

      ஆன்மிகப்பதிவுகளாக தொடர இருப்பதால், இதில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும், அவர்களாகவே விருப்பப்பட்டால் வரட்டும் என, முடிவு செய்து விட்டேன்.

      //நல்ல முயற்சி! தொடருங்கள் ஐயா... வாழ்த்துக்கள்!//

      இன்று ஒரே நாளில் தாங்களாகவே என் பல பதிவுகளுக்கு வருகை புரிந்து, கருத்துக்கள் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், இளமதி.

      நீக்கு
  57. எத்தனை வாசித்தாலும் திகட்டாத அனுபவப் பகிர்வுகள்..

    பலமுறை நேரில் தரிசித்த நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
  58. அமைதிச்சாரல் June 19, 2013 at 1:59 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //எத்தனை வாசித்தாலும் திகட்டாத அனுபவப் பகிர்வுகள்..//

    ஆமாம் மேடம், மிகவும் சந்தோஷம்.

    //பலமுறை நேரில் தரிசித்த நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.//

    ஏதோ அவர்களை அடிக்கடி நேரில் தரிஸிக்கும் பாக்யம் எனக்கு அவர்கள் அருளால் கிடைத்தது, மேடம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

    இதன் அடுத்தடுத்த சிறுசிறு பகுதிகளைத் தொடர்ந்து படித்து, கருத்தளித்து உற்சாகப்படுத்தினால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், மேடம். முடிந்தால் பாருங்கோ, ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  59. உண்மையான பக்தியில் கிடைக்கும் அனுபவம் மிராக்கல் போல அமைவது ஆச்சர்யமும் சந்தோசத்தையும் ஏற்படுத்துகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar July 26, 2013 at 6:13 PM

      அன்புள்ள ஆச்சி, வாங்கோ ... வாங்கோ ... வாங்கோ. வணக்கம்.

      //உண்மையான பக்தியில் கிடைக்கும் அனுபவம் மிராக்கல் போல அமைவது ஆச்சர்யமும் சந்தோசத்தையும் ஏற்படுத்துகின்றது.//

      ஆஹா, நீங்க வெகுநாட்களுக்குப்பின் என் வ்லைத்தளத்தில், இன்று ..... அதுவும் இந்த முக்கியமான மிராக்கல் பகுதியைப் படித்துள்ளதே ஒரு மிகப்பெரிய மிராக்கல் ஆகத் தோன்றுகிறது, எனக்கு.

      அன்புள்ள ஆச்சி ..... இந்தத்தொடரை மட்டும் தொடர்ந்து படியுங்கள். இனி வருபவை மிகச்சிறிய பதிவுகளாகவே இருக்கும். உங்கள் மனதுக்கு [கவலைகளுக்கு] நிச்சயம் ஆறுதல் அளிப்பதாகவே இருக்கும்.

      அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  60. அன்பின் வை.கோ - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணை கனபாடிகளுக்குக் கிடைத்தது இயல்பான ஒன்று - தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களைப் பார்க்காமலேயே ஆவன் செய்வார். இது ஏற்கனவே மே 20ம் நாளே படித்து இரசித்து மறுமொழியும் இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  61. cheena (சீனா) August 17, 2013 at 2:01 AM

    வாங்கோ, என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

    //அன்பின் வை.கோ - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணை கனபாடிகளுக்குக் கிடைத்தது இயல்பான ஒன்று - தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களைப் பார்க்காமலேயே ஆவன் செய்வார்.//

    ஆமாம் ஐயா, சத்தியமான வாக்கு தான் தாங்கள் சொல்வது. இதை அனுபவித்த உணர்ந்த ஒருசிலராலேயே உணர முடியும்.

    //இது ஏற்கனவே மே 20ம் நாளே படித்து இரசித்து மறுமொழியும் இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    ஆமாம் ஐயா. ஏற்கனவே வருகை தந்து வாழ்த்தியுள்ளீர்கள்.

    cheena (சீனா)May 20, 2013 at 12:05 AM

    அது இந்தியாவிலிருந்து நீங்க எழுதினது. இன்று லண்டனிலிருந்து எழுதியது மேலும் சிறப்பு தான். மீண்டும் வ்ருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  62. Great..சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..Just started, reading with your old posts about Periyava..All posts are really wonderful and fantastic..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sripriya vidhyashankar November 5, 2013 at 5:24 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Great..சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..Just started, reading with your old posts about Periyava..All posts are really wonderful and fantastic..//

      மிகவும் சந்தோஷம். தாங்கள் படிக்க ஆரம்பித்துள்ள இந்தப் பதிவு மிகவும் பொருத்தமானது.

      இதிலிருந்து துவங்கி தான் நான் தொடர்ந்து இதுவரை 75 பகுதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைப்பற்றி எழுதி வருகிறேன்.

      எல்லாவற்றையும் பொறுமையாகப்படியுங்கோ. மிகவும் சிறுசிறு பகுதிகளாகவே படங்களுடன் இருக்கும்.

      படித்தவைகளுக்கு மட்டும் JUST ;) ஒரு சிறிய COMMENT
      கொடுங்கோ, ப்ளீஸ்.

      மேலும் ஓர் மஹானைப்பற்றி நான் ஏற்கனவே 20 பகுதிகளாக ஓர் தொடர் எழுதியுள்ளேன்.

      அவரைப்பற்றி தங்களுக்கே நிச்சயமாகத் தெரிந்து இருக்கலாம்.

      ஏனெனில் அவருடைய பூர்வஸ்ரம மாப்பிள்ளை மிகப்பிரபலமான தங்கள் பிறந்த ஊரான ’செதலபதி பாகவதர்’ ஆவார். இணைப்புகள் இதோ:

      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_14.html பகுதி-1

      http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_07.html பகுதி-20

      அன்புடன் VGK

      நீக்கு
  63. கருணை ததும்பும் சம்பவம். படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

    பதிலளிநீக்கு
  64. குருவிடம் ஞானத்தை தான் யாசிக்கலாம், தானத்தை அல்ல சத்யமான வார்த்தைகள் எல்லாருக்குமே இந்த புராதல் இருக்கணும்

    பதிலளிநீக்கு
  65. குரு கிட்டக்கின பணம்லா கேடிடுடப்ளடாதுன்னு அவங்க நெனச்சி போட்டாக. ஆனாகாட்டியும் கேக்காட்டியும் குருவே பணம் அனுப்பிட்டாங்க. நல்ல குருசாமிதா.. இந்த உபன்யாசம் சம்பாவனல்லா வெளங்கல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2015 at 10:20 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //குரு கிட்டக்கின பணம்லா கேடிடுடப்ளடாதுன்னு அவங்க நெனச்சி போட்டாக. ஆனாகாட்டியும் கேக்காட்டியும் குருவே பணம் அனுப்பிட்டாங்க. நல்ல குருசாமிதா..//

      :)))))

      //இந்த உபன்யாசம் சம்பாவனல்லா வெளங்கல//

      உபன்யாசம் = இராமாயணம், மஹா பாரதம் போன்ற இதிகாசங்களை மக்களுக்கு கதைகளாக விளக்கிச் சொல்லி புரிய வைத்தல்.

      அவ்வாறு அழகாக மக்களுக்கு எடுத்துச் சொல்பவரை ’உபன்யாசகர்’ என்றும் அழைப்பதுண்டு.

      இவ்வாறு உபன்யாசம் செய்த உபன்யாசகருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து, பணம் போட்டு, வசூல் செய்து, பொருளுதவி + பண உதவி செய்வதை ‘சம்பாவனை’ என்று சொல்வார்கள். நிறைய படித்த பண்டிதர்களுக்குக் கொடுப்பதை ’வித்வத் சம்பாவனா’ என்று சொல்வார்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான சந்தேகக் கேள்விகளுக்கும் மிக்க நன்றிம்மா.

      அன்புடன் குருஜி

      நீக்கு
  66. நீங்க ஆத்மார்த்தமாக பக்தி செலுத்தி வருவதால் பெரியவாளின் பரிபூரண அருட்கடாட்சம் உங்களுக்கு நிறையவே கிடைத்து வருகிறது. ஈஸ்வரோ ரட்சதுன்னு அவரை சரணாகதி அடைந்துவிட்டால் குறையொன்றுமில்லைதான்.

    பதிலளிநீக்கு
  67. நம்பினார் கெடுவதில்லை...நான்குமறைத் தீர்ப்பு...அருமை

    பதிலளிநீக்கு