என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !

என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் 
கேட்டுப்பார் !

அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்



04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' என்ற வலைத்தளத்தில் எழுதிவரும் நம் அன்புக்குரிய பதிவர் திரு. அப்பாதுரை சார் அவர்கள் திடீரென்று என் வீட்டுக்கு வருகை தந்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். 

நம் அன்புக்குரிய பதிவர் திரு, வெங்கட் நாகராஜ்  அவர்கள் தான் இவரை என் வீட்டுக்குக் கூட்டிவந்திருந்தார். ஒரு அரை மணிநேரம் மட்டுமே, சுவாரஸ்யமாக சில விஷயங்களை எங்களுக்குள்  பகிர்ந்து கொள்ள முடிந்தது. பிறகு விடைபெற்றுச்சென்று விட்டார்கள்.

சிகாகோவிலிருந்து புறப்பட்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  திருச்சி வரை வந்த இவர் என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பி, வந்து பேசிவிட்டுச்சென்றது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

திரு. அப்பாதுரை அவர்கள் தனது இந்திய சுற்றுப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக ஓர் பதிவாகவே தந்துள்ளார்கள்.

இணைப்பு இதோ:

http://moonramsuzhi.blogspot.in/2013/01/blog-post_27.html


தலைப்பு “காணாமல் போன காலம்” 27th January, 2013 

அதில் அவர் தன் திருச்சி விஜயத்தைப்பற்றி எழுதியுள்ள வரிகள்:

திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2தில்லி, வைகோ, கீதா சாம்பசிவம் பதிவர்களைச் சந்தித்தேன். எவருடனும் அதிக நேரம் உரையாட முடியவில்லை. 

அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.

இதற்கு Mrs. GOMATHI ARASU Madam, Mrs. GEETHA SAMBASIVAM Madam and Mrs. MEENAKSHI Madam ஆகியோர், என் வீட்டு ஜன்னலில் அப்படி என்ன விசேஷம் என்று  ஒரு சில விளக்கங்கள் கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அளித்த தன் பதிலில் திரு. அப்பாதுரை சார் அவர்கள்: கூறியுள்ளது:

அப்பாதுரை கூறியது...

பின்னூட்டங்களுக்கு நன்றி.




வை.கோ வீட்டு ஜன்னலைப் பற்றி வியக்கும் உரிமை எனக்குண்டு; 

விளக்கும் உரிமை வை.கோவுக்கு மட்டுமே உண்டு.. 

(முதல் உரிமை privilege இரண்டாவது right - டமில் வால்க:-)  
என் வீட்டு ஜன்னலைப்பற்றி விளக்கும் உரிமை எனக்கே உண்டு என்று சொல்லி என்னை இந்தப்பதிவிடத்தூண்டியுள்ள திரு. அப்பாதுரை சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.
திருச்சி ஜங்ஷனுக்கும்  திருச்சி ஸ்ரீரங்கம் + திருவானைக்கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதி ”மெயின் கார்டு கேட் என்றும் சத்திரம் பேருந்து நிலையம்” என்றும் அழைக்கப்படுகிறது. இது தான் HEART OF THE TIRUCHIRAPPALLI TOWN ஆகும். 
இங்கு தான் புகழ்பெற்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச்செல்லும் மலைவாசல் நுழைவாயிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் பிரபல கல்லூரிகளும், பள்ளிகளும், பிரபல மருத்துவ மனைகளும், பல்வேறு வங்கிகள் மற்றும் வணிக வளாகங்களும், காய்கனிச் சந்தைகளும், பல்வேறு கோயில்களும், குடியிருப்புகளும் அமைந்துள்ளன.      
அதுவும் இந்த மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் கோயிலைச் சுற்றியுள்ள தேர் ஓடும் வீதிகளான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோடு, நந்தி கோயில் தெரு, வடக்கு மற்றும் கிழக்கு ஆண்டார் தெரு, சின்னக்கடைத்தெரு ஆகியவை மிகவும் முக்கியமானவை. 

இந்தப்பகுதிகளில் ஒரு சதுர அடியின் தற்போதய விலை ரூ 10000 முதல் ரூ 30000 வரை சொல்லப்படுகிறது. சந்து, பொந்து, சாக்கடை மெயின் ரோடு போன்றவைகளுக்குத் தகுந்தாற்போல இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருந்தால் சற்றே 20% இந்த விலையில் குறையக்கூடும்.  பணம் நாம் அள்ளிக் கொடுத்தாலும், இங்கெல்லாம் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு போல ஆகிவிட்டது இப்போது.
இந்தத்தேர் ஓடும் வீதிகளின் ஒன்றான வடக்கு ஆண்டார் தெருவினில் மெயின் ரோட்டின் மீது அமைந்துள்ள  ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பில் தான்,  இரண்டாவது தளத்தினில் அடியேன் இப்போது வசித்து வருகிறேன்.  


SIVASHAKTHI TOWERS 
என்ற எழுத்துக்களுக்கு மேல் தனித்தனியாக 
மூன்று மிகப்பெரிய  ஜன்னல்கள் தெரிகின்றன அல்லவா! 
அவற்றில் கூட இரண்டு, SPLIT A.C. களின் 
OUT DOOR UNITS பொருத்தப்பட்டுள்ளனவே! 
அது தாங்க நம்ம வீடு.


இந்தக் குடியிருப்பு வளாகத்தின் பெயர்: சிவசக்தி டவர்ஸ் என்பதாகும். இதில் தரைத்தளத்தில் 5 வீடுகளும். முதல் தளத்தில் 8 வீடுகளும், இரண்டாவது தளத்தில் 7 வீடுகளும், மூன்றாவது தளத்தில் 8 வீடுகளுமாக மொத்தம் 28 வீடுகள் உள்ளன. 
குடியிருப்புப் பகுதிகளுக்குச்செல்லும் நுழை வாயில் பாதை, கட்டடத்தை நோக்கி நின்றால் வலது புறமாக அமைந்துள்ளது. 

அதைத்தவிர முன்பக்கம் தரையிலும், அண்டர் கிரெளண்டிலும், முதல் தளத்திலும் சில வணிக வளாகங்களும் அலுவலகங்களும் அமைந்துள்ளன. 
கீழே அண்டர் கிரெளண்டில் கார் பார்க்கிங் + ஸ்கூட்டர், பைக், சைக்கிள் பார்க்கிங் இட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கான பாதை கட்டடத்தை நோக்கி நின்றால் இடதுபுறம் அமைந்துள்ளது.

நான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் ஓர் வீடு வாங்கிய ஆண்டு 2001. என் அருமைப்பேத்தி “பவித்ரா” பிறந்து நான் வாழ்க்கையில் முதன்முதலாக தாத்தா என்ற பதவி உயர்வினைப்பெற்று இரண்டே ஆண்டுகள் ஆகியிருந்த சமயம் அது. 

அதனால் இந்த என் வீட்டின் பெயரும் “பவித்ராலயா” என என்னால் வைக்கப்பட்டது.






நான் இந்த வீட்டை கஷ்டப்பட்டு அன்று வாங்கியது மிகப்பெரிய தனிக் கதை. அதைப்பற்றி நான் எழுத ஆரம்பித்தால் தனியாக பத்துப்பதிவுகள் தரக்கூடிய அளவுக்கு என்னிடம் விஷயங்கள் உள்ளன. 

மற்ற 27 வீடுகளுக்கும் இல்லாத சில தனிச்சிறப்புகள் இந்த என் வீட்டுக்கு மட்டுமே உண்டு.
ROAD FACING வீடு என்ற தனிச்சிறப்பு உண்டு. அதனால் இயற்கையான காற்றும், வெளிச்சமும் வீட்டின் பெரும்பகுதிகளுக்குக் கிடைப்பதுண்டு. 

கீழே தெருவில் தேர் போனாலும் ஸ்வாமி புறப்பாடுகள் சென்றாலும். படி இறங்கிக்கீழே செல்லாமலேயே வீட்டில் இருந்த படியே ஜன்னல் மூலமாக அவற்றை கண்டு களிக்க முடியும். 

கட்டட அமைப்பினில் ஒரு ஓரத்து வீடாக அமைந்துபோய் விட்டதில் பல செளகர்யங்கள். அடுக்குமாடிக் கட்டடத்தில் உள்ளோம் என்ற உணர்வே இன்றி தனிவீடு போன்ற ஓர் அனுபவத்தை உணர முடிகிறது. 

துணிகள் உலர்த்த மொட்டைமாடிக்குச் செல்ல வேண்டியது இல்லை. 

எங்கள் வீட்டு வாசலிலேயே கொடி கட்டிக்கொண்டு, பிறர் [அதாவது அக்கம்பக்கத்தார்] யாருக்கும் எந்தத் தொந்தரவும் இன்றி துணிகளை உலர்த்திக்கொள்ள முடிகிறது.  
எங்கள் சிவஷக்தி டவர்ஸ் கட்டடம் தெற்கு பார்த்தது. என் வீட்டிலுள்ள மிகப்பெரிய மொத்த ஜன்னல்கள் ஏழினில் மூன்று தெற்கு பார்த்தது.  

வீட்டின் பிரதான நுழைவாயில் [Main Door] கிழக்குப்பார்த்தது. 

Outer Steel Gate மட்டும் வடக்கு பார்த்தது. Main Door க்கும் Outer Steel Gate க்கும் இடைப்பட்ட பகுதி Sit Out + Balcony யாக அமைந்துள்ளதால் தெருவில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க செளகர்யமாக உள்ளது. 
இந்த சிவஷக்தி டவர்ஸ் கட்டடத்தின் எண்: 5 [ஐந்து] ஆகும்.
இதற்கு அருகே அடுத்த கட்டடத்திலேயே எண் : 4 [நான்கு] பிரபலமான சைவ சாப்பாட்டு உணவகமாக அமைந்துள்ளது உபரியான செளகர்யம். 

திடீர் விருந்தாளிகள் வந்து விட்டாலோ, வீட்டில் உள்ள பெண்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலோ உடனே சென்று நான்கு சாப்பாடுகள் பார்ஸல் வாங்கிவர மிகப்பெரிய STAINLESS STEEL CARRIER தயாராக வைத்துள்ளோம். ஒரு சாப்பாடு விலை ரூ.60 மட்டுமே. தயிர் வேண்டுமானால் ரூ. 8 தனி. UNLIMITED MEALS.
ஒரு நுனி இலை, ஒரு கறி, ஒரு கூட்டு, நல்ல பச்சரிசி சாதம், சாம்பார், வற்றல் குழம்பு அல்லது மோர்க்குழம்பு, ரஸம், பெரிய பொரித்த அப்பளம் ஒன்று, மோர் + ஊறுகாய். அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் மட்டும் பாயஸம் ஒரு கப் தருவார்கள்.
அங்கு நேரில் வந்து அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஓர் மிகப்பெரிய அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருக்கும். அதில்:  
”அன்புடையீர், தங்கள் வயிறு முட்ட தங்களுக்குத் தேவையானதை எவ்வளவு வேண்டுமானால் கேட்டு வாங்கி திருப்தியாகச் சாப்பிடுங்கள்.  ஆனால் எந்தப்பொருளையும் தயவுசெய்து வீணாக்கி விட்டு எழுந்து செல்லாதீர்கள்” 
காலை 9 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் சாப்பாடு இங்கு கிடைக்கிறது. திருச்சியின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்து நிறைய பேர்கள் சாப்பிட்டுச்செல்கின்றனர். ஒரு நாள் ஒன்றுக்கு 1000 பேராவது இங்கு வருகை தந்து சாப்பிட்டுச்செல்கிறார்கள். இதன் பெயர் ”நியூ மதுரா ஹோட்டல்”.
இங்கு சாப்பாடு மட்டுமே கிடைக்கும். டிபன் ஐட்டங்கள் ஏதும் கிடையாது. அதற்கு அருகிலேயே ராமா கஃபே என்று ஒன்று உள்ளது. 
   

வடக்கு ஆண்டார் தெருவின் முனையில் 
எண் 1 [ஒன்று] ஆக தெற்கு நோக்கி அமைந்திருக்கும் 
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்.
இதற்கு நேர் எதிர்புறம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது
மிகப்பிரபலமான ’ராமா கஃபே’ 
என்ற தரமான சிற்றுண்டிகள் கிடைக்குமிடம்.




இந்த ராமா கஃபேயில் டிபன் மட்டுமே கிடைக்கும். சாப்பாடு ஏதும் கிடையாது. நேரம் காலை 5 மணி முதல் 11 மணி வரை. மாலை 3 மணி முதல் 9 மணி வரை. 
அனைத்து டிஃபன்களும், சாம்பார், தேங்காய்ச் சட்னி, காரச்சட்னி வகைகள் எல்லாமே சூப்பரோ சூப்பராக சுவையுடன் இங்கு கிடைக்கும்.
இது தவிர ரோட்டோர சூடான, சுவையான, உப்பலான, மணமான பஜ்ஜி, வடை போன்ற பக்கவாத்யக் கடைகளுக்கும் பஞ்சமில்லை.

இந்த ரோட்டோர பஜ்ஜிக்கடையைப்பற்றி “பஜ்ஜின்னா பஜ்ஜி தான்!” என்ற என் பதிவினில் ஏற்கனவே நகைச்சுவையாக நான் எழுதியுள்ளேன். 
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html

என் வீட்டு பால்கனியிலிருந்தே இந்த பஜ்ஜிக்கடையை என்னால் கண்டு மகிழவும் முடியும். வாசனை பிடிக்கவும் முடியும். ஆசை அதிகமானால் ஓடிப்போய் சுடச்சுட வாங்கி வரவும் முடியும். இதோ என் வீட்டு பால்கனியிலிருந்தே பஜ்ஜிக்கடை தரிஸனம்:




என் வீட்டு ஜன்னலின் உள்பகுதி இதோ:








”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. 

திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். 

காணக்கண் கோடி வேண்டும்.”  
- அப்பாதுரை



திரு. அப்பாதுரை சார் அவர்கள் ஏன் இவ்வாறு சொல்லியுள்ளார்? என்பதற்கான காரணத்தை இதன் அடுத்த பகுதியில் நிச்சயமாகச்  சொல்லிவிடுகிறேன். 



 / தொடரும் /
 [ இதன் தொடர்ச்சி வரும் ஞாயிறு 10.02.2013 அன்று வெளியிடப்படும்]

172 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 3, 2013 at 7:33 AM
      saar, enakkum oru idam venum jannaloramaa!
      சார், எனக்கும் ஒரு இடம் வேண்டும் ஜன்னலோரமா!//

      ஆஹா, கொடுத்துருவோம்.

      ஆனால் ஒரு கண்டிஷன். மறக்காமல் நம்மாளு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, [பாம்புக்குட்டி] சிநேகாவுடனும், நர்ஸ் [இருமலா] நிர்மலாவுடனும் தான் வரணும் .. சொல்லிட்டேன். ;) ))) தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி, ஸ்வாமீ.

      நீக்கு
  2. ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து நானே ரசிப்பது போன்ற எண்ணம்.... கூடவே அடுத்த பகுதியில் நீங்கள் சொல்லப் போகும் விஷயம் பற்றிய நினைவும்! :)))

    அடுத்த ஞாயிறுக்கான காத்திருப்புடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் February 3, 2013 at 7:42 AM

      //ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து நானே ரசிப்பது போன்ற எண்ணம்.... கூடவே அடுத்த பகுதியில் நீங்கள் சொல்லப் போகும் விஷயம் பற்றிய நினைவும்! :)))

      அடுத்த ஞாயிறுக்கான காத்திருப்புடன்!//

      வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம். வரும் ஞாயிறு சந்திப்போம் ... அல்லது ஞாயிறுதோறும் சந்திப்போம்.

      நீக்கு
  3. உங்க வீட்டுப் படத்தைப் போட்டு விட்டு, பக்கத்தில் இருக்கிற நல்ல ஹோட்டல்களைப் பற்றி இம்புட்டு விலாவரியாகச் சொன்னால் எப்படி? நாங்க வந்தா உங்க வீட்டுலே தான் சாப்பிடுவோமாக்கும்...அக்காங்...! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக்காரன் February 3, 2013 at 7:49 AM

      வாங்கோ என் அன்புக்குரிய திரு. வேணு சார், வணக்கம்.

      //உங்க வீட்டுப் படத்தைப் போட்டு விட்டு, பக்கத்தில் இருக்கிற நல்ல ஹோட்டல்களைப் பற்றி இம்புட்டு விலாவரியாகச் சொன்னால் எப்படி?

      நான் எதைப்பற்றி எழுதினாலும், கொஞ்சம் விலாவரியாகவே தான் எழுதுவது வழக்கம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே, இன்னும் சொல்ல வேண்டியவைகள் எவ்வளவோ இருக்கு. போகப்போகப் பாருங்கோ.

      முதலில் என் ஊரைப்பற்றி, அதன் பெருமைகளைப்பற்றி, அதன் ஒருசில முக்கிய இடங்கள் பற்றி, அதன்பின் என் தெருவைப்பற்றி, என் வீட்டைப்பற்றி, என்றெல்லாம் கூறிய பிறகல்லவா நான் அந்த ஜன்னல்கள் பக்கமும் அதன் கம்பிகள் பக்கமும் போக வேண்டும்.
      அதனால் அவசரப்படாம அடுத்தப் பகுதியைப்பாருங்கோ.

      நாங்க வந்தா உங்க வீட்டுலே தான் சாப்பிடுவோமாக்கும்... அக்காங்...! :-) //

      ஆஹா, நீங்க வந்து நம்ம வீட்டுலே சாப்பிட நாங்கக் கொடுத்து வெச்சிருக்கணும் சார். உங்கள் ஸித்தம் எங்கள் பாக்யம்!

      “சித்தன் போக்கும் சிவன் போக்கும் ஒன்று தான்” எனவும் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

      2012 டிஸம்பர் மாதம் இறுதியில், நீங்க திருச்சி வருவதாகச் சொல்லியிருந்தீங்க. நானும் நம்ம திரு. ரிஷபன் சாரும் எவ்ளோ மகிழ்ச்சியாக உங்களை சந்திக்கணும்னு திட்டமெல்லாம் தீட்டி வைத்திருந்தோம் தெரியுமா?

      ஒரு முதல்வரோ அல்லது பிரதமரோ வருகை தரும் போது, அவர்களின் பாதுகாப்புப்படையினரும், ஜில்லாக்கலெக்டரும்,
      உயர் போலீஸ் அதிகாரிகளுமாக கூடிக்கூடி பல்வேறு திட்டங்கள் போட்டு, ஏர்போர்டில் வந்து இறங்குவதிலிருந்து ஆரம்பித்து, திரும்ப ஏர்போர்டில் சென்று விமானத்தில் ஏறுவது வரை பல்வேறு பயணத்திட்டங்களை வகுப்பார்கள் தெரியுமோள்யோ!

      அட, உங்களுக்குத்தெரியாததா என்ன? இதைப்பற்றியெல்லாம் நீங்க தான் ஜோராகவும் நகைச்சுவையாகவும் எழுதுவீர்களே ;)

      எல்லாத்திட்டங்களும் வகுத்து ஒத்திகையெல்லாம் பார்த்த பிறகு, அந்த V V I P யின் வருகை இறுதியில் ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். இது தானே வழக்கம். அதுபோல செய்தால் தான் அவர்கள் V V I P கள் என்றே ஏற்றுக்கொள்ள நாமும் பொதுவாகப் பழகிவிட்டோம்!

      என்னையும் என் நண்பர் திரு ரிஷபன் சாரையும் பொறுத்தவரை நீங்க இப்போ டிஸம்பர் மாத இறுதியில் இங்கு திருச்சிக்கு சொன்னபடி வராததால் மட்டும் V V I P அல்ல.

      Even otherwise எங்கள் மனதில் நீங்க எப்போதுமே V V I P தான், Sir.

      அதுவும் எழுத்துலக V V I P யாக்கும். எப்போ வருவீங்கோ என ஏங்கித்தவித்துகொண்டிருக்கிறோமாக்கும். !!!!! ;)))))

      கட்டாயம் வாங்கோ சார், சீக்கரமா வாங்கோ சார், சிரித்துக் கொண்டே வாங்கோ சார், சிரிக்க வைக்க வாங்கோ சார்.
      ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. பதில்கள்
    1. middleclassmadhavi February 3, 2013 at 7:52 AM
      Interesting.... Waiting for next part !//

      WELCOME MADAM. THANKS A LOT FOR YOUR 'INTERESTING' COMMENT & FOR YOUR WAITING FOR THE NEXT PART. ;)))))

      நீக்கு
  5. மிக மிக விரிவாக உங்கள் ஜன்னலோர தரிசனம் பற்றி விவரித்திருக்கிறீர்கள்.
    ஓட்டல் பஜ்ஜி கடை எல்லாம் அருகிலேயே உள்ளது ,எக்ஸ்ட்ரா வசதி தான். அந்த பஜ்ஜி கடைக்காரர் இணையம் மூலமாக உலகம் சுற்றுபவராகிவிட்டார்.
    மதுரா ஹோட்டல் ,விநாயகர் ஆலயம், ராமா கபே எல்லாமே உலகப் புகழ் பெற்றுவிட்டன.
    கதாநாயகனின் போட்டோ மட்டும் வித விதமான போஸில் போட்டிருக்கிறீர்கள். ஒன்றும் எழுத ஆரம்பிக்கவில்லை.
    ஆவலுடன் அடுத்தப் பதிவை எதிர் பார்க்கிறேன்.

    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam February 3, 2013 at 8:35 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மிக மிக விரிவாக உங்கள் ஜன்னலோர தரிசனம் பற்றி விவரித்திருக்கிறீர்கள்.//

      ஆமாம், ஏதோ கொஞ்சூண்டு சொல்லியிருக்கிறேன்.

      //கதாநாயகனின் போட்டோ மட்டும் வித விதமான போஸில் போட்டிருக்கிறீர்கள். ஒன்றும் எழுத ஆரம்பிக்கவில்லை.//

      ஆமாம் ... ஏதோ ஓர் ஆர்வத்தில் போட்டோக்கள் போட்டு விட்டேன். ஏதாவது எழுதியே ஆக வேண்டும். நல்லவேளையாக நினைவு படுத்தினீங்க. நன்றி.

      //ஆவலுடன் அடுத்தப் பதிவை எதிர் பார்க்கிறேன்.//

      எதிர் பாருங்கோ .... கட்டாயம் எதிர்பாருங்கோ. 10.02.2013 ஞாயிறு மறந்துடாதீங்கோ ! ;)))))

      நீக்கு
  6. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல ஜன்னல் தரிசனம் ஜாலி அனுபவம் போல இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். February 3, 2013 at 8:49 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல ஜன்னல் தரிசனம் ஜாலி அனுபவம் போல இருக்கு!//

      ஆமாம் ஸ்ரீராம். அது ஏதோ ’ஜாலிலோ ஜிம்கானா’ அனுபவம் தான் போலிருக்கு.

      நம் திரு. அப்பாதுரை சார் இங்கே வந்து எங்கள் வீட்டில் இருந்தது ஒரு அரை மணியோ முக்கால் மணியோ தான்.

      அதற்குள் என் வீட்டு ஜன்னலில் அவர் என்னத்தைப்பார்த்தாரோ?

      எனக்கு இதுவரை ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை ஏதாவது பார்க்கக்கூடாததைப் பார்த்திருப்பாரோ எனவும் விசாரமாக உள்ளது.

      இருந்தாலும் தான் ஏதேதோ பூடகமாக எழுதி என்னையும் எழுதத் தட்டி விட்டு விட்டார்.

      மற்ற எல்லோருக்குமே கூட ஓர் ஆர்வத்தைக் கிளப்பி விட்டு விட்டார்.

      அதனால் நானும் ஏதாவது எழுதி விடுவ்து என்று தீர்மானித்து விட்டேன். கடைசியில் தான் தெரியும் அவர் சொல்ல வந்ததும், நான் சொன்னதும் ஒன்று தானா என்று. பார்ப்போம் ஸ்ரீ ராம்.

      நீக்கு
  7. என்ன சார் . இந்தப் பதிவு மூலம் எல்லோரையும் வா ... என்று அழைக்கின்றீர்கள் . ஒரு வீடு எங்கே அமைந்திருக்க வேண்டுமோ அங்கு உங்கள் வீடு அமைந்திருக்கின்றது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி February 3, 2013 at 8:51 AM
      //என்ன சார் . இந்தப் பதிவு மூலம் எல்லோரையும் வா ... என்று அழைக்கின்றீர்கள் . ஒரு வீடு எங்கே அமைந்திருக்க வேண்டுமோ அங்கு உங்கள் வீடு அமைந்திருக்கின்றது .//

      வாருங்கள் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  8. திருச்சி வடக்கு ஆண்டார்தெரு முக்கில் அரசமரத்துக்கு அருகில் உள்ள நியூ மதுரா ஹோட்டல் சாப்பாடு பற்றியும், எதிரே உள்ள ராமா கபே டிபன் பற்றியும் நீங்கள் இன்னும் ஏன் எழுதவில்லை என்று நினைத்ததுண்டு. இப்போது எழுதி விட்டீர்கள். ( இன்னும் விரிவாக தனிப் பதிவாகவே எழுதி இருக்கலாம். ) இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோFebruary 3, 2013 at 9:08 AM
      திருச்சி வடக்கு ஆண்டார்தெரு முக்கில் அரசமரத்துக்கு அருகில் உள்ள நியூ மதுரா ஹோட்டல் சாப்பாடு பற்றியும், எதிரே உள்ள ராமா கபே டிபன் பற்றியும் நீங்கள் இன்னும் ஏன் எழுதவில்லை என்று நினைத்ததுண்டு. இப்போது எழுதி விட்டீர்கள். ( இன்னும் விரிவாக தனிப் பதிவாகவே எழுதி இருக்கலாம். ) இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      ”நியூ மதுரா ஹோட்டல்” “ராமா கஃபே” முதலியவற்றை கொஞ்சூண்டு படத்தினில் வெளிப்புறத்தை மட்டுமே காட்டியுள்ளேன், சொல்லியுள்ளேன்.

      அதுபோல மற்றொன்று மாயவரம் லாட்ஜ் அதைப்பற்றியும் இன்னும் நான் சொல்லவில்லை.

      இவற்றிற்குள் எல்லாம் பலமுறை போய் வந்துள்ள அனுபவம் உள்ள எனக்கு, எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன தான்.

      சமயம் வரும் போது, அவை ஒவ்வொன்றையும் பற்றி விலாவரியாக தனிப்பதிவாகவே தருவேன் ஐயா.

      தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள், ஐயா

      நீக்கு
  9. ஆஹா வை.கோ சார்,திருச்சி மீது எனக்கு மிக பற்றும் பாசமும் உண்டு.உங்கள் வீட்டு ஜன்னலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அருமையாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள்.சாப்பாடு பற்றிய பகிர்வை மிகவும் ரசித்தேன்..தொடர்ச்சி விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    நான் திருச்சியில் இருந்த சமயம் (9 to +2 படித்த காலம்) மெயின்காட்கேட்டில் தான் நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை வந்து அந்த கூட்டத்தில் பொழுதை போக்கி விட்டு ஷாப்பிங் செய்து விட்டு போகும் இடம்.நீங்க நம்ப மாட்டீங்க சார் நான் +2 படிக்கும் பொழுது திருச்சி மலைக்கோட்டை வாசலில் 3 ரூபாய்க்கு வாங்கிய சீப்பை இத்தனை வருஷமாகியும் அதனை தான் உபயோகித்து வருகிறேன்.அந்த சீப்பை பற்றி பகிர தனி பதிவே போடனும்.அந்த சீப்புக்கு 28 வயசு ஆச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Asiya OmarFebruary 3, 2013 at 9:41 AM
      ஆஹா வை.கோ சார், திருச்சி மீது எனக்கு மிக பற்றும் பாசமும் உண்டு.உங்கள் வீட்டு ஜன்னலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அருமையாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள். சாப்பாடு பற்றிய பகிர்வை மிகவும் ரசித்தேன். தொடர்ச்சி விரைவில் எதிர் பார்க்கிறேன்.//

      வாருங்கள் மேடம். தாங்கள் எங்கள் ஊரில் படித்த பெண்மணி என்பது எனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள்.

      ஆஹா, 28 வயதான [நம் ஊரில் வாங்கிய] சீப்பு சிரிப்பை வரவழைக்கிறது.

      வயசான அதற்கு இப்போதும் பற்கள் வலுவாக இருக்கின்றனவா?

      இல்லாவிட்டால் என்னுடைய நகைச்சுவைக்கதையான “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா” என்பதை உடனடியாகப் படியுங்கோ. இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

      நீக்கு
  10. ஹிஹி.. பதிவாகவே எழுதிட்டீங்களா.. smart. very smart.
    சாதாரண ஜன்னலா அது.. மேலே கீழே நேரே எதிரே எப்படிப் பார்த்தாலும் கண்ணைக் கட்டிப் போடும் ஜன்னலாச்சே :-) breathtaking - in every way.
    பவித்ராலயா கவனிக்கத் தவறிவிட்டேனே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை February 3, 2013 at 10:31 AM

      வாங்கோ சார், வாங்கோ. வணக்கம்.

      //ஹிஹி.. பதிவாகவே எழுதிட்டீங்களா.. smart. very smart.
      சாதாரண ஜன்னலா அது.. மேலே கீழே நேரே எதிரே எப்படிப் பார்த்தாலும் கண்ணைக் கட்டிப் போடும் ஜன்னலாச்சே :-) breathtaking - in every way.

      பவித்ராலயா கவனிக்கத் தவறிவிட்டேனே!//

      தஞ்சாவூர் >>> கும்பகோணம் இரயில் ரூட்டில் அய்யம்பேட்டை என்று ஒரு ஊர் [கிராமம்] உண்டு, உங்களுக்குத் தெரியுமா சார்?

      மிகவும் FAMOUS ஆன ஊர் என்று கேள்வி [சிண்டு முடிந்து விடும் வேலைகளுக்கு]. அதைத்தான் ”அய்யம்பேட்டை வேலை செய்கிறான் பார்” என்பார்கள்.

      அதற்கு ஓர் உதாரணக்கதையும் கீழே தருகிறேன். உங்களுக்கும் எனக்கும் தெரிந்தாலும் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காக மட்டுமே.

      [அதற்காகத் தாங்கள் இப்போது என்னைப்பதிவிட வைத்துள்ளது, தாங்கள் செய்துள்ள அய்யம்பேட்டை வேலை என நான் சொல்வதாக தயவுசெய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீங்கோ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      ஏதோ உங்களின் இந்தச்செயல் எனக்கு அதை ஞாபகப்படுத்தியது. அவ்வளவு தான். ;))))) ]

      நீக்கு
    2. அய்யம்பேட்டை வேலை என்றால் என்ன?

      [ஓர் சிறுகதை]
      ==============

      அய்யம்பேட்டை என்ற கிராமத்தில், பொழுது போகாமல் ஊர் வம்பு பேசிக்கொண்டு இருவர், ஓர் வாய்க்கால் வரப்பில் அமர்ந்துள்ளார்கள்.

      அந்த ஊருக்கு வெளியூரிலிருந்து ஒருவர் புதியதாக வருகிறார்.

      அவரை இந்த இருவரும் வம்புக்கு இழுக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

      வந்து கொண்டிருக்கும் ஆசாமி ஓரளவு நல்ல படித்தவர் போலவும் நாகரீகமானவராகவும், சற்றே வயதானவராகவும் இருக்கின்றார்.

      அவர் யாராக இருந்தால் என்ன? எப்படித் தோற்றமளித்தால் தான் என்ன? அய்யம்பேட்டைக்காரர்கள் அவரை வம்புக்கு இழுப்பது என முடிவு செய்து விட்டார்கள், அல்லவா!

      அந்த புதிதாக வரும் நபர் இவர்களை நெருங்கும் போது ...

      அதில் ஒருவன் நூறு பைசா தான் என மற்றொருவனிடம் பலமாகக் கத்திச்சொல்வான்.

      அந்த மற்றொருவன் இல்லை இல்லை 99 பைசா தான் என அடித்துச்சொல்வான்.

      உடனே முதலாவது ஆசாமி,

      “சாரையே கேட்டுப்பார்த்து விடுவோம்டா”

      என்று சொல்லி விட்டு

      ”சார், ஒரு நிமிஷம் இங்கே வாங்கோ, சார். ஒரு சின்ன சந்தேகம் எங்களுக்குள்”

      என்பான்.

      ”சொல்லுப்பா” என்பார் வந்தவர்

      ”ஒரு ரூபாய்க்கு எத்தனை பைசா சார்?” என்று கேட்பான்.

      வந்தவரும்

      ”இது என்னப்பா பெரிய கேள்வி, ஒரு ரூபாய்க்கு 100 பைசா தான்”

      என்பார்.

      உடனே இவன் அவனிடம்,

      ”பார்த்தாயாடா, சாரே கரெக்ட்டா சொல்லிட்டார் 100 பைசா என்று.

      நீ 99 பைசா என்று உளறுகிறாய்.

      சார் காலில் விழுந்து கும்பிடுடா” என்பான்.

      ”நான் எதற்கு அவன் காலில் விழுந்து கும்பிடணும்?.

      ஒரு ரூபாய்க்கு 99 பைசாக்கள் தான் சரியான விடையாக்கும்;

      அது தெரியாமல் 100 பைசாக்கள் என்று உளறும் இந்த சார் வேண்டுமானால் என் காலில் விழட்டும்” என்பான்.

      புதிதாக வந்தவர் புரிந்து கொள்வார், ’நாம் வந்துள்ளது அய்யம்பேட்டைக்கு என்றும், வரும்போதே நம்மிடம் அய்யம்பேட்டை வேலையை ஆரம்பித்து விட்டார்கள்’ என்றும்.

      உடனே இவர்களைப்பார்த்து முறைத்து விட்டு வேகமாகத் தன் நடையைக்கட்டுவார், அந்தப் புதிதாக வந்தவர்.

      இவர்கள் அதைப்பார்த்து சிரிப்பார்கள்.

      வேறு யாராவது இதுபோல மாட்டமாட்டார்களா என எதிர்பார்ப்பார்கள்.

      ooOoo

      நீக்கு
    3. சிண்டு முடிவதை திருநெல்வேலி குசும்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அய்யம்பேட்டையா? கதை நல்லாத்தான் இருக்கு. சர்தார்ஜி ஜோக்காட்டம்.

      நீக்கு
    4. ;))))) Sir, உண்மையில்; இந்தக்கதையில் மிகவும் மோசமான
      [ Un parliamentary words தான் நிறைய வரும்] நான் அதை மிகவும் நாகரீகமாக மாற்றி நாசூக்காக எழுதியுள்ளேனாக்கும்.

      நீக்கு
  11. உங்களுக்கே உரிய பாணியில் சுவாரஸ்யம் குறையாமல்,அருகில் இருந்து பார்த்தாற்போன்று உணரவை ஏற்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு ஜன்னல்.உங்கள் பிளாட்,உங்கள் வீட்டின் சுற்றுப்புறம் ,எதிரில் உள்ள பஜ்ஜிக்கடை,ஹோட்டல்கள்,கோவில்கள் என்று ஒவ்வொன்ரையும் அழகாக படம் பிடித்து பகிர்ந்துள்ளது ரசனைக்குறியது.இதுவரை ஊரில் இருந்து வரும்பொழுது திர்ச்சியின் வழியாக கார்,பேருந்துகளில் பயணித்துள்ளேன்.இனி அடுத்த முறை காரில் பயணிக்கும் பொழுது மெயின் கார்டு கேட் வழியாக பயணித்து நீங்கள் படம் பிடித்த காட்சிகளை நேரில் பார்க்க வேண்டும்.”பவித்ராலயா” ரசனை மிக்க பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட் வழியாப் போகாதீங்க ஸாதிகா. கேட்டு அவர் ஜன்னல்ல அஞ்சு நிமிசம் செலவழிச்சுட்டுப் போங்க. worth it.

      நீக்கு
    2. ஸாதிகா February 3, 2013 at 10:51 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //உங்களுக்கே உரிய பாணியில் சுவாரஸ்யம் குறையாமல், அருகில் இருந்து பார்த்தாற்போன்று உணரவை ஏற்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு ஜன்னல்.உங்கள் பிளாட், உங்கள் வீட்டின் சுற்றுப்புறம் ,எதிரில் உள்ள பஜ்ஜிக்கடை, ஹோட்டல்கள்,கோவில்கள் என்று ஒவ்வொன்ரையும் அழகாக படம் பிடித்து பகிர்ந்துள்ளது ரசனைக்குறியது.//

      மிக்க நன்றி மேடம்.

      இதுவரை ஊரில் இருந்து வரும்பொழுது திருச்சியின் வழியாக கார், பேருந்துகளில் பயணித்துள்ளேன்.இனி அடுத்த முறை காரில் பயணிக்கும் பொழுது மெயின் கார்டு கேட் வழியாக பயணித்து நீங்கள் படம் பிடித்த காட்சிகளை நேரில் பார்க்க வேண்டும்.//

      வாங்கோ அவசியமாக வாங்கோ, மேடம்..

      // ”பவித்ராலயா” ரசனை மிக்க பெயர்.//

      சந்தோஷம்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  12. நான் +2 படிக்கும் பொழுது திருச்சி மலைக்கோட்டை வாசலில் 3 ரூபாய்க்கு வாங்கிய சீப்பை இத்தனை வருஷமாகியும் அதனை தான் உபயோகித்து வருகிறேன்.அந்த சீப்பை பற்றி பகிர தனி பதிவே போடனும்.அந்த சீப்புக்கு 28 வயசு ஆச்சு.//அடேங்கப்பா..ஆசியா அவசியம் வெகு விரைவில் படத்துடன் கூடிய சீப்பை பற்றிய பதிவை போட்டே ஆகவேண்டும் நீங்கள்:)

    பதிலளிநீக்கு
  13. ரகசியத்தை பற்றிய குறிப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
    என்னை மிகவும் மன்னித்து கொள்ளுங்கள். இந்த பதிவை படித்தவுடன் எனக்கு உங்கள் மேல் அப்படி ஒரு பொறாமை உணர்வு ஏற்படுகிறது. எனக்கான ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று என் வாழ்கையில் நான் நினைத்தேனோ, உங்கள் வீடு அப்படியே இருக்கிறது. மிக மிக சந்தோஷம் ஐயா. என்ஜாய் பண்ணுங்கள்.

    //கீழே தெருவில் தேர் போனாலும் ஸ்வாமி புறப்பாடுகள் சென்றாலும். படி இறங்கிக்கீழே செல்லாமலேயே வீட்டில் இருந்த படியே ஜன்னல் மூலமாக அவற்றை கண்டு களிக்க முடியும். //

    இப்படித்தான் திருமணத்திற்கு முன்பு வரை இருபத்து மூன்று வருடங்கள் சன்னதி தெருவில் குடியிருந்து இந்த திருவிழா, தேர் கொண்டாட்டங்களை ரசித்திருக்கிறேன். இவை எல்லாம் என்றுமே திகட்டாத சந்தோஷங்கள். மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள்.

    ம்ம்ம்ம்ம்... போறத குறைக்கும் பக்கத்திலேயே மதுரா, ராமா என்று வயிறுக்கு விருந்தளிக்கும் ஹோட்டல்கள் வேறு. இதற்கு மேல் கேட்கவா வேண்டும் உங்கள் பொறாமை கொள்ள காரணங்களை. :)))))

    உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைகோட்டை கோவிலின் அழகை காண கண் கோடிதான் வேண்டும். படத்திலேயே ரசித்தேன். சூரிய உதயத்திலும், அஸ்தமனத்திலும் இது எவ்வளவு அழகா இருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.

    அழகான வீடு. அழகான பெயர். வாழ்த்துக்கள்!





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனாக்ஷி February 3, 2013 at 11:50

      வாங்கோ மேடம். வணக்கம். இது தான் தங்களின் முதல் வருகையோ ? என நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம்.

      //ரகசியத்தை பற்றிய குறிப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
      என்னை மிகவும் மன்னித்து கொள்ளுங்கள். இந்த பதிவை படித்தவுடன் எனக்கு உங்கள் மேல் அப்படி ஒரு பொறாமை உணர்வு ஏற்படுகிறது. //

      ஆஹா, மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு?

      என் மீதும் என் வீட்டின் மீதும் கூட பொறாமைப்படவும் ஒருவர் இந்த உலகில் இருக்கிறாரே என எனக்கு மிகுந்த சந்தோஷமே ஏற்படுகிறது.

      சந்தோஷமோ துக்கமோ அவரவர் பார்வையில் மட்டுமே இருக்கிறது.

      என்னால் எதையும் எப்படி வேண்டுமானாலும் வர்ணித்து சந்தோஷமாக மட்டுமே எழுத முடியும்.

      காலுக்கு செருப்பு இல்லாதவன் காலே இல்லாதவனைப்பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்வது போலத்தான் இதுவும்.

      இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்.

      என் வாழ்க்கையும் கூட சந்தோஷங்கள் அளவுக்கு துக்கங்களும் நிறைந்தது தான்.

      சந்தோஷங்கள் + துக்கங்கள் என்ற இரட்டை மாட்டு வண்டியில் தான் நானும் பயணித்து வருகிறேன்.

      வண்டியை ஏதோ ஒரு மாதிரி ஓட்டியும் வருகிறேன்.

      ஆனால் என் சந்தோஷங்கள் என்ற மாட்டைப்பற்றி மட்டுமே இதுபோன்ற என் பதிவுகளில் நான் வெளியிடுவது வழக்கம்.

      துக்கங்களைப் பகிர்வதால், அந்த துக்கங்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கப்போவது இல்லை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

      நம் துக்கம் நம்மோடு போகட்டும் என நினைப்பவன் நான்.

      அதை பிறருடன் பகிர்வதால் அவர்களுக்கும் துக்கம் ஏற்படும். [ஆனால் சிலருக்கு அதுவே சந்தோஷங்களைக் கொடுக்கக்கூடும்.]

      எப்படியிருந்தாலும் அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது என் வழக்கம் இல்லை.

      என்னுடன் பழைய பதிவுகளில் தாங்கள் எதைப்படித்தாலும், உங்களுக்கு ஒரு சந்தோஷமோ அல்லது வாய்விட்டுச்சிரிப்போ வரக்கூடும். அல்லது ஓர் சின்ன புன்னகையாவது ஏற்படக்கூடும்.

      //எனக்கான ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று என் வாழ்கையில் நான் நினைத்தேனோ, உங்கள் வீடு அப்படியே இருக்கிறது. மிக மிக சந்தோஷம் ஐயா. என்ஜாய் பண்ணுங்கள்.//

      சரி, அப்படியே நானும் எஞ்ஜாய் செய்கிறேன். ;)))))

      >>>>> தொடரும் >>>>>

      நீக்கு
    2. கோபு >>>> திருமதி மீனாக்ஷி மேடம் அவர்கள் [2]

      //ம்ம்ம்ம்ம்... போறத குறைக்கும் பக்கத்திலேயே மதுரா, ராமா என்று வயிறுக்கு விருந்தளிக்கும் ஹோட்டல்கள் வேறு. இதற்கு மேல் கேட்கவா வேண்டும் உங்கள் பொறாமை கொள்ள காரணங்களை. :))))) //

      உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

      காரணம் என்னைப் பெற்ற என் தாயாரின் பெயரும் அதுவே தான்.

      என் வயிறு அறிந்து சுவை அறிந்து சோறு போட்டு என்னை அன்பாக வளர்த்தவள்.

      அவளின் 87 ஆவது வயதினில் என்னைத் தாயில்லாப் பிள்ளையாகத் தவிக்க விட்டு, போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

      என் தாய் என்னைப்பெற்ற அன்று என்னென்ன கஷ்டப்பட்டாள் என்பதனை நான் மிகச்சுவையாக ஓர் சின்னக்கட்டுரையாக எழுதியுள்ளேன்.

      என் தாயாரைப் பற்றி சற்றே விரிவாகவும் வேறொரு பதிவினில் எழுதியுள்ளேன். இரண்டுக்கும் இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html


      //உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைகோட்டை கோவிலின் அழகை காண கண் கோடிதான் வேண்டும். படத்திலேயே ரசித்தேன். சூரிய உதயத்திலும், அஸ்தமனத்திலும் இது எவ்வளவு அழகா இருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.//

      அடிக்கடி எதையுமே கற்பனை செய்து மகிழ்பவன் தான் நானும்.
      நீங்களும் அப்படியே செய்யுங்கள். நம் நிஜ வாழ்க்கையைவிட அதுவே அதிக இன்பம் தரக்கூடியது.

      என்னுடைய மிக அழகான கற்பனை உலகைக்காண நீங்களும் வருகை தாருங்கள் ... இதோ அதற்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

      //அழகான வீடு. அழகான பெயர். வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான அற்புதமானக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் மெயில் விலாசம்: valambal@gmail.com

      குறித்துக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கு இது அவசியமாகத் தேவைப்படலாம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
    3. //அடிக்கடி எதையுமே கற்பனை செய்து மகிழ்பவன் தான் நானும்.
      நீங்களும் அப்படியே செய்யுங்கள். நம் நிஜ வாழ்க்கையைவிட அதுவே அதிக இன்பம் தரக்கூடியது. //
      சரிதான். :))

      உங்கள் தாயாரை பற்றி விரிவாக நீங்க எழுதி இருப்பதையும், உங்கள் கற்பனை உலகை காண கொடுத்துள்ள இணைப்பையும் நிச்சயம் படிக்கிறேன்.

      உங்கள் மெயில் விலாசம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. என் தந்தையின் ஊர் திருச்சி அருகே உள்ள ஜீயபுரம்தான். நான் திருச்சி வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன்.

      அன்புடன்
      மீனாக்ஷி

      நீக்கு
    4. மீனாக்ஷி February 7, 2013 at 5:58 AM
      *****அடிக்கடி எதையுமே கற்பனை செய்து மகிழ்பவன் தான் நானும். நீங்களும் அப்படியே செய்யுங்கள். நம் நிஜ வாழ்க்கையைவிட அதுவே அதிக இன்பம் தரக்கூடியது.*****

      //சரிதான். :))//

      புரிதலுக்கு நன்றிகள்.

      >>>>>

      நீக்கு


    5. கோபு >>>> திருமதி மீனாக்ஷி மேடம் அவர்கள் [2]

      //உங்கள் தாயாரை பற்றி விரிவாக நீங்க எழுதி இருப்பதையும், உங்கள் கற்பனை உலகை காண கொடுத்துள்ள இணைப்பையும் நிச்சயம் படிக்கிறேன்.//

      மிக்க நன்றி, மேடம்.

      படித்த பிறகு அதிலுள்ள குறை நிறைகளைப் பற்றி துளியூண்டாவது கருத்தளியுங்கள். அவசரம் ஏதும் இல்லை. எப்போது செளகர்யப்படுமோ அப்போது மட்டுமே.

      என் படைப்புகளுக்கு பிறர் எழுதும் கருத்துக்களை மிகவும் பொக்கிஷமாக நினைப்பவன் நான்.

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>> திருமதி மீனாக்ஷி மேடம் அவர்கள் [3]

      //உங்கள் மெயில் விலாசம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. //

      ஏதோ உங்களுக்கு ஒருவேளை என்றாவது அது தேவைப்படலாம் என எனக்குத்தோன்றியது. அதனால் மட்டுமே கொடுத்தேன். நன்றிக்கு நன்றிகள்.

      //என் தந்தையின் ஊர் திருச்சி அருகே உள்ள ஜீயபுரம்தான். நான் திருச்சி வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன். //

      ஆஹா, அப்படியா! அப்போ உங்களும் எங்க ஊர் திருச்சி தான் பிறந்தாஹமா? [பிறந்த வீடா?] கேட்கவே சந்தோஷமாக உள்ளது. பிராப்தம் இருந்தால் நிச்சயம் சந்திக்கலாம். சந்தோஷம்.


      உங்கள் தந்தையின் ஊரான ஜீயபுரத்திற்கும், அதன் வெகு அருகே உள்ள அம்மங்குடி அக்ரஹாரத்திற்கும் நான் 2-3 தடவைகள் சென்று வந்துள்ளேன்.

      நீக்கு
    7. கோபு >>>> திருமதி மீனாக்ஷி மேடம் அவர்கள் [3]

      //உங்கள் மெயில் விலாசம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. //

      ஏதோ உங்களுக்கு ஒருவேளை என்றாவது அது தேவைப்படலாம் என எனக்குத்தோன்றியது. அதனால் மட்டுமே கொடுத்தேன். நன்றிக்கு நன்றிகள்.

      //என் தந்தையின் ஊர் திருச்சி அருகே உள்ள ஜீயபுரம்தான். நான் திருச்சி வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன். //

      ஆஹா, அப்படியா! அப்போ உங்களும் எங்க ஊர் திருச்சி தான் பிறந்தாஹமா? [பிறந்த வீடா?] கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      உங்கள் தந்தையின் ஊரான ஜீயபுரத்திற்கும், அதன் வெகு அருகே உள்ள அம்மங்குடி அக்ரஹாரத்திற்கும் நான் 2-3 தடவைகள் சென்று வந்துள்ளேன்.

      பிராப்தம் இருந்தால் நிச்சயம் நாம் சந்திக்கலாம். சந்தோஷம். ;)

      நீக்கு
  14. Lovely description of your house. You are blessed. I have gone through Trichy a few times to see my maternal uncle who was living in Sri Ramasamudram village near Kattuputhur. Btw, I was born in that village. 'Aganda Kaveri", Agraharam, Thinnai houses etc were a great sight when I had visited the place on a Deepavali season when I was a young boy. In the recent years, I visited the village again twice to see my 91 years old uncle (who just passed away recently) - the village houses were in a dilapidated condition - only half the Agraharam existed, and the Aganda Kaveri had only sand 'thittugal' - apparently, river sands had been extracted. The good old charm had totally gone! I could only feel sad. Luckily, I have another uncle of mine living in Dalmiapuram - and when I visit him next, I'd like to stop by at your place to enjoy the sights through the "jannal Kambigal" of your house. I only cherish that people like you remind us of the sights and sounds of our surroundings of the 'present'. Thanks Chandramouli

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. D. ChandramouliFebruary 3, 2013 at 3:00 PM

      Respected Sir. WELCOME to you Sir.

      //Lovely description of your house. You are blessed. I//

      Thank you Very much, Sir.

      அகண்ட காவிரியைச்சுற்றி இருந்த அக்ரஹாரங்கள் பற்றியும், அங்கிருந்த செழுமைகள் பற்றியும், அங்கிருந்த மக்களின் வெள்ளந்தியான மனதினைப்பற்றியும் வெகு அழகாகவே கூறியுள்ளீர்கள்.

      எனக்கும் இவைபற்றியெல்லாம் நிறைய அனுபவங்கள் உண்டு.

      இப்போது அக்ரஹாரங்களும் மாறிவிட்டன. மனிதர்களின் மனங்களும் மாறிவிட்டன. அகண்ட காவிரியில் திட்டுத்திட்டாக மணல்களை மட்டுமே காணமுடிகிறது. அவைகளும் தினமும் சுரண்டப்பட்டு வருகின்றன எனவும் சொல்லியுள்ளீர்கள்.

      ஆம் எல்லாமே உண்மைகள் தான்.

      இருப்பினும் நம்மைப்போன்ற ஒருசில மனிதர்களின் மனதினில் அந்த பசுமையான நினைவலைகள் மட்டும் நீங்காமல் இன்றும் இருந்து வருவதே நாம் மகிழ்ச்சிகொள்ளக்கூடியதாக உள்ளது.

      டால்மியாபுரம் வரும் போது அவசியமாக வாருங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்..

      நீக்கு
  15. பதில்கள்
    1. பழனி. கந்தசாமி February 3, 2013 at 3:12 PM
      ரசித்தேன். அழகான வர்ணனை.//

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      வருகைக்கும், ரசிப்புக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  16. கடந்த டிசம்பர் மாதம் வடக்கு ஆண்டார் தெருவில் உள்ள ஆசிரியர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தேன். அவர்களிடம் உங்களைப் பற்றி சொல்லி விசாரித்தபோது நீங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னார்கள். அன்று மாலை, நேரம் ஆகிவிட்டபடியினால் வர இயலாமல் போய்விட்டது. உங்கள் குடியிருப்பு பகுதியை வீதியில் இருந்தே பார்த்துச் சென்றேன். வீட்டைப் பற்றிய உங்கள் பதிவு அருமை. ஒருநாள் வருகிறேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 3, 2013 at 4:43 PM

      வாருங்கள் ஐயா. வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.

      //கடந்த டிசம்பர் மாதம் வடக்கு ஆண்டார் தெருவில் உள்ள ஆசிரியர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தேன். அவர்களிடம் உங்களைப் பற்றி சொல்லி விசாரித்தபோது நீங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னார்கள். அன்று மாலை, நேரம் ஆகிவிட்டபடியினால் வர இயலாமல் போய்விட்டது. உங்கள் குடியிருப்பு பகுதியை வீதியில் இருந்தே பார்த்துச் சென்றேன். வீட்டைப் பற்றிய உங்கள் பதிவு அருமை. ஒருநாள் வருகிறேன்.//

      எங்கோ ஷார்ஜாவிலிருந்தும், சிகாகோவிலிருந்தும், புதுடெல்லியிலிருந்தும் என்னை சிலர் இதுவரை சந்தித்து விட்டுச் சென்று விட்டார்கள்.

      நாம் ஒரே ஊரில் இருந்தும் இதுவரை ஏனோ சந்திக்க முடியாமல் உள்ளது. அடுத்த முறை டவுன் பக்கம் வரும்போது எனக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுங்கள் ஐயா. நானே வந்து உங்களை என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் ஐயா.

      நன்றி ஐயா.

      நீக்கு
  17. ஜன்னல் வழியாக பஜ்ஜிகடை மட்டும் தெரியவில்லை, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலும் அல்லவா காட்சி தருகிறார், ஸ்ரீராம் சொன்னது போல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோபுர தரிசனம் செய்யலாம். விழாக்காலாங்களில் சாமி ஊர்வலம் பார்ப்பது பாதை ஓர கடைகள், சாப்பாட்டு ஓட்டல், டிபன் ஓட்டல் என்று அனைத்து வசதிகளும் நிறைந்த அற்புத வீடும் ஜன்னலும் கிடைத்ததில் மகிழ்ச்சி.
    ஜன்னல் வழி பார்க்கும் மனிதர்கள்தான் உங்கள் கதை நாயக நாயகி காதாபாத்திரங்களா!
    அடுத்து பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு February 3, 2013 at 5:13 PM

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      //ஜன்னல் வழியாக பஜ்ஜிகடை மட்டும் தெரியவில்லை, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலும் அல்லவா காட்சி தருகிறார், ஸ்ரீராம் சொன்னது போல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோபுர தரிசனம் செய்யலாம். விழாக்காலாங்களில் சாமி ஊர்வலம் பார்ப்பது பாதை ஓர கடைகள், சாப்பாட்டு ஓட்டல், டிபன் ஓட்டல் என்று அனைத்து வசதிகளும் நிறைந்த அற்புத வீடும் ஜன்னலும் கிடைத்ததில் மகிழ்ச்சி.//

      சந்தோஷம்.

      //ஜன்னல் வழி பார்க்கும் மனிதர்கள்தான் உங்கள் கதை நாயக நாயகி காதாபாத்திரங்களா! //

      அவர்களும் உண்டு தான். என் குட்டியூண்டு கதைகளில் ஒன்றான “ஆசை” மட்டும் படியுங்கோ. அதிலும் ஜன்னல் முக்கியப்பங்கு வகிக்கிறது.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_04.html


      //அடுத்து பதிவுக்கு காத்து இருக்கிறேன்.//

      10.02.2013 ஞாயிறு அன்று வெளியிட உள்ளேன்.

      நீக்கு
  18. என் வீட்டின் பெயரும் “பவித்ராலயா” என என்னால் வைக்கப்பட்டது.//

    நல்ல [பெயர் பேத்திக்கு.
    வீட்டுக்கும் அழகாய் பொருந்துகிற பெயர்.
    வாழ்த்துக்கள் வீட்டுக்கும், பேத்திக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு February 3, 2013 at 5:20 PM
      ***என் வீட்டின் பெயரும் “பவித்ராலயா” என என்னால் வைக்கப்பட்டது.***

      //நல்ல பெயர் பேத்திக்கு.வீட்டுக்கும் அழகாய் பொருந்துகிற பெயர்.
      வாழ்த்துக்கள் வீட்டுக்கும், பேத்திக்கும்.//

      மிக்க நன்றி, சந்தோஷம்.

      நீக்கு
  19. நல்ல வர்ணனை... திருச்சி வரும் போது வந்து விடுகிறேன்...

    அப்பாதுரை அவர்கள் திருச்சி வரை வந்துள்ளது இப்போது தான் தெரியும்... அடுத்தமுறை வரும் போது நேரில் கோபத்தை காண்பித்துக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கிருந்து மதுரை வரலாம் என்று தான் முதலில் ப்ளான் போட்டிருந்தேன் தனபாலன்.. கோவிக்காதிங்க :)

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன்ன் February 3, 2013 at 5:22 PM
      //நல்ல வர்ணனை... திருச்சி வரும் போது வந்து விடுகிறேன்...//

      நன்றி. கட்டாயம் வாருங்கள்.

      நீக்கு
  20. ”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது.

    திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும்.

    காணக்கண் கோடி வேண்டும்.” //

    திரு. அப்பாதுரை அவர்களுக்கு நன்றி. மறுபடியும் உங்களை உறசாகமாய் பதிவு எழுத வைத்து விட்டார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசுFebruary 3, 2013 at 5:23 PM

      //திரு. அப்பாதுரை அவர்களுக்கு நன்றி. மறுபடியும் உங்களை உறசாகமாய் பதிவு எழுத வைத்து விட்டார் .//

      ஆமாம். ஆனால் அவர் இதில் ஏதோ அய்யம்பேட்டை வேலை செய்துள்ளதாக தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம். ;)

      அது என்ன அய்யம்பேட்டை வேலை? என, அவருக்கான என் பதிலில் மேலே விளக்கியுள்ளேன்.

      தயவுசெய்து படித்துப் பாருங்கோ, ,மேடம்..

      நீக்கு
  21. அப்பாதுரை சார் சொல்றதை வச்சும் நீங்கள் விவரிக்கும் விதமும் பாத்தா உங்க ஜன்னல் டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடும்னு நினைக்கிறேன்.
    திருச்சி வரும்போது விசிட் பண்ணிடறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN February 3, 2013 at 5:31 PM
      //அப்பாதுரை சார் சொல்றதை வச்சும் நீங்கள் விவரிக்கும் விதமும் பாத்தா உங்க ஜன்னல் டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடும்னு நினைக்கிறேன்.//

      சரியாகச்சொன்னீர்கள்.

      ஆபத்துக்கள் எந்தெந்த ரூபத்தில் வருமோ என அச்சமாக உள்ளது. முதலில் நம் திரு. அப்பாதுரை சார் அவர்களின் எழுத்துக்கள் மூலம் வந்துள்ளது. டூரிஸ்ட் ஸ்பாட் ஆனால் விரைவில் அது அரசுடமையாக்கப்படும். அரசால் கையகப் படுத்திக் கொள்ளப்படும். பிறகு நான் எங்கே செல்வது என எனக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுவிட்டது, ஸ்வாமீ.
      .
      //திருச்சி வரும்போது விசிட் பண்ணிடறோம்.//

      வாங்கோ வாங்கோ !

      நீக்கு
  22. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பார்கள்
    உங்கள் வீட்டு ஜன்னலும் உயிர் பெற்று கதை சொல்கிறதே பாராட்டுக்கள். செவிக்கு உணவு ஒன்றும் இல்லாதபோது வயிற்ருக்கும் ஈயப்படும் என்பார் திருவள்ளுவர்
    உங்கள் பதிவிற்கு வந்தால் மணக்க மணக்க சாப்பாடும் சிற்றுண்டியும் கிடைக்கிறது ஒரு தனி சுவை.
    v-very-g-good k-knowledgeble VGK.you are super.in all respects.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman February 3, 2013 at 6:04 PM

      வாங்கோ வாங்கோ .... வணக்கம்.

      //கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பார்கள்
      உங்கள் வீட்டு ஜன்னலும் உயிர் பெற்று கதை சொல்கிறதே பாராட்டுக்கள்.//

      நன்றி, ஐயா. என்னைத் தட்டிவிட்டால் போதும். எந்த ஒரு ஜடப்பொருளையும் என்னால் உயிர்கொடுத்து கதை சொல்ல வைக்க முடியும் தான்.;))))

      //செவிக்கு உணவு ஒன்றும் இல்லாதபோது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார் திருவள்ளுவர் //

      அவர் எதையாவது சொல்லுவார். வயதானவர் பாவம். அவருக்கு. அஜீர்ணம் அதிகமாக இருந்திருக்கலாம்.

      என்னைப்பொறுத்தவரை வயிற்றுக்குப்பிறகே மற்ற அவயவங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப்படும்.

      //உங்கள் பதிவிற்கு வந்தால் மணக்க மணக்க சாப்பாடும் சிற்றுண்டியும் கிடைக்கிறது ஒரு தனி சுவை. //

      ஜன்மா எடுத்ததே சுவையான உணவுகளை உண்டு களிக்க மட்டுமே என உறுதியாக நினைப்பவனாக்கும்.

      //v-very-g-good k-knowledgeble VGK.you are super.in all respects./

      VGK என்றால்

      "V"ERY
      "G"OOD
      "K"NOWLEDGE

      என்பதன் சுருக்கம் என்று ’சுருக்’ என ’நறுக்’ என்று சொல்லியுள்ள தங்களின் KNOWLEDGE அடேங்கப்பா ! ;)))))

      மிக்க மகிழ்ச்சி, ஸ்வாமீ.

      நீக்கு
  23. என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே உங்க வீட்டை பார்த்து ரசித்தேன் சார். சுவாரசியமான தகவல்கள், பக்கத்தில் உள்ள உண்வு விடுதியைப்பற்றியும் சுவையான தகவல்கள். ரசித்தேன். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI February 3, 2013 at 7:46 PM
      என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே உங்க வீட்டை பார்த்து ரசித்தேன் சார். சுவாரசியமான தகவல்கள், பக்கத்தில் உள்ள உண்வு விடுதியைப்பற்றியும் சுவையான தகவல்கள். ரசித்தேன். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.//

      வாங்கோ மேடம். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கீழ்க்கண்ட இணைப்பினை தனியாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      நடுவில் தங்களால் படிக்காமல் விட்டுப்போன என் பதிவுகளைப் படிக்க அதில் பல லிங்குகள் INDEX போல கொடுக்கப்பட்டுள்ளன.
      படிக்கும் போது மறக்காமல் கருத்தளியுங்கள்.. .

      நீக்கு
  24. நீண்ட நாள் கழித்து மீண்டும் பதிக்க வந்தது பார்த்து மிக்க சந்தோசம்.

    அப்பாதுரை சார் தங்கள் வீட்டிற்கு விஜயம் செய்தது மனதை மகிழ்விக்கிறது. பதிவர்களின் சந்திப்பு தொடர வேண்டும். தொடர்புகளின் எல்லை விரிவடைய வேண்டும்.

    தவிர நகரின் மையப் பகுதியில் தங்கள் 'பவித்ராலயா' அமைந்துள்ளது அறிந்து மேலும் மகிழ்ச்சி. இதில் நிறைய சௌகரியங்கள் உள்ளன. கடை, கண்ணிக்கு செல்ல, பேருந்து வசதி நாட இப்படி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சுறுசுறுப்பாக நாமும் இயங்கலாம். குறிப்பாக தாங்கள் குறிப்பிட்டது போல நல்ல உணவக வசதிகள் அருகிலேயே இருந்துவிட்டால் இன்னும் சௌகரியம். சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ரெஸ்டாரென்ட் உரிமையாளர் (ரகுநாத் ரெஸ்டாரென்ட் என்று நினைக்கின்றேன்) எனது பழைய நண்பர்.

    ஜன்னல் பற்றிய பீடிகைகள் அடுத்த பதிவை வாசிக்க தூண்டுகிறது. இந்த மாதிரி இடங்களில் உள்ள வீடுகளின் ஜன்னலருகே அமர்ந்து விட்டால் நேரம் போவது தெரியாது. அந்த ஜன்னல் இன்னொரு கணினி திரையாகி விடும். இந்த இடத்தில் எதிர் வீட்டு ஜன்னலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகின்றேன் !

    படங்கள் பதிவை மிகப் பொருத்தமாக விளக்குகிறது. வாழ்த்துகள் வை.கோ. சார். ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Advocate P.R.JayarajanFebruary 3, 2013 at 8:26 PM

      வாருங்கள், சார், வணக்கம்,

      //நீண்ட நாள் கழித்து மீண்டும் பதிக்க வந்தது பார்த்து மிக்க சந்தோசம். //

      நன்றி சார்.

      //சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ரெஸ்டாரென்ட் உரிமையாளர் (ரகுநாத் ரெஸ்டாரென்ட் என்று நினைக்கின்றேன்) எனது பழைய நண்பர். //

      ரகுநாத் + வசந்த பவன் என்ற இரண்டும் தான் அங்கு பிரபலமானவை. மிகவும் அருமையான உணவகங்கள்

      இரண்டிலும் பலமுறை டிபன் + காஃபிசாப்பிட்டு மகிழ்ந்துள்ளேன்.

      //இந்த இடத்தில் எதிர் வீட்டு ஜன்னலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகின்றேன் !//

      எனக்கு வாய்த்துள்ள வீட்டுக்கு மட்டும் எதிர்வீட்டு ஜன்னல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதுவும் ந்ன்மைக்கே.

      இருப்பினும் எதிர்வீட்டு ஜன்னல் பற்றி கற்பனையாக ஓர் குட்டிக் கதை எழுதியுள்ளென். “ஆசை”: என்ற தலைப்பில் உள்ள அந்தக் கதையை தாங்கள் படிக்க ஒருவேளை ஆசைப்படலாம். இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_04.html

      //படங்கள் பதிவை மிகப் பொருத்தமாக விளக்குகிறது. வாழ்த்துகள் வை.கோ. சார். ...//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  25. itha padikum pothu side la enaku oru mini padame odirichi sir... Super post...
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi February 3, 2013 at 8:55 PM
      itha padikum pothu side la enaku oru mini padame odirichi sir... Super post...
      http://recipe-excavator.blogspot.com

      //இதைப்படிக்கும்போது சைடுலே எனக்கு ஒரு மினி படமே ஓடிரிச்சு சார். சூப்பர் போஸ்ட் - சங்கீதா நம்பி.//

      வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.



      நீக்கு
  26. சார் உங்க வீட்டு ஜன்னலின் இயற்கை ரகசியம் பார்த்தேன். திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் வியூகம் அருமையாக தெரிகிறது.. அதுதான் உங்க வீட்டு ஜன்னலுக்கு அதிக விசேஷம்னு நினைக்கிறேன்.பவித்ராலயா அற்புதமான் பெயர்.பவித்ரம்- தூய்மை! தூய்மையான அன்பு உள்ளங்களை கொண்ட இல்லம்!இல்லம் என்பது மனதிற்கு நினைப்பது போல் அமைந்துவிட்டால் பெரிய சந்தோஷம் அதுதான். வீட்டிற்கு பக்கத்திலேயே எல்லாம் கிடைப்பது கூடுதல் வசதி. ஆஹா இப்படி ஒரு அருமையான வீட்டின் சொந்தக்காரரான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சார்! இல்லம் முழுதும் எல்லா வளங்களும், நலங்களும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு February 3, 2013 at 9:04 PM

      வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர், குட் மார்னிங் டீச்சர்!

      //சார் உங்க வீட்டு ஜன்னலின் இயற்கை ரகசியம் பார்த்தேன். திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் வியூகம் அருமையாக தெரிகிறது.. அதுதான் உங்க வீட்டு ஜன்னலுக்கு அதிக விசேஷம்னு நினைக்கிறேன்.பவித்ராலயா அற்புதமான் பெயர்.பவித்ரம்- தூய்மை! தூய்மையான அன்பு உள்ளங்களை கொண்ட இல்லம்!//

      பவித்ரமான கருத்துக்களைச்சொல்லியுள்ள டீச்சர் வாழ்க!

      உங்களைப்போன்ற அன்புள்ளம் கொண்ட ஒருவர் மட்டும் அமைந்து விட்டால், அன்பு ஆறாகப்பெருகி ஓடாதா என்ன?

      //இல்லம் என்பது மனதிற்கு நினைப்பது போல் அமைந்துவிட்டால் பெரிய சந்தோஷம் அதுதான். வீட்டிற்கு பக்கத்திலேயே எல்லாம் கிடைப்பது கூடுதல் வசதி. ஆஹா இப்படி ஒரு அருமையான வீட்டின் சொந்தக்காரரான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சார்! இல்லம் முழுதும் எல்லா வளங்களும், நலங்களும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்!//

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, டீச்சர்.

      என்னை மறுபடியும் எழுத வைத்துள்ளது திரு. அப்பாதுரை சார் மட்டுமல்ல. நீங்களும் தான் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறீர்கள். .

      இதில் திரு. அப்பாதுரை சாரின் பதிவினைப்பற்றி எனக்கு முதல் தகவல் அளித்ததும் தாங்கள்.

      மேலும் சோர்ந்து போய் உள்ள என்னை தினமும் அடிக்கடி பூஸ்டு கலந்து கொடுத்துக்கொண்டிருக்கும் நால்வரில் தாங்களும் ஒருவராகத் திகழ்கிறீர்கள். நன்றியோ நன்றிகள். ;))))

      நீக்கு
  27. அருமையா வீட்டின் அக, புற அழகை விவரித்துவிட்டீர்கள் ஐயா... ஆர்வமாக ஜன்னல் கதையைத் தேடினால் பொசுக்கென்று அடுத்த வாரம் என்றுவிட்டீர்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ezhil February 3, 2013 at 9:05 PM

      வாருங்கள் Mrs. Ezhil Madam, வணக்கம்.

      தங்களின் பெயரே தூய தமிழில் எழில் கொஞ்சுவதாக உள்ளது. மகிழ்ச்சி.

      //அருமையா வீட்டின் அக, புற அழகை விவரித்துவிட்டீர்கள் ஐயா... //

      மிக்க நன்றி.

      //ஆர்வமாக ஜன்னல் கதையைத் தேடினால் பொசுக்கென்று அடுத்த வாரம் என்றுவிட்டீர்களே....//

      ஜன்னல் கதை என்பதால் அது அவ்வளவு ஈஸியாக முடியாது அல்லவா! தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  28. அழகான பதிவு போடுவது மட்டும் இல்லாமல் அனைவரையும் அவரவர் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்வதிலும் நீங்கள் நம்பர் 1. அதற்கு மனமார்ந்த நன்றி.

    எனக்கு நான் சின்ன வயதில் மைலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவில் குடி இருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. வீட்டு எதிரில் கணேசய்யரின் நாலணா பொட்டலக்கடை. கபாலி கோவிலில் இருந்து 3 நிமிட நடை.

    கண்டிப்பாக மீண்டும் திருச்சிக்கு வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    தினமும் மலைக்கோட்டை தரிசனம். கொடுத்துவைத்தவர் அண்ணா நீங்கள். ’மெயின் கார்டு கேடு’ என்ற சொல்லே ரொம்ப கம்பீரமாகத் தோன்றும் எனக்கு.

    வீடு என்பது ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இடம். அது மகிழ்ச்சியாக அமைவது ஒரு வரம். கடவுளின் ஆசி. அப்படி உங்களுக்கு அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்த உணர்வோடு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வீடு அமைவது வரம் என்றே தோன்றுகிறது. அதிலும் ஜன்னல் இப்படி அமைவது பெருவரம் :)

      நீக்கு
    2. JAYANTHI RAMANI February 3, 2013 at 9:12 PM
      அழகான பதிவு போடுவது மட்டும் இல்லாமல் அனைவரையும் அவரவர் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்வதிலும் நீங்கள் நம்பர் 1. அதற்கு மனமார்ந்த நன்றி.//

      அன்புள்ள மேடம், வாங்கோ, வணக்கம்.

      தங்களுக்கே உள்ள ஓர் ஆர்வத்தினாலோ, என் மீது உள்ள அளவுகடந்த பாசத்தினாலோ, ஒருமுறைக்கு இருமுறையாக பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

      கீழேயுள்ள தங்களின் பின்னூட்டத்திற்கு நான் மிகவும் விளக்கமாக பதில் அளித்துள்ளேன்.

      நீடூழி வாழ்க!

      நீக்கு
  29. //தெருவில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க செளகர்யமாக உள்ளது. //

    உங்களுக்கு ஏற்ற இடம்தான் ,படங்களும் உங்கள் வர்ணனை விளக்கங்களும் மிக கொடுத்து வைத்தவர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.இந்த பதிவில் போட்டோவாக வந்துள்ள கடைகள்,ஹோட்டல்கள்,உங்கள் குடியிருப்பு அனைத்து உரிமையாளர்களிடமும் காண்பியுங்கள் .

    திறமைகள் இருந்தாலும் சூழ்நிலைகள் சாதகமாக ஒத்துவந்தாலே அந்த திறமையும் அழகாய் வெளிப்படும்.இந்த வயதிலும் உங்கள் மன இளமைக்கு இவைகளும் ஒரு காரணம் என்று நினைகின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar February 3, 2013 at 9:20 PM
      ***தெருவில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க செளகர்யமாக உள்ளது.***

      //உங்களுக்கு ஏற்ற இடம்தான்.//

      அடடா, என்ன இப்படிச்சொல்லிட்டீங்க ! குறும்பு ஜாஸ்தி !! ;)))))

      //படங்களும் உங்கள் வர்ணனை விளக்கங்களும் மிக கொடுத்து வைத்தவர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.//

      ஆஹா, கொடுத்து வைத்தவரா? நானா? என்னென்னவோ சொல்றீங்கோ! சரி ரைட்டு; அதுபற்றி பிறகு பேசிக்கொள்கிறேன்.

      //இந்த பதிவில் போட்டோவாக வந்துள்ள கடைகள், ஹோட்டல்கள், உங்கள் குடியிருப்பு அனைத்து உரிமையாளர்களிடமும் காண்பியுங்கள் .//

      நமக்கு எதற்கு அனாவஸ்ய ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?

      //திறமைகள் இருந்தாலும் சூழ்நிலைகள் சாதகமாக ஒத்துவந்தாலே அந்த திறமையும் அழகாய் வெளிப்படும்.//

      உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடணும். நீங்களே எடுத்துப் போட்டுக்கோங்கோ. மறக்காமல் அந்த ஜீனி டப்பாவை மூடி வெச்சுடுங்கோ.

      இல்லாட்டி எறும்பு வந்துடும். நம் பாப்பாவைக் கடிச்சுடும். ;)

      //இந்த வயதிலும் உங்கள் மன இளமைக்கு இவைகளும் ஒரு காரணம் என்று நினைகின்றேன் .//

      சந்தோஷம். எவ்வளவோ வேலைகளுக்கு நடுவினிலே, குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்து கருத்துக்கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))

      Please take care of everything Madam. All the Best ...... vgk

      நீக்கு
  30. இனிமே திருச்சின்னா.. உச்சி பிள்ளையார் கோவிலுடன் உங்க வீட்டு ஜன்னலும் ஞாபகத்திற்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு February 3, 2013 at 9:21 PM
      இனிமே திருச்சின்னா.. உச்சி பிள்ளையார் கோவிலுடன் உங்க வீட்டு ஜன்னலும் ஞாபகத்திற்கு வரும்.//

      உங்களுக்கு இனிமே தான்.

      எனக்கு ஏற்கனவே வேலூர் என்றாலே ஜெயிலோ, கோட்டையோ மறந்து போகும்.

      டீச்சர் ஞாபகம் மட்டும் தான் வருமாக்கும். ஹுக்க்க்கும்!! ;)))))

      நீக்கு
  31. ஜன்னலைத் தொட்டு எத்தனை சமாச்சாரங்கள்?.. அத்தனையிலும் பதிந்திருக்கும் பாசாங்கற்ற உங்கள் உள்ள உயர்வு!

    பதிவுக்கு கொடுத்திருக்கும் தலைப்புக்கு ஒரு ஸ்பெஷல் கங்கிராட்ஸ்! இப்படியெல்லாம் கவித்துவமாக மட்டுமில்லை, சட்டென்று யோசித்துத் தீர்மானிக்க உங்களால் தான் முடியும், வைகோ சார்! பிரமாதம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி February 3, 2013 at 9:27 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம், நமஸ்காரங்கள் ஐயா.

      //ஜன்னலைத் தொட்டு எத்தனை சமாச்சாரங்கள்?.. அத்தனையிலும் பதிந்திருக்கும் பாசாங்கற்ற உங்கள் உள்ள உயர்வு! //

      கேட்க மிகவும் மனசுக்கு ஆறுதலாக உள்ளது, ஐயா. நன்றி ஐயா.

      //பதிவுக்கு கொடுத்திருக்கும் தலைப்புக்கு ஒரு ஸ்பெஷல் கங்கிராட்ஸ்! இப்படியெல்லாம் கவித்துவமாக மட்டுமில்லை, சட்டென்று யோசித்துத் தீர்மானிக்க உங்களால் தான் முடியும், வைகோ சார்! பிரமாதம். வாழ்த்துக்கள்!//

      என்னை நன்கு புரிந்துகொண்டு, ஆறுதல் வார்த்தைகள் கூறி அவ்வபோது உற்சாகப்படுத்திவரும் தங்களின் அன்பான வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது, ஐயா.

      பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் ஐயா.

      நீக்கு
  32. அழகாய் பதிவுகள் போடுவது மட்டுமல்லாமல் அனைவரையும் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்வதிலும் நீங்கள் நம்பர் 1.

    எனக்கு என் சிறுவயதில் மைலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்த வீடு ஞாபகத்துக்கு வந்து விட்டது. கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து 3 நிமிட நடை. வீட்டுக்கு எதிரே கணேசய்யரின் நாலணா பொட்டலக்கடை. என் பாட்டி அடுப்பில் தண்ணீரை வைத்துவிட்டுப் போய் காய்கறி வாங்கிக் கொண்டு வருவார்கள். கபாலி கோவில் உற்சவங்களை மொட்டை மாடியிலிருந்தே கண் குளிரக் காணும் பாக்கியம்.

    ‘மெயின் கார்டு கேட்’ என்ற சொல்லே கம்பீரமாக இருக்கு, உங்களைப் போலவே.

    தினமும் உச்சிப்பிள்ளையார் கோவில் கோபுர தரிசனம்.

    ஒரு மனிதனுக்கு வீடு என்பது மகிழ்ச்சி தரும் இடமாக இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி.

    ’பவித்ராலயா’ பெயரிலேயே ஆலயம் இருக்கிறது. உங்கள் இல்லம் ஓர் ஆலயம்.

    உங்களையும், உங்கள் இல்லத்தையும் பார்க்க கண்டிப்பாக திருச்சி வர வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    வாழ்த்துக்களுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIFebruary 3, 2013 at 9:37 PM

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      //அழகாய் பதிவுகள் போடுவது மட்டுமல்லாமல் அனைவரையும் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்வதிலும் நீங்கள்
      நம்பர் 1.//

      ஹைய்யா! இன்றைக்குத்தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

      தங்களின் இனிமையான குரலை இன்று கேட்டதனால் இருக்குமோ என்னவோ! ;)))))

      நன்றி!! நன்றி!!! நன்றி!!!!

      //ஒரு மனிதனுக்கு வீடு என்பது மகிழ்ச்சி தரும் இடமாக இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி.

      ’பவித்ராலயா’ பெயரிலேயே ஆலயம் இருக்கிறது. உங்கள் இல்லம் ஓர் ஆலயம்.//

      இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

      1999 இல் பிறந்த என் அருமைப்பேத்தி பெயரையும், 2012 இல் பிறக்க உள்ள தங்களின் அருமைப்பேத்தி பெயரையும் சேர்த்தே
      என் சொந்த கிருஹத்திற்கு [ In anticipation ] முன்கூட்டியே நான் திட்டமிட்டு 2001 இல் ”பவித்ராலயா” என வைத்துள்ளேன்.

      என் பேத்தி பெயர்: பவித்ரா +
      உங்கள் பேத்தி பெயர்: லயா.

      நம் வீட்டின் பெயர்: ”பவித்ராலயா” [பவித்ரா + லயா]

      என்னப்பொருத்தம் பாருங்கோ!

      “என்னப்பொருத்தம் .... நமக்குள் ..... இந்தப்பொருத்தம்”
      என்ற சினிமாப்பாட்டு போல உள்ளது அல்லவா! ;)))))

      //உங்களையும், உங்கள் இல்லத்தையும் பார்க்க கண்டிப்பாக திருச்சி வர வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.//

      வாங்கோ அவசியமாக வாங்கோ! எப்போது வேண்டுமானாலும் வாங்கோ. வரும் போது ஞாபகமாக மாமா, செள. சந்தியா, பிள்ளை, மருமகள், உங்களின் அம்மா, அப்பா + முக்கியமாக “லயா” குட்டி எல்லோரையும் அவசியமாகக் கூட்டிக்கொண்டு வாங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  33. Dear Vaiko Sir,
    Having grown up in Trichy, I know the strategic importance of North Andar street, Chinnakadai street etc which can be valued more than Ranganathan Street and T.Nagar of our Chennai. Additionally the wonderful scenic beauty of Uchi Pilliar Koil adds tremendous value to your Home. The photographic depiction of Home will make many readers, including me, jealous of you. Really, as told by your guest, the most invaluable place is Window. No doubt. Congrats.
    N.Paramasivam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. UnknownFebruary 3, 2013 at 10:10 PM
      Dear Vaiko Sir,
      //Having grown up in Trichy, I know the strategic importance of North Andar street, Chinnakadai street etc which can be valued more than Ranganathan Street and T.Nagar of our Chennai. Additionally the wonderful scenic beauty of Uchi Pilliar Koil adds tremendous value to your Home. The photographic depiction of Home will make many readers, including me, jealous of you. Really, as told by your guest, the most invaluable place is Window. No doubt. Congrats.-- N.Paramasivam//

      WELCOME TO YOU Mr. N. Paramasivam Sir,

      திருச்சியில் வளர்ந்தவர் என்ற முறையில் தங்களுக்கு வடக்கு ஆண்டார் தெரு + சின்னக்கடைத்தெரு முதலியன பற்றியும் அவற்றின் சரித்திர முக்கியத்துவம் பற்றியும் நன்கு தெரிந்துள்ளது.

      சென்னையில் உள்ள ரெங்கநாதன் தெருவைவிட, தி. நகரை விட மதிப்பினில் உயர்ந்தவை இந்தத்திருச்சியின் பகுதிகள் என்பதையும் உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

      கேட்கவும் ஒப்பிட்டுப்பார்க்கவும் மகிழ்ச்சியாகவே உள்ளது எனக்கும்.

      உங்களின் அடுத்த வரிகளுக்கான விரிவான விளக்கப்படங்களும் என் பதில்களும் இந்தப்பதிவின் தொடர்ச்சியில் வருகிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள்.

      ALL THE BEST .... WITH KIND REGARDS,

      VGK

      நீக்கு
  34. Aha!!!!!!!!
    Rasisi rasisi padithen...sorry parthen.
    Nejamave jannal valiye vedikai parpathu roma innimayana vishayam...
    Nanum orunal angu varuven sir.....
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji February 3, 2013 at 10:10 PM
      Aha!!!!!!!! Rasisi rasisi padithen...sorry parthen. Nejamave jannal valiye vedikai parpathu roma innimayana vishayam... Nanum orunal angu varuven sir.....viji.

      ஆஹா !!!!!!! ரஸித்து ரஸித்துப்படித்தேன். ஸாரி ... பார்த்தேன். நிஜமாவே ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது ரொம்ப இனிமையான விஷயம். நானும் ஒருநாள் அங்கு வருவேன் சார் - - விஜி//

      வாருங்கள் திருமதி விஜயலக்ஷ்மி மேடம்.

      உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

      அவசியம் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் மேடம்.

      அன்புடன் ஆத்மார்த்தமாக அழைக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  35. காலை எழுந்தவுடன் உச்சிப்பிள்ளையார் கோவில் தரிசனம் கண்ணாரக்கண்டு வணங்க முடியும் ...

    தாயுமானவர் , மட்டுவார் குழல்ம்மை , மாணிக்கவிநாயக்ர் , சந்தோஷிமாதா மன்க்கண்களில் தரிசனம் தருகிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 3, 2013 at 11:59 PM

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வாங்கோ !!!!

      //காலை எழுந்தவுடன் உச்சிப்பிள்ளையார் கோவில் தரிசனம் கண்ணாரக்கண்டு வணங்க முடியும் ... //

      ஆமாம் மேடம்.அது என்னவோ உண்மை தான்.

      //தாயுமானவர் , மட்டுவார் குழல்ம்மை , மாணிக்கவிநாயக்ர் , சந்தோஷிமாதா மன்க்கண்களில் தரிசனம் தருகிறார்கள்...//

      ஆமாம். அத்துடன் கூட தங்களின் அன்றாடப்பதிவுகளின் மூலம் அனைத்துக் கோயில்களையும், தெய்வங்களையும் மனக்கண்களிலும், அக மற்றும் புறக்கண்களிலும் தரிஸிக்க முடிகிறது.

      நீக்கு
  36. பவித்ராலயத்தில் தரிசனம் தரும் காட்சிகளை
    பாங்குடன் நேர்முகவர்ணணையாகத்தந்த அருமையான பகிர்வுகளுக்குப்
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 12:01 AM
      //பவித்ராலயத்தில் தரிசனம் தரும் காட்சிகளை பாங்குடன் நேர்முகவர்ணணையாகத்தந்த அருமையான பகிர்வுகளுக்குப்
      பாராட்டுக்கள்..//

      தங்களின் பாராட்டுக்களால் இந்தப் பதிவு இப்போது மேலும் ஜொலிப்பதாக நினைக்கிறேன். மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      நீக்கு
  37. சிவசக்தி டவர்ஸின் அருகிலேயே அனைத்து
    வசதிகளும் அமைந்ததற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 12:04 AM
      சிவசக்தி டவர்ஸின் அருகிலேயே அனைத்து
      வசதிகளும் அமைந்ததற்கு வாழ்த்துகள்..//

      ஏதோ என் முன்னோர்கள் செய்த புண்ணியம் என நினைக்கிறேன். தங்களின் ஆத்மார்த்தமான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்..

      நீக்கு
  38. என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !
    ஒவ்வொன்றும் சொல்லும் ஆயிரம் கதைகளும் பதிவாக
    வெளிவரட்டும் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 12:06 AM
      என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !
      ஒவ்வொன்றும் சொல்லும் ஆயிரம் கதைகளும் பதிவாக
      வெளிவரட்டும் ..!//

      அம்பாளின் அசரீரி வாக்கு போன்ற இந்தத்தங்களின் விருப்பம் என் மூலம் நிறைவேற அம்பாளே பிராப்தம் ஏற்படுத்தித் தரட்டும்.

      நீக்கு
    2. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான்கு முறை செந்தாமரையை மலரச்செய்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சந்தோஷங்கள் இதுபோலத் தொடர அம்பாள் அருளட்டும் என பிரார்த்திக்கிறேன்..

      நீக்கு
  39. அற்புதமான வர்ணனை உங்களுக்கே உரிய பாணியில் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச்சாரல் February 4, 2013 at 12:31 AM
      அற்புதமான வர்ணனை உங்களுக்கே உரிய பாணியில் :-)//

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  40. இன்னிக்குத் தான் உங்க அழைப்பைப் பார்த்தேன். ஜன்னல் கம்பிகள் சொல்லும் கதை பிரமாதம். என்றாலும் அதிலும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களே! காத்திருக்கேன். உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் 24-ஆம் தேதி வந்திருந்தேன். ஆண்டார் தெரு(வடக்கு?) மாயவரம் லாட்ஜில் தான் டிபன் சாப்பிட்டோம். இந்த ராமா கஃபே பற்றித் தெரியாமல் போச்சு. ஒரு முறை உங்கள் வீட்டு ஜன்னல் சுகத்தை அனுபவிக்க வரணும். சீக்கிரமா வர முயற்சி செய்யறேன். இப்போக் கொஞ்சம் முடியலை. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 4, 2013 at 2:40 AM

      //இன்னிக்குத் தான் உங்க அழைப்பைப் பார்த்தேன். ஜன்னல் கம்பிகள் சொல்லும் கதை பிரமாதம். என்றாலும் அதிலும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களே! காத்திருக்கேன். //

      தங்களின் மெயில் விலாசம் எனக்குத்தெரியாது. அதனால் திரு. அப்பாதுரை சார் அவர்களின் பின்னூட்டப் பெட்டியின் மூலமே உங்கள் மூவரையும் மடும் நான் அழைக்க நேர்ந்தது.

      //உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் 24-ஆம் தேதி வந்திருந்தேன். ஆண்டார் தெரு(வடக்கு?) மாயவரம் லாட்ஜில் தான் டிபன் சாப்பிட்டோம். இந்த ராமா கஃபே பற்றித் தெரியாமல் போச்சு. //

      அடடா, எனக்கும் தெரியாமல் போச்சே.

      மாயவரம் லாட்ஜுக்கும் எங்கள் ஆத்துக்கும் நடுவே தான் இந்த ராமா கஃபே அமைந்துள்ளது.

      ஆமை வேகத்தில் நடந்து வந்தாலும் கூட மாயவரம் லாட்ஜிலிருந்து ஐந்தே நிமிடத்தில் எங்கள் ஆத்துக்கு வந்து விடலாம்.

      //ஒரு முறை உங்கள் வீட்டு ஜன்னல் சுகத்தை அனுபவிக்க வரணும். சீக்கிரமா வர முயற்சி செய்யறேன்.//

      வாங்கோ அவசியமா வாங்கோ.

      நாம் இருவரும் திருச்சியிலேயே இருந்தும் கூட உங்களையும் நான் இதுவரை சந்திக்கவே முடியவில்லை.

      //இப்போக் கொஞ்சம் முடியலை. :))))//

      அதே அதே சபாபதே! எனக்கும்.

      நான் ஒரு முழுச்சோம்பேறி ஆகிவிட்டேன் இப்போது. எதற்குமே உடம்பை அலட்டிக்கொள்வது இல்லை. அனாவஸ்யமாக எங்கும் அலைவதும் இல்லை.

      நீக்கு
  41. அதிலும் சுவாமி தரிசனம் வேறே ஜன்னலில் இருந்தே பார்க்கிறதுன்னா சும்மாவா? கொடுத்து வைச்சிருக்கீங்க. திருஷ்டிப் பூஷணி மாட்டிடுங்க உங்க ஜன்னலில்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 4, 2013 at 2:41 AM
      //அதிலும் சுவாமி தரிசனம் வேறே ஜன்னலில் இருந்தே பார்க்கிறதுன்னா சும்மாவா? கொடுத்து வைச்சிருக்கீங்க. //

      ஏதோ என் முன்னோர்கள் செய்த புண்ணியமும் உங்களைப் போன்ற ஒருசில நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும் / அன்பும் வாழ்த்துகளுமே காரணம்.

      //திருஷ்டிப் பூஷணி மாட்டிடுங்க உங்க ஜன்னலில்! :))))))//

      அடிக்கும் காற்றில் அது அறுந்து தெருவில் போகிறவர்களின் மண்டையைப்பிளந்து ..... வேண்டாம்.

      நமக்கு எதற்கு அனாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ் ;))))

      நீக்கு
  42. Dear Gopu,

    Very interesting ..though I have visited your place many times the WORLD THROUGH WINDOWS is some thing interesting and enjoyed it. One additional info. - every Thursday for so many years till date, you can enjoy AKKARA ADISAL-a rare mouthwatering sweet which nobody prepares nowadays- in Rama Café. Thanks.
    Manakkal J Raman

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manakkal February 4, 2013 at 3:01 AM

      Dear Gopu,

      Very interesting ..though I have visited your place many times the WORLD THROUGH WINDOWS is some thing interesting and enjoyed it.

      நமஸ்காரம் சார், வாங்கோ. தாங்கள் ஏதோ 3-4 தடவைகள் மட்டுமே நம் ஆத்துக்கு வந்து போனீர்கள்.

      அதுவும் ஒவ்வொரு முறையும் FLYING VISIT மட்டுமே.

      //One additional info. - every Thursday for so many years till date, you can enjoy AKKARA ADISAL-a rare mouthwatering sweet which nobody prepares nowadays- in Rama Café.//

      நானும் அந்த அக்கார அடிச்டலை மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளேன், சார். அது அந்தக்காலம். இப்போது நினைத்தாலும் என் நாக்கிலும் நீர் ஊறுகிறது.

      அப்போது ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் [கட்டை குட்டையாக குண்டாக பறங்கிப்பழ சிவப்பாக இருப்பார்] அவர்களின் பொறுப்பில் அந்தக்கடை இருந்தது. இப்போது OWNERSHIP மாறிவிட்டது. ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் அவர்களும் காலமாகிவிட்டார்.

      இப்போது ஒரு 15 வருடங்களாக வேறு ஒரு ஐயங்கார் நிர்வாகத்தில் கடை உள்ளது. அவரும் இப்போது எனக்கு நண்பராகவே உள்ளார்.

      பொதுவாக அக்கார அடிசலும், புளியோதரையும் செய்வதில் ஐயங்கார்களே மிகவும் திறமைசாலிகள் என்பது என் அபிப்ராயம்.
      அதனால் மீண்டும் அக்கார அடிசல் “ராமா கஃபே” இல் வாரம் ஒரு நாளாவது போட நான் முயற்சி எடுக்கிறேன்.

      எனக்கு இதைடைப்பும்போதே உடனே அக்கார அடிசல் சூடாக சாப்பிடணும் போல மஸக்கை ஏற்பட்டு விட்டதூஊஊஊஊ.;)

      // Thanks. Manakkal J Raman//

      நன்றி, தொடர்ந்து வாருங்கள். ;)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  43. கம்பன் வீட்டு கைத்தறியும் கதை பாடும். நிஜமான வாக்கு.
    வை.கோ வீட்டு ஜன்னதும் காவியம் படைக்கிறது. இப்படிதான் படித்து முடித்ததும் ஒரு வரி மனதில் வந்தது. படிக்கின்றபோது
    முதலிலிருந்த மனக்கவலைகள்,பவித்ராலயாவின் பவித்ரமான ஜன்னலோரக் காட்சிகளைப் பார்த்துவிட்டு மனம் குளிர்ந்து விட்டது.
    அதிகம் எழுதுவதை விட உங்களின் ஒவ்வொரு வரியிலும் கூடவே பயணித்து அனுபவித்து, தரிசனம் கண்டு, சாப்பாடுகளையும் சுவைத்த அனுபவம் கிட்டியது என்று ஒரே வரியில் முடித்து, நன்றியும் சொல்கிறேன். ஆசிகளுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi February 4, 2013 at 3:20 AM

      வாங்கோ காமாக்ஷி மாமி. சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

      //கம்பன் வீட்டு கைத்தறியும் கதை பாடும். நிஜமான வாக்கு.
      வை.கோ வீட்டு ஜன்னலும் காவியம் படைக்கிறது. இப்படிதான் படித்து முடித்ததும் ஒரு வரி மனதில் வந்தது.//

      மிகவும் சந்தோஷம்; உங்களின் ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன. மகிழ்ச்சி.

      // படிக்கின்றபோது முதலிலிருந்த மனக்கவலைகள், பவித்ராலயாவின் பவித்ரமான ஜன்னலோரக் காட்சிகளைப் பார்த்துவிட்டு மனம் குளிர்ந்து விட்டது.//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது, மாமி. மனக்கவலைகளை மறக்கவே நானும் பதிவுகள் பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறேன்.

      //அதிகம் எழுதுவதை விட உங்களின் ஒவ்வொரு வரியிலும் கூடவே பயணித்து அனுபவித்து, தரிசனம் கண்டு, சாப்பாடுகளையும் சுவைத்த அனுபவம் கிட்டியது என்று ஒரே வரியில் முடித்து, நன்றியும் சொல்கிறேன். ஆசிகளுடன்//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி. முடிந்தால் இந்தத்தொடரின் அடுத்த பகுதிக்கும் வாங்கோ.

      நீக்கு
  44. Pavithraalaya...nalla peyar! Nijamaagave unga veedu nandraaga irukkirathu! Yellam kaaladiyileye kidaikkirathu! Yeppavume boradikkaathu!

    Nalla padangal! Thiru Appadurai sariyaaga solliyirukkiraar!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya February 4, 2013 at 5:56 AM
      Pavithraalaya...nalla peyar! Nijamaagave unga veedu nandraaga irukkirathu! Yellam kaaladiyileye kidaikkirathu! Yeppavume boradikkaathu!

      Nalla padangal! Thiru Appadurai sariyaaga solliyirukkiraar!

      பவித்ராலயா - நல்ல பெயர். நிஜமாகவே உங்கள் வீடு நன்றாக இருக்கிறது. எல்லாம் காலடியிலேயே கிடைக்கிறது. எப்போதுமே போரடிக்காது.

      நல்ல படங்கள். திரு அப்பாதுரை சரியாகச் சொல்லியிருக்கிறார். //

      வாருங்கள் மேடம். ரொம்பவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  45. வீடு அமைவதற்கெல்லாம்
    நல்ல கொடுப்பினை வேண்டும் என்பார்கள்.
    அந்த நல்ல கொடுப்பினை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    அடுத்த உங்களின் தொடரைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் கோபாலகிருட்ணன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணா செல்வம் February 4, 2013 at 6:37 AM
      வீடு அமைவதற்கெல்லாம் நல்ல கொடுப்பினை வேண்டும் என்பார்கள். அந்த நல்ல கொடுப்பினை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள். அடுத்த உங்களின் தொடரைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் கோபாலகிருட்ணன் ஐயா.//

      வாருங்கள் மேடம். மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  46. நல்ல ஜன நடமாட்டம் உள்ள இடம். காய்கறி சந்தை, கடைத்தெரு, மலைக்கோட்டை என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக செல்லும்.அடுத்த முறை உங்கள் வீட்டு ஜன்னலில் ஒருமுறை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும் சார்....:)

    //திருச்சி மலைக்கோட்டை வாசலில் 3 ரூபாய்க்கு வாங்கிய சீப்பை இத்தனை வருஷமாகியும் அதனை தான் உபயோகித்து வருகிறேன்.அந்த சீப்பை பற்றி பகிர தனி பதிவே போடனும்.அந்த சீப்புக்கு 28 வயசு ஆச்சு.//

    ஆஹா! ஆச்சரியம். என்னிடமும் ஒரு சீப்பு உள்ளது. கோவையில் வாங்கியது. அதன் வயது 12. இப்பொழுதும் அதில் வாரினால் தான் எனக்கு த்ருப்தியாக இருக்கும்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி February 4, 2013 at 6:51 AM

      //நல்ல ஜன நடமாட்டம் உள்ள இடம். காய்கறி சந்தை, கடைத்தெரு, மலைக்கோட்டை என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக செல்லும்.//

      சென்ற முறை தாங்களும் வெங்கட்ஜியும் சேர்ந்து எங்கள் ஆத்துக்கு வந்தபோது, நாம் ஏ.ஸி. குளிர்காற்று வாங்க வேண்டி ஜன்னலை அடைத்து விட்டோம் என ஞாபகம்.

      இந்த முறை திரு. அப்பாதுரை சார் அவர்களுடன் தங்கள் கணவர் வெங்கட்ஜி வந்தபோது மின்தடையால் நாங்கள் ஏ.ஸி. போடமுடியவில்லை. அதனால் அந்த ஜன்னல்களையும் அடைக்கவில்லை.

      //அடுத்த முறை உங்கள் வீட்டு ஜன்னலில் ஒருமுறை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும் சார்....:)//

      அவசியமாக வாங்கோ. இப்போது ஸ்ரீரங்கம் வாசம் தானே. எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டு வந்து விடலாமே. அடுத்த முறை வந்தால் குழந்தை செள. ரோஷ்ணியுடன் வாங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.


      நீக்கு
  47. மிகவும் இரசித்தேன்! அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.February 4, 2013 at 7:29 AM
      மிகவும் இரசித்தேன்! அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்! நன்றி ஐயா!//

      மிக்க நன்றி சார். தொடர்ந்து வாங்கோ.

      நீக்கு
  48. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல உங்கள் வீட்டு ஜன்னலும் பதிவுக் கதை சொல்ல ஆரம்பித்து விட்டதே!என்ன தவம் செய்ததோ இந்த ஜன்னல்! இரண்டாவது பாகத்திற்கு ஒரு வாரம் காக்க வைத்துவிட்டதே!

    ஸ்ரீரங்கம் வர டிக்கட் புக் பண்ணியாச்சு!
    முதலில் உங்கள் அகத்திற்கு வந்து உலகப் புகழ் பெற்ற ஜன்னலைப் பார்த்துவிட்டு பிறகுதான் பெருமாளின் தரிசனமே!

    அருமை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan February 4, 2013 at 8:12 AM

      வாங்கோ வாங்கோ, வணக்கம் மேடம்.

      //கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல உங்கள் வீட்டு ஜன்னலும் பதிவுக் கதை சொல்ல ஆரம்பித்து விட்டதே!என்ன தவம் செய்ததோ இந்த ஜன்னல்! இரண்டாவது பாகத்திற்கு ஒரு வாரம் காக்க வைத்துவிட்டதே!//

      மிக்க நன்றி, மேடம்.

      //ஸ்ரீரங்கம் வர டிக்கட் புக் பண்ணியாச்சு!

      முதலில் உங்கள் அகத்திற்கு வந்து உலகப் புகழ் பெற்ற ஜன்னலைப் பார்த்துவிட்டு பிறகுதான் பெருமாளின் தரிசனமே!

      அருமை அருமை!//

      வாங்கோ அவசியம் வாங்கோ. பெருமாளை ஸேவித்து விட்டே வாங்கோ. பெருமாள் பிரஸாதத்துடன் வாங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  49. உங்கள் வீட்டு ஜன்னலுக்கு இவ்வளவு விசேஷம் இருக்கா ஐயா..ம்ம் கொடுத்து வச்சவங்க நீங்க சுவாமியெல்லாம் தரிசிக்க முடியுறமாதிரி ஜன்னல் என்றால் சும்மாவா...பவித்ராலயா அழகான பெயர்....அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.MenagaFebruary 4, 2013 at 8:32 AM
      உங்கள் வீட்டு ஜன்னலுக்கு இவ்வளவு விசேஷம் இருக்கா ஐயா..ம்ம் கொடுத்து வச்சவங்க நீங்க சுவாமியெல்லாம் தரிசிக்க முடியுறமாதிரி ஜன்னல் என்றால் சும்மாவா...பவித்ராலயா அழகான பெயர்....அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...//

      வாங்கோ, வணக்கம். ரொம்பவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  50. அருமையான அமைப்பில் உள்ளது உங்கள் வீடு,வீட்டு ஜன்னல் , அப்புறம் வீட்டின் எண் 5 ஆக அமைந்தது,வாஸ்து படி கிழக்கு,வடக்கு முகமாக அமைந்தது மிக்க அதிர்ஷ்டமானது..உங்கள் வீட்டு ஜன்னலும் வெளி உலகை காட்டும் கண்ணாடியாக இப்பொழுது உலகப் புகழ் பெற்று விட்டது.நல்ல பொழுது போக்கான ஜன்னல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி February 4, 2013 at 9:08 PM
      //அருமையான அமைப்பில் உள்ளது உங்கள் வீடு,வீட்டு ஜன்னல் , அப்புறம் வீட்டின் எண் 5 ஆக அமைந்தது, வாஸ்து படி கிழக்கு, வடக்கு முகமாக அமைந்தது மிக்க அதிர்ஷ்டமானது..//

      வாங்கோ சகோதரி, வணக்கம்.

      எங்கள் வீட்டு எண் 5 அல்ல.

      28 வீடுகளும் சேர்ந்த மொத்தக்கட்டடம் “சிவஷக்தி டவர்ஸ்” வடக்கு ஆண்டார் தெருவில் ஐந்தாம் எண்ணுடன் அமைந்துள்ளது.

      வீட்டு கதவு எண் 5 / 2 A.

      5 என்பது பில்டிங்கையும் 2 என்பது இரண்டாவது தளத்தையும் A என்பது நம் வீட்டையும் குறிக்கிறது.

      //உங்கள் வீட்டு ஜன்னலும் வெளி உலகை காட்டும் கண்ணாடியாக இப்பொழுது உலகப் புகழ் பெற்று விட்டது.நல்ல பொழுது போக்கான ஜன்னல்.//

      ;)))) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  51. வளர்க உங்களின் நட்பு வட்டம்...

    பதிவின் தொகுப்பு அருமை

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேக்கனா M. நிஜாம் February 5, 2013 at 12:03 AM
      வளர்க உங்களின் நட்பு வட்டம்...பதிவின் தொகுப்பு அருமை.
      தொடர வாழ்த்துகள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  52. பதில்கள்
    1. Avargal Unmaigal February 5, 2013 at 5:17 AM
      படித்தேன் ரசித்தேன்//

      வாங்கோ என் அன்புத்தம்பீ .... தங்கக்கம்பீ ! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  53. வை.கோ.சார்,
    இவ்ளவ் அழகா எழுதறேளே.. நம் ஆரண்ய நிவாஸத்துக்கு தாங்கள் வருகை தர வேணும்!

    அன்புடன்,

    ”ஆரண்யநிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 5, 2013 at 6:00 AM

      வை.கோ.சார்,
      இவ்ளவ் அழகா எழுதறேளே.. நம் ஆரண்ய நிவாஸத்துக்கு தாங்கள் வருகை தர வேணும்!

      அன்புடன்,

      ”ஆரண்யநிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி//

      வாங்கோ ஸ்வாமீ. வணக்கம். நான் உங்க ஆத்துக்கு ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறேன். [பழைய ஆத்துக்கு - டோல்கேட் அருகில்] ஆனால் இன்னும் ஆரண்ய நிவாஸத்துக்குத்தான் வரவில்லை. வந்துட்டாப்போச்சு.

      வந்தா என்ன தருவேள்?

      ஸ்நேகாவையும் நிர்மலாவையும் தவிர !

      இந்த இருவரையும் நினைத்தாலே புறப்பட்டு வர மிகவும் பயமாக இருக்குது ஸ்வாமீஈஈஈஈஈ. ;)))))

      நீக்கு
  54. 117 வது கருத்து சார். உங்க வீட்டு சன்னல் கதை கேட்டேன். மீண்டும் வந்து மிகுதியை ஞாயிறு பார்க்கிறேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi February 5, 2013 at 2:10 PM
      117 வது கருத்து சார். உங்க வீட்டு சன்னல் கதை கேட்டேன். மீண்டும் வந்து மிகுதியை ஞாயிறு பார்க்கிறேன். இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.//

      வாருங்கள் மேடம்,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  55. எனக்கு மிகவும் பிடித்த ஆண்டார் தெரு. அதில் ஓர் அடுக்கு மாடி.
    பெரிய ஜன்னல்கள். மலைக்கோட்டை வேறு தெரிகிறது. ஒரு புத்தகமும்
    விண்டோசீட்டும் கிடைத்தால் எனக்கும் ரிசர்வ் செய்து வையுங்கள் வைகோ;:)
    பத்மா கஃபே இன்னும் இருக்கா. வாழைக் காய் பஜ்ஜி சாப்பிட ஆசை வளருதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் February 5, 2013 at 8:15 PM

      வாங்கோ வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ’என்னே என் பாக்யம்’ என்று என்னை எண்ண வைத்து ஆச்சர்யப்படுத்துகிறது. ;)))))

      //எனக்கு மிகவும் பிடித்த ஆண்டார் தெரு. அதில் ஓர் அடுக்கு மாடி. பெரிய ஜன்னல்கள். மலைக்கோட்டை வேறு தெரிகிறது. ஒரு புத்தகமும் விண்டோசீட்டும் கிடைத்தால் எனக்கும் ரிசர்வ் செய்து வையுங்கள் வைகோ;:)//

      ஆஹா, உங்களுக்கு இல்லாத புத்தகங்களா? விண்டோ சீட்டா? எல்லாமே ஆல்ரெடி ரிசர்வ்வ்வ்வ்வ்டு.

      இதோ உங்களுக்காகவே நான் தேர்ந்தெடுத்து வைத்துள்ள புத்தங்கங்களின் அட்டைப்படங்களை மட்டும் இப்போதே பாருங்கோ:

      http://gopu1949.blogspot.in/2011/07/4.html

      http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

      //பத்மா கஃபே இன்னும் இருக்கா.//

      இப்போது இல்லை. ;((((( நினைத்தாலே ... அந்தக்கள்ளிச்சொட்டுக் காஃபியை நினைத்தாலே துக்கம் என் நெஞ்சை அடைக்கிறது.

      காஃபி ஃபில்டரில் துளியூண்டு அபீன் கலந்து இருக்கிறார்களாக்கும் என அப்போதெல்லாம் என் போன்ற காஃபி பிரியர்கள், 'பத்மா கஃபே’ யினரின் தொழில் ரகசியங்களைச் சொல்லி நானும் கேள்விப்பட்டதுண்டு.

      அவர்கள் கடையை மூடி, சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்தக்காஃபியின் மயக்கமும் போதையும் எனக்கு இன்னும் இருக்கிறது. நீங்களும் இப்போது ஞாபகப்படுத்தி விட்டீர்களே! ;(

      அதன் மாடியில் உள்ள ”ரஸிக ரஞ்சன ஸபா” மட்டுமே இன்றும் அப்படியே உள்ளது. மாதம் ஒரிரு நிகழ்ச்சிகளாவது நடைபெற்று வருகிறது.

      மற்றபடி அந்த வணிக வளாகமே அடியோடு மாறிப்போய் விட்டது. பல்வேறு சீமைச்சாராயக்கடைகள் இப்போது அங்கு உள்ளன ..... இன்றும் மக்களுக்குப் பஞ்சமில்லாமல், மயக்கமும் போதையும் தருவதற்கு. ;))))) .... (((((

      // வாழைக் காய் பஜ்ஜி சாப்பிட ஆசை வளருதே:)//

      வாங்கோ ... அவசியம் வாங்கோ.

      வாழைக்காய் மட்டுமல்ல, வெங்காயம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கொடமிளகாய் என அனைத்து பஜ்ஜிகளும், சூடாக, சுவையாக, உப்பலாக, பெருங்காய மணத்துடன் கும்மென்று, ஜம்மென்று வாங்கித்தருகிறேன், உங்களுக்காகவே ஸ்பெஷலாக.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வாருங்கோ, மேடம்.

      நீக்கு
  56. ரொம்ப நன்றி சார்,உங்கள் ஜன்னல் பதிவு மூலமாக என் மாணவ பருவத்தின் நினைவுகளை நியாபகப்படுத்தி விட்டிர்கள். நான் ஈ ஆர் ஸ்கூல்லில் படித்த காலத்தில் என்எஸ்பி ரோடிற்கு போவதற்கு நாங்கள் இந்த ஆண்டார் தெருவில் உள்ள எல்லா சந்துகளிலும் புகுந்து வருவோம். ரமா கபேக்கு ஒவ்வொரு வருடம் லீவுக்கு வரும்போதும் தவறாமல் நான் மாலை டிபன் சாப்பிட வருவதுண்டு. வானப்பட்டரை மூலையில் RC ஹோட்டல் இருந்தது இங்கு சாம்பார் மிக சுவையாக இருக்கும். அப்படியே நந்தி கோவில் தெருவில் வந்தால் சர்ச்க்கு எதிர்புறம் ஒரு பால்கோவா கடை இருக்கிறது. அங்கு பால்கோவா மிக அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா February 6, 2013 at 1:16 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //ரொம்ப நன்றி சார், உங்கள் ஜன்னல் பதிவு மூலமாக என் மாணவ பருவத்தின் நினைவுகளை நியாபகப்படுத்தி விட்டிர்கள். நான் ஈ ஆர் ஸ்கூல்லில் படித்த காலத்தில் என்எஸ்பி ரோடிற்கு போவதற்கு நாங்கள் இந்த ஆண்டார் தெருவில் உள்ள எல்லா சந்துகளிலும் புகுந்து வருவோம்.//

      இன்றும் நம் திருச்சியில் சந்துகளுக்குப் பஞ்சமே இல்லாமல் தான் உள்ளன.

      //ராமா கஃபேக்கு ஒவ்வொரு வருடம் லீவுக்கு வரும்போதும் தவறாமல் நான் மாலை டிபன் சாப்பிட வருவதுண்டு.//

      நம் ஊரைப்பற்றி எங்கிருந்தோ ஒருவர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //வாணப்பட்டரை மூலையில் RC ஹோட்டல் இருந்தது இங்கு சாம்பார் மிக சுவையாக இருக்கும்.//

      அப்படியா, இப்போது அதுபோல ஹோட்டல் எதுவும் இல்லை.

      வாணப்பட்டரை என்றாலே கடந்த 100 வருடப்பாரம்பர்யத்துடன் இன்றும் அமர்க்களமாக புகழ்பெற்று விளங்கும் “மாயவரம் லாட்ஜ்” மட்டுமே.

      வீட்டுச்சாப்பாடு போன்றே சாப்பாடு, டிஃபன், காஃபி முதலியன. [Homely Products].

      நாம் சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப்போய் அதற்கான இடத்தில் போட வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் இன்றும் உள்ளன.

      Meals + Tiffin Items Only for very Limited Hours and that too not so much of varieties. Just like our house, some specific items only being prepared / served. .
      //அப்படியே நந்தி கோவில் தெருவில் வந்தால் சர்ச்க்கு எதிர்புறம் ஒரு பால்கோவா கடை இருக்கிறது. அங்கு பால்கோவா மிக அருமையாக இருக்கும்.//

      ஆமாம். இது நானும் பார்த்திருக்கிறேன். வாங்கி சாப்பிட்டும் இருக்கிறேன். எப்போதும் போனாலும் மிகப்பெரிய இரும்புச்சட்டியில் பால் சுடச்சுட சுண்டச்சுண்ட காய்ந்து கொண்டே இருக்கும். பால்கோவாவை அவர் கிளறிக்கொண்டே இருப்பார்.

      இப்போது சமீபகாலமாக அந்தக்கடையைக்காணோம்.

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
    2. //வாணப்பட்டரை மூலையில் RC ஹோட்டல் இருந்தது இங்கு சாம்பார் மிக சுவையாக இருக்கும்.//

      //அப்படியா, இப்போது அதுபோல ஹோட்டல் எதுவும் இல்லை.//

      அஜீம்பாஷா அவர்கள், முன்பு இருந்த ”ராமன் காபி” தூள் கடைக்கு எதிரே இருந்த RTC ஹோட்டலைச் சொல்லுகிறார். இந்த ஹோட்டலை நடத்தியவர்கள்தான் இப்போது நியூ மதுரா சாப்பாடு ஹோட்டலை நடத்துகிறார்கள். மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது.





      நீக்கு
    3. தி.தமிழ் இளங்கோFebruary 7, 2013 at 8:12 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //வாணப்பட்டரை மூலையில் RC ஹோட்டல் இருந்தது இங்கு சாம்பார் மிக சுவையாக இருக்கும்.// - அஜீம்பாஷா

      **அப்படியா, இப்போது அதுபோல ஹோட்டல் எதுவும் இல்லை.** -VGK

      //அஜீம்பாஷா அவர்கள், முன்பு இருந்த ”ராமன் காபி” தூள் கடைக்கு எதிரே இருந்த RTC ஹோட்டலைச் சொல்லுகிறார். இந்த ஹோட்டலை நடத்தியவர்கள்தான் இப்போது நியூ மதுரா சாப்பாடு ஹோட்டலை நடத்துகிறார்கள். மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது.//

      ஆஹா, ஆமாம் ஐயா. அது R T C Lodge அல்லவா ஐயா. அதை நான் மறப்பேனா ஐயா. நான் மறந்தாலும் என் வயிறு மறக்குமா அதை. அருமையான இட்லி, தோசை, ஸ்பெஷல் தோசை, ரவா தோசை, மஸால் தோசை, வெங்காய ஊத்தப்பம், பூரி மஸால் என்று எவ்ளோ சாப்பிட்டிருக்கிறேன். எவ்ளோ பார்ஸல் வாங்கிப் போய் இருக்கிறேன். முதலாளி கோபால ஐயர். அவரே தான் அங்கு ஆர்.டீ. ஸி. லாட்ஜில் டிபனும், இங்கு மதுர ஹோட்டலில் சாப்பாடும் போட்டு வந்தார். எல்லாமே சாம்பார் சட்னி உள்பட சுவையாகத்தான் இருக்கும். அந்த ஆர்.டி.ஸி. லாட்ஜில் பார்ஸல் கட்டித்தர ஒரு ஐயங்கார் ஸ்வாமீ, ஒடிசலாக ஒல்லியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். படு ஸ்பீடாக பம்பரமாகச்சுற்றிச்சுற்றி வந்து வேலை பார்ப்பார்.

      இந்த Mr. அஜீம் பாஷா அவர்கள் RTC Lodge ஐப்போய் RC Lodge ஆக்கிவிட்டார். நந்தி கோயில் தெருவை, வாணப்பட்டரை தெரு என்று சொல்லிவிட்டார். அதனால் எனக்கு உடனே strike ஆகவில்லை. இவர் சொல்வது போல அந்த வாணப்பட்டரை மாரியம்மன் கோயில் பக்கமாக ஏதாவது ஒரு சிறிய ஹோட்டல் இருந்திருக்குமோ என நினைத்து விட்டேன்.

      தாங்கள் கரெக்ட்டாக இதை இப்போது தெளியப்படுத்தி விட்டீர்கள். அது மட்டுமல்லாது ராமன்ஸ் காஃபிப்பொடி கடைக்கு எதிர்புறம் என்றதும் எனக்கு மேலும் சந்தோஷமாகி விட்டது.

      ராமன்ஸ் காஃபிப்பொடிக்கடை ஐயரும் சிவப்பாக இருப்பார், குடுமி வைத்திருப்பார். சட்டை ஏதும் அணியாமல் வெறும் வேஷ்டி + துண்டு + மூக்குக்கண்ணாடியுடன் மட்டுமே பெரும்பாலும் காட்சி தருவார்.

      அவர் முதுகினில் கூட ஒரு பெரிய பேரீச்சம்பழம் ஒட்டியது போல, ஒன்று பருவோ அல்லது பாலுனியோ தொங்கும்.

      எல்லாம் அந்தக்கால பசுமையான நினைவலைகள், ஐயா.

      இப்போது இது பற்றியெல்லாம் யாருக்கு என்ன தெரியும்?

      ராம்ன்ஸ் காஃபித்தூள் கடை இருந்த இடத்தில் இப்போது ஒரு பழ ஜூஸ் கடை. அதுபோல ஆர்.டீ.ஸி. லாட்ஜ் இருந்த இடத்தில் இப்போது ஒரு நவீன சூப்பர் மார்க்கெட் போல ஒரு மளிகை + ஜெனெரல் மெர்சண்ட் கடை. நாளுக்கு நாள் எல்லாமே மாறி வருகின்றன.

      மிக்க நன்றி சார். அன்புடன் VGK

      நீக்கு
  57. மிக்க மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rathnavel Natarajan February 6, 2013 at 3:48 PM
      மிக்க மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றி ஐயா.//

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  58. சுஜாதாவின் லாண்டரி கணக்கு போல உங்கள் ஜன்னலும் முக்கிய பதிவாகி விட்டது..

    எதையும் சுவாரசியமாய் சொல்லும் உங்கள் மேதா விலாசத்திற்கு ஜன்னல், கதவு எதுவும் தடை இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் February 8, 2013 at 8:36 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //சுஜாதாவின் லாண்டரி கணக்கு போல உங்கள் ஜன்னலும் முக்கிய பதிவாகி விட்டது..

      எதையும் சுவாரசியமாய் சொல்லும் உங்கள் மேதா விலாசத்திற்கு ஜன்னல், கதவு எதுவும் தடை இல்லை.//

      என் எழுத்துலக மானஸீக குருநாதரின் அன்பான வருகையும், அழகான உற்சாகம் ஊட்டிடும் கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  59. அச்சச்சோ நான் 2 அல்ல 3 லேட்டு:). வலைப்பக்கம் எட்டிப்பார்ப்பது முடியாமல் போயிருந்தது சில நாட்கள்.. இன்றுதான் வழமைக்குத் திரும்பினேன் கண்டேன்ன் ஜன்னலை:) ஐ மீன் இப்பதிவை. கோபு அண்ணன் சும்மா சொல்லப்பூடா சூப்பர் இடம் உங்கள் வீடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //athira February 8, 2013 at 3:03 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //அச்சச்சோ நான் 2 அல்ல 3 லேட்டு:).//

      எனக்கு இது புரியவில்லையே. பதிவிட்டு ஆறு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீங்கோ. ‘2 அல்ல 3 லேட்டு;)’ ன்னு சொல்றீங்கோ.

      உங்கள் கமெண்ட் எண்ணிக்கை: 134 எனக்காட்டுகிறது பாருங்கோ.
      சரி, எப்படியோ வந்து சேர்ந்தீர்களே, அதுவரை சந்தோஷம் தான். வாங்கோ! ;)

      //வலைப்பக்கம் எட்டிப்பார்ப்பது முடியாமல் போயிருந்தது சில நாட்கள்.. இன்றுதான் வழமைக்குத் திரும்பினேன் கண்டேன்ன் ஜன்னலை:) ஐ மீன் இப்பதிவை.//

      உங்களுடன் உங்களின் நெருங்கிய தோழிகளான அஞ்சு, இளமதி, அம்முலு ஆகிய மூவரையும் எங்கோ கூட்டிச்சென்று, கடத்திச்சென்று விட்டீர்களோ?

      அவர்களையும் இந்த என் பதிவு பக்கம் காணோம். அதனால் மட்டுமே கேட்டேன்.

      இந்த நாலு பேரில் நீங்க தான் பஸ்ஸ்ஸ்ட்டூஊஊஊஊ, நன்றி.

      //கோபு அண்ணன் சும்மா சொல்லப்பூடா சூப்பர் இடம் உங்கள் வீடு.//

      சும்மா சொல்லப்பூடா ...... ;) உங்கள் வருகையால் இப்போ என் இடம் [வீடு] சும்மா .... அதிருது ..... ஜொலிக்குதூஊஊஊஊஊ ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க ந்ன்றி, அதிராஆஆஆஆ! ;)

      நீக்கு
  60. கோபு அண்ணன்.. சகல வசதிகளும் அமைந்த இடத்திலதான் இருக்கிறீங்க. அதிலயும் அந்த ரோட்டோர வடை பஜ்ஜிக்கடை பார்க்கவே ஆசையா இருக்கே. வீட்டின் பெயரும் அழகு வீடும் அழகு.

    வரசித்தி விநாயகரை தினமும் தரிசிப்பீங்களோ? வெளி நாட்டில் இருந்து உப்படியான இடங்களைப் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கு.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 8, 2013 at 3:06 PM

      வாங்கோ அதிரா, தங்களின் மீண்டும் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //கோபு அண்ணன்.. சகல வசதிகளும் அமைந்த இடத்திலதான் இருக்கிறீங்க.//

      தாங்கள் சொன்னால் சரியே, சந்தோஷம் அதிரா.

      //அதிலயும் அந்த ரோட்டோர வடை பஜ்ஜிக்கடை பார்க்கவே ஆசையா இருக்கே.//

      இந்த ரோட்டோர பஜ்ஜிக்கடையை வைத்தே நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

      அதுவே சூடாக, சுவையாக, உ ப் ப லா க, பெருங்காய மணத்துடன் கும்முனு ஜிம்மினு இருக்குமாக்கும். படிச்சுப்பாருங்கோ ...
      ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html

      // வீட்டின் பெயரும் அழகு, வீடும் அழகு.//

      தங்களின் கருத்துக்கள் அதைவிட அழகாக்கும். ஹுக்க்க்கும். ! ;)

      என்ன இருந்தாலும் அந்த Orange Color Bag போல அழகு வருமா?. யாரும் டச் பண்ணக்கூடாதுன்னு, தள்ளியே நிக்கோணும், பேக்கிலே கைவைக்கப்பூடான்னு சொல்லிப்பூட்டீங்களே !!

      [பிறகு அதில் கரெக்‌ஷன் வேறு கொடுத்திருக்கீங்கோ.- உங்களிடம் நிறைய நான் பேச வேண்டியுள்ளதூஊஊஊ]

      >>>>>>>>>>

      நீக்கு
    2. கோபு >>>>>> அதிரா [தொடர்ச்சி]

      //வரசித்தி விநாயகரை தினமும் தரிசிப்பீங்களோ?//

      எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் ஆங்காங்கே இதுபோன்ற பிள்ளையார் கோயிலுக்குப் பஞ்சமே இல்லை, அதிரா.

      எங்கள் தெருவில் மட்டுமே இது போல நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன.

      உச்சிப்பிள்ளையாரில் ஆரம்பித்து, திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளில் மட்டுமே மொத்தம் 12 பிள்ளையார் கோயில்கள் அமைந்துள்ளன.

      அவை எல்லாவற்றையும் பற்றி படங்களுடன் ஓர் பதிவு கொடுத்துள்ளேன். தயவுசெய்து பாருங்கோ:

      தலைப்பு: “ஏழைப்பிள்ளையார்”

      இணைப்பு இதோ:.

      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html

      நிறைய படங்களுடன் கூடிய மேலும் சில ஆன்மிகப்பதிவுகள்:

      தலைப்பு:
      “காது கொடுத்துக்கேட்டேன் .... ஆஹா குவா குவா சப்தம்”

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html

      தலைப்பு:
      “காவேரிக்கரை இருக்கு ..... கரை மேலே _______ இருக்கு”

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

      எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கருத்துச்சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அதிரா.

      >>>>>>>>>

      நீக்கு
    3. கோபு >>>>>> அதிரா [தொடர்ச்சி]

      பிள்ளையாரின் தம்பி முருகனுக்கு இரண்டு முறைகள் திருமணம் நடந்துள்ள போதும், அண்ணனாகிய பிள்ளையாருக்கு
      இன்னும் ஒரு முறை கூட கல்யாணம் ஆகாமல் கட்டை பிரும்மச்சாரியாகவே இருந்து வருகிறார்.

      அவருக்கு அவரின் தாய் ’பார்வதி தேவி’ போல அழகான பெண் தான் மனைவியாக வர வேண்டுமாம்.

      அதனால் மட்டுமே இன்று வரை, எல்லா ஊரின், எல்லா மூலை முடுக்குகளிலும் கோயில் கொண்டு, வரும் பெண்களை எல்லாம் ‘சைட்’ அடித்து வருவதாகவும் சொல்லுகிறாரகள்.

      யானைத்தலையும் பானை வயிறும் கொண்ட இவரிடம் எந்தப்பெண் தான் வந்து மாட்டுவாள்?

      ஸித்தி, புத்தி என்று இரண்டு கற்பனை மனைவிகள் இவருக்கு உண்டு என்றும் சொல்லுவார்கள்.

      அது சரி நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      [சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டு கடைசியில் இப்படி உங்களின் கொப்பி வலதை நானும் உபயோகித்து
      வருகிறேனாக்கும். ]

      // வெளி நாட்டில் இருந்து உப்படியான இடங்களைப் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கு.//

      உடனே புறப்பட்டு வாங்கோ. ALWAYS WELCOME அதிரா! ;)))))

      இதன் அடுத்த பகுதி இன்று நள்ளிரவுக்குள் வெளியிடப்படும். அதையும் மறக்காமல் படிக்க வாங்கோ.

      //வாழ்க வளமுடன்.//

      மிக்க நன்றி அதிரா.

      பிரியமுள்ள கோபு

      ooooo

      நீக்கு
  61. ஓமோம் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் .. மீ எஸ்கேப்ப்ப்ப் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 9, 2013 at 8:56 AM

      வாங்கோ அதிரா, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறதூஊஊஊஊ

      //ஓமோம் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் .. மீ எஸ்கேப்ப்ப்ப் :)//

      இருங்கோ இருங்கோ .... மீ எஸ்கேப்ப்ப்ப் ஆகாதீங்கோ. அப்புறம் மீக்க்க்க்க்கு ரொம்ப போரட்டிக்குமாக்கும்.

      நீங்கள் எல்லோரும் ’ஆம்’ என்பதை ’ஓம்’ என்றும் , ’ஆமாம்’ என்பதை ’ஓமோம்’ என்றும் சொல்வது எனக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.

      கிளிகொஞ்சும் வார்த்தைகளாகவே கதைக்கிறீங்கோ! ;)

      ’ஓம்’ என்பது எங்களுக்கெல்லாம் பிரணவ மந்திரம்.

      ஓம் முருகா, ஓம் நமச்சிவாயா, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், ஓம் ஸ்ரீ குருப்யோ நம: .... என்றெல்லாம் சொல்லுவார்கள் அல்லவோ!

      ஓமம், ஓமோம் என்பதெல்லாம் இங்கே கஷாயத்திற்கு பயன் படுத்தப்படும் பொருட்கள்.

      ஓம வாட்டர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறு குழந்தைகளுக்கு ‘உட்வேட்ஸ் க்ரைப் வாட்டர்’ என்று தருவார்களே, அதற்கான மூலப்பொருள் தான் ’ஓமம்’.

      எளிதில் ஜீரணம் செய்து, வயிற்று வலியை நீக்கிடும்

      சுக்கு, சித்தரத்தை, கடுக்காய், அதிமதுரம், மாசிக்காய், ஓமம், மிளகு, ஜீரகம் முதலியன மருத்துவ குணங்கள் உள்ளவை.

      இங்கு இவையெல்லாம் மளிகைக்கடைகளிலும், நாட்டு மருந்துக்கடைகளிலும் சுலபமாகக் கிடைக்கின்றன.

      நேரில் வருகை தந்து வாங்கிட்டுப்போங்க, அதிராஆஆஆஆ !

      நீக்கு
  62. அருமை! நல்ல பதிவு. நல்ல ஒரு சூழலில் வீடு அமையக் கிடைத்தது உங்கள் அதிர்ஷ்டம்தான். எல்லாவகையான வசதிகளும் இருக்கிறதே. அருமை.

    அடுத்து உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகள் என்ன சொல்லுமோ பார்ப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றிகள் வைகோ ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி February 9, 2013 at 9:20 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமை! நல்ல பதிவு. நல்ல ஒரு சூழலில் வீடு அமையக் கிடைத்தது உங்கள் அதிர்ஷ்டம்தான். எல்லாவகையான வசதிகளும் இருக்கிறதே. அருமை. //

      மிக்க நன்றி!

      //அடுத்து உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகள் என்ன சொல்லுமோ பார்ப்போம்.//

      அடுத்த பகுதியும் வெளியாகி விட்டது. நேரம் இருந்தால் பாருங்கோ.

      //பகிர்வுக்கு மிக்க நன்றிகள் வைகோ ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  63. பவித்ராலயா !!! ஆஹா வீட்டுக்கு பொருத்தமான அழகான பெயர் ..
    போங்கோ கோபு அண்ணா உங்க வீட்டருகே இத்தனை உணவகங்களா !!! இங்கே தலை வலி கால் வலின்னாலும் வீட்டில் தான் சமைக்கணும் இப்படிஹோம்லியான உணவகம் அருகில் இல்லை ..பஜ்ஜி போண்டா படங்களை வேறு காட்டி ..இப்பெண்ணை சுற்றி பஜ்ஜி பொரிக்கும் வாசனை வருகிறார்போல இருக்கு :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 9, 2013 at 3:10 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //பவித்ராலயா !!! ஆஹா வீட்டுக்கு பொருத்தமான அழகான பெயர் ..//

      சந்தோஷம், மிக்க நன்றி.

      //போங்கோ கோபு அண்ணா உங்க வீட்டருகே இத்தனை உணவகங்களா !!!//

      என்னை அங்கெல்லாம் இப்போது ’போங்கோ’ன்னு சொல்லாதீங்கோ. வீடு இருக்கும் போது அங்கெல்லாம் எதற்கு? எப்போதாவது தான் போவோமாக்கும்.

      //இங்கே தலை வலி கால் வலின்னாலும் வீட்டில் தான் சமைக்கணும்.//

      அடடா, இதைக் கேட்கவே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கு.

      //இப்படிஹோம்லியான உணவகம் அருகில் இல்லை//

      சிங்கப்பூரில் உள்ள என் உறவினர்களும் நண்பர்களும் கூட இதையே தான் சொல்லுகிறார்கள். ரொம்ப தூரம் போனால் தான் ஏதோ கிடைக்குமாம்.

      //பஜ்ஜி போண்டா படங்களை வேறு காட்டி ..இப்பெண்ணை சுற்றி பஜ்ஜி பொரிக்கும் வாசனை வருகிறார்போல இருக்கு :))//

      இன்றைக்கே இப்போதே பஜ்ஜி பொரித்து சாப்பிடுங்கோ! என்னையும் நினைத்துக்கொண்டு, ஒரு டஜன் கூடவே சாப்பிடுங்கோ!!

      வாழைக்காய் பஜ்ஜி - 4, உருளைக்கிழங்கு பஜ்ஜி - 4, பெரிய வெங்காய பஜ்ஜி - 4 ஆக மொத்தம் 12 என் பங்குக்காக இருக்கட்டும். ;)))))

      இங்கே எங்கள் வீட்டுப்பக்கமே ஒரு கடையில் திடீர் பஜ்ஜி மாவு, திடீர் ரவா தோசை மாவு, உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், வடாம், மோர் மிளகாய் என்று ஏதேதோ விற்கிறார்கள்.

      அந்த பஜ்ஜி மாவில் உப்பு காரம் பெருங்காயம் எல்லாம் போட்டிருக்கிறார்கள்.

      அப்படியே தண்ணீரில் கரைத்து விட்டு, வெட்டிய காய்கறிகளைத் தோய்த்து, சூடாகக் காயும் எண்ணெயில் போட வேண்டியதும், வெந்ததும் சுடச்சுட சாப்பிட வெண்டியதும் மட்டுமே நம் வேலை. எவ்ளோ ஈஸி பாருங்கோ.

      பஜ்ஜி மாவு வாங்கி ஏர் பார்ஸலில் அனுப்பட்டுமா? ;)))))

      நிஜமாத்தான் சொல்றேன் ..... மெயில் கொடுங்கோ, போதும். உடனே அங்கு வந்து சேரும். ;)

      நீக்கு
  64. ஜன்னல் பால்கனியில் இருந்து எனக்கு ஒரு தரிசனம் தெரிகிறது ...நீங்க அடுத்த பதிவில் ஞாயிறு சொல்கிறேன் என்று எழுதியிருப்பதால் ..நானும் பொறுமையாக சஸ்பென்ஸ் உடையாம காத்திருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 9, 2013 at 3:14 PM
      //ஜன்னல் பால்கனியில் இருந்து எனக்கு ஒரு தரிசனம் தெரிகிறது ... நீங்க அடுத்த பதிவில் ஞாயிறு சொல்கிறேன் என்று எழுதியிருப்பதால் .. நானும் பொறுமையாக சஸ்பென்ஸ் உடையாம காத்திருக்கேன்//

      நன்றி, நன்றி ...... நிர்மலா.

      எதையும் இப்போ போட்டு உடைச்சிடாதீங்கோ ப்ளீஸ்ஸ்ஸ். ;)

      நீக்கு
  65. வீடும் அதனை சுற்றியுள்ள இடமும் மிக குளுமையான காற்றோட்டமான இடத்தில் அமைந்திருக்கு என்பது படங்களை காணும்போதே தெரிகிறது ....அடுத்த இந்திய விசிட்டில் வருவேன் ...வடை பஜ்ஜியுடன் அடையும் வேணும் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 9, 2013 at 3:16 PM
      //வீடும் அதனை சுற்றியுள்ள இடமும் மிக குளுமையான காற்றோட்டமான இடத்தில் அமைந்திருக்கு என்பது படங்களை காணும்போதே தெரிகிறது .... அடுத்த இந்திய விசிட்டில் வருவேன் ...வடை பஜ்ஜியுடன் அடையும் வேணும் :))//

      ரொம்பவும் சந்தோஷம் நிர்மலா. அவசியமாக வாங்கோ. வடை, பஜ்ஜி, அடை எல்லாமே உண்டு. கவலையே வேண்டாம் உங்களுக்கு இல்லாததா என்ன ?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  66. ரஸமான அனுபவம் காத்திருக்குனு புரியுது. ஜன்னல் வழி திருச்சியைக் கண்டு ரசிக்க + உண்டு ரசிக்க இந்த மாதம் முடிவதற்குள் அவசியம் நான் வருகிறேன் வை.கோ. ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால கணேஷ் February 9, 2013 at 6:51 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ரஸமான அனுபவம் காத்திருக்குனு புரியுது. ஜன்னல் வழி திருச்சியைக் கண்டு ரசிக்க + உண்டு ரசிக்க இந்த மாதம் முடிவதற்குள் அவசியம் நான் வருகிறேன் வை.கோ. ஸார்.//

      அவசியம் வாங்கோ சார். நேரில் சந்திப்போம். மகிழ்ச்சி. ;)

      நீக்கு
  67. ஆஹா எதிரிலேயே பஜ்ஜி கடை, ஹோட்டல் ம்ம் பிராமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Jaleela Kamal February 9, 2013 at 9:46 PM
      ஆஹா எதிரிலேயே பஜ்ஜி கடை, ஹோட்டல் ம்ம் பிராமாதம்.//

      வாங்கோ, வணக்கம். சந்தோஷம், ;)))))

      அந்தக்கடையில் சுடச்சுட, நல்ல உப்பலான பஜ்ஜிகள் பெருங்காய மணத்துடன் கிடைக்கும். விலையும் அதிகம் இல்லை. 5 பஜ்ஜிகள் 10 ரூபாய் தான். பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை கடை இருக்கும். ஆனால் திடீரென்று சில நாட்கள் மட்டும் கடை போட மாட்டார்கள்.

      நீக்கு
  68. ஆஹா..அந்த ராமன்ஸ் கடை மாமாவின் முதுகில் இருக்கும் அந்த பேரீச்சம் பழ சைஸ் பாலுண்ணியைக் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களா ? பயங்கரமான
    ஞாபக சக்தி சார் உங்களுக்கு !
    அது சரி பத்மா போய் இருபத்தைந்து வருடமாகி விட்டதா ? காலம் தான் என்ன வேகமாய் ஓடுகிறது ? ஆதிகுடியில் பட்டணம் பக்கோடா சாப்பிட்டு பத்மாவிற்கு ஒரு கும்பல் காபிக்காக படை எடுக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன் அந்த காலத்தில் !
    OPERATION RESEARCH என்று ஒரு சப்ஜெக்ட் AICWA FINAL லில் வரும். சின்னக் கடைதெரு குப்பு சாமி சாரிடம் ட்யூஷன் வருவோம் ..அதெல்லாம் மறந்து விட்டது ..பக்கத்தில் உள்ள சங்கர விலாஸில் சூடாய் ரவா ரோஸ்ட்
    சாப்பிட்டது மட்டும் இன்னமும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 9, 2013 at 10:35 PM
      //ஆஹா..அந்த ராமன்ஸ் கடை மாமாவின் முதுகில் இருக்கும் அந்த பேரீச்சம் பழ சைஸ் பாலுண்ணியைக் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களா ? பயங்கரமான ஞாபக சக்தி சார் உங்களுக்கு !//

      சார், அவரைத்தாங்களும் பார்த்திருக்கிறீர்களா? அப்போ நான் சொன்ன உதாரணம் சரி தானே?

      என்னால் அவரை மறக்க முடியாது சார். தினமும் 50 கிராம் வீதம் அவரிடம் தான் காப்பித்தூள் வாங்கி வருவேன். காசு தரமாட்டேன். கணக்கு எழுதிக்கொள்வார். பிறகு என் அப்பா மொத்தமாக அவ்வப்போது செட்டில் செய்வார்.

      அதே கடையில் சிவப்பாக சுருட்டை முடியுடன், காக்கி அரை டிராயரும், பனியனும் போட்டு, கழுத்தில் த்ங்கத்தில் மைனர் செயின் போட்டுக்கொண்டு, ஜம்பு என்ற பெயரில் ஒருவர் இருப்பார். அவரே எலெக்ட்ரீஷியன், அவரே காப்பிப்பொடி மிஷினை இயக்குதல், வறுத்தல், அரைத்தல் என ஆல்-இன் -ஆல் அழகிரியாக இருந்தவர்.

      அவர் மனைவி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தவர். அந்தப்பெண் எங்கள் ஸ்டோரில் தான் குடி இருந்தாள் அவருக்கு, அதாவது அந்த ஜம்புவுக்கு மனைவி ஆவதற்கு முன்பு.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> திரு. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

      //அது சரி பத்மா போய் இருபத்தைந்து வருடமாகி விட்டதா ? காலம் தான் என்ன வேகமாய் ஓடுகிறது ? ஆதிகுடியில் பட்டணம் பக்கோடா சாப்பிட்டு பத்மாவிற்கு ஒரு கும்பல் காபிக்காக படை எடுக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன் அந்த காலத்தில் ! //

      பத்மா லாட்ஜ் போய் விளையாட்டுப்போல 25 வருஷம் ஆச்சு சார். ஆதிகுடி ஹோட்டலும் அந்தக்காலத்திலே ஃபேமஸ் ஆக இருந்தது தான் என்று பிறர் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன். எதோ 2-3 தடவை நானும் போய் அங்கு ஏதோ டிஃபன் காஃபி சாப்பிட்டுள்ளேன். இப்போதும் கூட அதே இடத்தில் தான் இயங்கி வருகிறதே, நிர்வாகம் மாறியிருக்குமோ என்னவோ!

      //OPERATION RESEARCH என்று ஒரு சப்ஜெக்ட் AICWA FINAL லில் வரும். சின்னக் கடைதெரு குப்பு சாமி சாரிடம் ட்யூஷன் வருவோம் ..அதெல்லாம் மறந்து விட்டது ..//

      அதைப்பற்றி மீண்டும் ரிசர்ச் செய்தால் உங்களுக்கு ஒருவேளை மறந்து விட்டது மீண்டும் ஞாபகத்திற்கு வரலாம். ;)

      //பக்கத்தில் உள்ள சங்கர விலாஸில் சூடாய் ரவா ரோஸ்ட்
      சாப்பிட்டது மட்டும் இன்னமும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது !//

      சங்கரவிலாஸ் என்னாலும் மறக்கவே முடியாது சார். அந்த முதலாளி போடும் சப்தத்தில் [சரளமாக அவருக்கு வாயில் எல்லா வார்த்தைகளும் வரும்] சாப்பிட வருபவனெல்லாம் அரண்டு மிரண்டு போவான்.

      உள்ளே சில பாட்டியம்மாக்கள் எப்போது பார்த்தாலும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்துக் கொண்டே இருப்பார்கள்.

      அந்த சரளவாய்க்காரரை மனதில் வைத்தே நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். இன்னும் அதை நான் பதிவாக வெளியிடவில்லை.

      தலைப்பு: ”நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்”.

      நீங்கள் ஒருவேளை அதை என் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்திருக்கலாம். ;)))))

      மீண்டும் மீண்டும் மூன்றாவது முறை வருகைக்கு மகிழ்ச்சி, சார்.

      நீக்கு
  69. ஆகா!!! உங்க வீட்டு ஜன்னல் கம்பி பேசும் அழகில் மயங்கிவிட்டோம்.
    அடுத்த இந்திய பயணம் கிட்டினால் தர்சிக்க வருகின்றோம்.

    இனிதாகப் பகிர்ந்துள்ளீர்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி February 10, 2013 at 7:45 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆகா!!! உங்க வீட்டு ஜன்னல் கம்பி பேசும் அழகில் மயங்கிவிட்டோம். //

      மிக்க நன்றி, சந்தோஷம்.

      //அடுத்த இந்திய பயணம் கிட்டினால் தர்சிக்க வருகின்றோம்.//

      அவசியம் வாங்கோ!

      //இனிதாகப் பகிர்ந்துள்ளீர்கள் பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  70. aha ha haa ... adada! arumayana padhivu gopu sir. your narration made me feel as if I am at your place and watching everything in front of my eyes

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira February 20, 2013 at 8:18 PM

      WELCOME TO YOU MIRA !

      //aha ha haa ... adada! arumayana padhivu gopu sir. your narration made me feel as if I am at your place and watching everything in front of my eyes

      ஆஹாஹ்ஹாஹ்ஹா! அடடா. அருமையான பதிவு கோபு சார்.

      நானே நேரில் உங்கள் இடத்தில் இருந்து, அனைத்தையும் நேரில் என் கண்களால் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது, தங்களின் வர்ணனைகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மீரா. ;)))))

      நீக்கு
  71. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:28 AM

      //உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.//

      மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  72. 'அய்யம்பேட்டை வேலை' என்றால் என்ன என்பது நீங்கள் எழுதியுள்ளதில் இருந்து இப்போதான் தெரிந்து கொண்டேன்!!

    பதிலளிநீக்கு
  73. Radha Balu November 9, 2014 at 7:45 PM

    வாங்கோ .... ராதாபாலு மேடம், வணக்கம்.

    //'அய்யம்பேட்டை வேலை' என்றால் என்ன என்பது நீங்கள் எழுதியுள்ளதில் இருந்து இப்போதான் தெரிந்து கொண்டேன்!!//

    ஹைய்ய்ய்ய்ய்ய்யோ !

    நீங்களும் தெரிஞ்சுக்கிட்டீங்களா !!!!!!
    போச்சுடா :)))))))))))))))))))))

    அன்பான தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். சந்தோஷம். நன்றி.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  74. ஜன்னல்கள் பல கதைகள் சொல்லுகின்றனவே! அருமையான விவரணம்....அட்ரசும் குறித்துக் கொண்டாயிற்று. அட்ரஸ் என்ன அதான் ரொம்பவே ஈசியாக இருக்கிறதே....வாய்ப்புக் கிடைத்து திருச்சி வரும் போது நிச்சயமாகத் தங்கள் வீட்டிற்கு வருவோம், தங்களுடனும், கம்பிகளின் கதைகள் கேட்கவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜன்னல்கள் பல கதைகள் சொல்லுகின்றனவே! அருமையான விவரணம்....அட்ரசும் குறித்துக் கொண்டாயிற்று. அட்ரஸ் என்ன அதான் ரொம்பவே ஈசியாக இருக்கிறதே....வாய்ப்புக் கிடைத்து திருச்சி வரும் போது நிச்சயமாகத் தங்கள் வீட்டிற்கு வருவோம், தங்களுடனும், கம்பிகளின் கதைகள் கேட்கவும்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆதரவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

      திருச்சி வந்தால் கட்டாயம் வாங்கோ. தயவுசெய்து, தாங்கள் வரும்முன்பு மெயில் மூலம், எனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ. VGK

      நீக்கு
  75. அக்டோபர் ஸெகண்ட்வீக திருச்சில அக்குபங்சர் டாக்டர்ஸ் கேம்ப் மூணு நாளைக்கு இருக்கு என்னையும்இன்வைட் பண்ணியிருக்கா. இப்ப போட்டோவில் பார்க்கும் உங்க அழகானவீட்டை நேரில் பாக்க வந்துடுவேனாக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 14, 2015 at 6:23 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அக்டோபர் ஸெகண்ட்வீக் திருச்சியிலே அக்குபங்சர் டாக்டர்ஸ் கேம்ப் மூணு நாளைக்கு இருக்கு. என்னையும் இன்வைட் பண்ணியிருக்கா. இப்போ போட்டோவில் பார்க்கும் உங்க அழகானவீட்டை நேரில் பார்க்க வந்துடுவேனாக்கும்//

      ஆஹா, மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது. அவசியம் வாங்கோ. வரும்முன் தயவுசெய்து தேதி, நேரம் முதலியனவற்றை முன்கூட்டியே மெயில் மூலம் எனக்குச் சொல்லிவிட்டு வாங்கோ .... அப்போதுதான் என்னால் V V I P விருந்தாளியாகியத் தங்களை நன்கு கவனித்து அனுப்பி வைக்க முடியும். :)

      நீக்கு
  76. ஆஹா இதா உங்க வூடா. சூப்பராகீதே. பக்கத்தால சாப்பாட்டு கடேலேந்து அல்லாமும் கீது. ஒன்னொன்னியும் சொல்லின அளகு ஒடனே உங்கூட்டுக்கு வரணும்போலகீதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 11:21 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஆஹா இதா உங்க வூடா. சூப்பராகீதே. பக்கத்தால சாப்பாட்டு கடேலேந்து அல்லாமும் கீது. ஒன்னொன்னியும் சொல்லின அளகு ஒடனே உங்கூட்டுக்கு வரணும்போலகீதே.//

      திருச்சி பக்கம் வேறு ஏதேனும் வேலையாகத் தாங்கள் வரும்போது கட்டாயம் என் வீட்டுக்கும் வாங்கோ. ஆனால் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ.

      வரும்போது தங்கள் அம்மியையும், அண்ணனையும் கூட்டிக்கிட்டு வாங்கோ.

      என் வீட்டுக்குப்பக்கத்திலேயே உள்ள சாப்பாட்டுக் கடைகளில் உங்கள் எல்லோருக்கும் வயிறு நிரம்ப மிகப்பெரிய விருந்தே கொடுத்துவிடுகிறேன். :)

      நீக்கு
  77. உங்கள் வீடு பற்றி சொல்லி இருப்தை படிக்கும் போதே ஜன்னலோர சீட்டுக்கு நானும் இப்பவே ரிசர்வ் பண்ணினாதான் இடம் கிடைக்கும்போல இருக்கே. வீடு அமைந்திருக்கும் இடம் வீட்டின் அமைப்பு பெயர் ஜன்னலில் இருந்தே கண்டுகளிக்க ஸ்வாமி ஊர்வலங்கள் சுற்றி இருக்கும் பஜ்ஜி சாப்பாட்டுக்கடைகள் ஒன்று விடாம சொல்லி எங்க ஆசையை கிளப்பிட்டீங்களே. ஏற்கனவே நிறைய பேரு லைனில் நிக்கறாங்க. நானும் கடைசி ஆளா வந்து சேர்ந்துக்கறேன்.

    பதிலளிநீக்கு
  78. வாத்யாரே அருமையான இடம்...இதுபோல ஹோட்டல் சாப்புடுற ஐட்டங்களா பாத்து பாத்தே நான் குண்டாகிடுவேன்போல இருக்கே...

    பதிலளிநீக்கு
  79. Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.

    என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன்.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம்.

    திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே.

    பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள்
    உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    பதிலளிநீக்கு